காம்ரேட்ஸ், ஒரே ஒரு கேள்வி

அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை; மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

கடமையினை செய், பலனை எதிர்பாரதே என்ற தத்துவத்தின் 100% வடிவமாக வாழ்ந்தவர் கலாம், அதுதான் கீதையில் சொல்லபட்டிருக்கின்றது

இந்த பரந்த உலகில் குரான் வைக்க எத்தனையோ நாடு உண்டு , பைபிள் வைக்கவும் நாடு உண்டு , இந்த ஞான நூல் கீதையினை வைக்க இந்த நாட்டைவிட்டால் இடமில்லை

அதுவும் ஏவுகனை போல அழிவு ஆயுதம் செய்பவர் கீதையின் சாரமின்றி எப்படி மனதை தேற்றிகொள்ள முடியும்?

அவர் கீதைப்படி வாழ்ந்துவிட்டார் வைத்தாயிற்று,

இந்த கம்யூனிஸ்டுகளுக்கு என்ன? அவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்லவா? அங்கு என்ன நூல் வைத்தால் இவர்களுக்கென்ன‌

இத்தேசத்தில் எத்தனையோ நல்ல கம்யூனிஸ்ட்டுகள் இருந்தார்கள், தமிழகத்தின் ஜீவா வரை இருந்தார்கள். அவர்கள் நினைவிடத்தில் எல்லாம் மார்க்ஸின் மூலதனம் முதல் இன்னும் எத்தனையோ பொதுவுடமை நூல்களை வைத்தால் யார் தடுக்கபோகின்றார்கள்

காம்ரேட்ஸ், ஒரே ஒரு கேள்வி

பொதுவுடமை தத்துவத்தின் ஒரு வடிவம் தான் ரேஷன் கடை, அதனை அரசு மூடுகின்றது. இதில் உங்கள் போராட்டம் என்ன?

பொதுவுடமை சீனா இந்தியாவுடன் மல்லுகட்டுகின்றது, மாவோயிஸ்ட் எனும் பொதுவுடமைவாதிகள் இந்திய அமைதிக்கு சவால் விடுகின்றனர், அதில் உங்கள் கருத்து என்ன?

எங்கு போராடவேண்டுமோ அங்கு செல்லமாட்டார்கள், எங்கு பிரச்சினை இல்லையோ அங்கு சென்று பிரச்சினையினை உருவாக்குவார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்