காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை

நிச்சயம் காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை

கலைஞர் ஆட்சியில் முதல் சிக்கல் வந்தது, அவர் போராட தொடங்கியபொழுது ராமசந்திரன் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்றே பேசிகொண்டிருந்தார்

வழக்கு தொடர்ந்தார் கலைஞர் அத்தோடு மிசாவும் வந்தது தேர்தலும் வந்தது

அடுத்து வந்தார் ராமசந்திரன், காவேரி கரையில் சூட்டிங் எடுத்த நினைவுகள் அவரை விடவில்லை, காவேரி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை

மாறாக உன்னை விடமாட்டேன் என லதாவுடன் ஒரு படம் எடுக்க முனைந்தார், மொரார்ஜி தேசாய் கண்டிப்பு பேரில் அது நடக்கவில்லை

பின் ஜெயலலிதா காவல், கட்சி காவல் , திரையுலகில் எவனும் அடுத்து வந்துவிட கூடாது எனும் காவலிலே அவர் காலமும் முடிந்தது

முல்லைபெரியாறு நீர்மட்டத்தை கேரளாவிற்காக 132 அடியாக குறைக்க ஒப்ப்புகொண்டார், ஆனாலும் தமிழகம் அவரை கொண்டாடிகொண்டே இருந்தது

கன்னடம் மிக சுதாரித்தது இக்காலத்தில்தான்

அடுத்து வந்தார் ஜெயா மன்னார்குடி குடும்பத்து வாரிசுகளை தத்தெடுக்கவும், திருமணம் செய்து வைக்கவுமே அவருக்கு நேரமில்லை

நிச்சயம் அடுத்து வந்த 15 ஆண்டுகள் தமிழக பிடி டெல்லியில் இருந்தது

தஞ்சை பண்ணையார் மூப்பனாரின் தாமாகா டெல்லி ஆட்சியினை நிர்ணயித்த காலத்தில் அவர் கூட அமைதிகாத்ததுதான் மகா சோகம்

15 ஆண்டுகளாக எல்லா அமைச்சரவையிலும் திமுக இருந்தது, ஆனால் காவேரியினை கொண்டுவர அது முயற்சி எடுக்கவில்லை , நினைத்திருந்தால் நீர்மேலாண்மை துறையினை வாங்கி காவேரியினை மீட்டிருக்கலாம்

ஆனால் முரசொலிமாறனுக்கு பின் டெல்லி தயாநிதி மாறனுக்கா, கனிமொழிக்கா என்ற உள்வீட்டு தகறாறில் அவர்கள் காவேரியினை மற்ந்தாயிற்று

காவேரி கொண்டுவருவார்கள் என பார்த்தால் அவர்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கோடு வந்தார்கள்

இப்பொழுது சீறும் ராமதாஸ் கூட அன்று பெட்ரோலிய துறை, சுகாதார துறை என கொழுத்த துறைகளையே கேட்டு மிரட்டினார்

ஆக இவர்கள் எல்லாம் கன்னடத்தில் சொத்துகுவிப்பு வழக்கு தொடுத்தார்கள் அல்லது வாய்தாவிற்கு அலைந்தார்கள், இதனால் கன்னட அரசின் சில அட்ஜெஸ்ட்மென்டுகளை செய்தார்கள்

இதுதான் மாபெரும் தவறு, நடந்த சம்பவங்களில் மோசமான சம்பவம் இதுதான்

இதனை வைத்து துருப்பு சீட்டாக ஆடியது கன்னடம்

ஆக காவேரியினை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அதனை விட்டு தன்னலம் பார்ததவர்கள்தான் இன்று குதிக்கின்றார்கள்

இன்றும் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்தாலோ அல்லது டெல்லியில் கூட்டணி ஆட்சி தொடர்ந்து தமிழக கட்சிகள் பங்கு பெற்றிருந்தாலோ நிச்சயம் ஒரு குரலும் வராது

இன்று டெல்லியில் பங்குமில்லை கன்னடத்தில் வழக்குமில்லை அதனால் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

அவர்கள் யாருக்கும் யாருக்கும் வெட்கமில்லை, ஆனால் காவேரி சிக்கல் கடந்துவந்த பாதையினை நோக்குபவர்களுக்கு பெரும் வருத்தம் வருகின்றது

எல்லோரும் இப்பொழுது நடத்துவது அப்பட்டமான நாடகம், சொல்லபோனால் காவேரிக்காக பேசும் தகுதி இவர்களில் யாருக்குமில்லை