கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் கொஞ்சம் ஓவர்தான்
கார்ட்டூனிஸ்ட் பாலா அந்த கார்ட்டூனை எல்லை மீறித்தான் வரைந்திருந்தார், அது கொஞ்சம் ஓவர்தான்
ஆனால் சில எச்சரிக்கைகளை கொடுத்துவிட்டு கைது செய்திருக்கலாம்.
கலெக்டர், எஸ்பி, முதல்வரை கேலிசித்திரம் மூலம் அசிங்கபடுத்திவிட்டார் என அவரை கைது செய்தார்களாம்
சைமன் கோஷ்டிகள் இந்த தேசத்தை பேசி பேசி செய்யும் அவமானம் கொஞ்சமல்ல, சிலர் சீனாவே வந்து தமிழ்தேசியம் அமைத்து தா என்றளவில் பகிரங்கமாக பேசிகொண்டிருந்தார்கள்
கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஒரு நீதி, இவர்களுக்கு ஒரு நீதியா?
ஒரு கலெக்டர், ஒரு எஸ்பி ஒரு முதல்வரை விட இத்தேசம் தரம் தாழ்ந்ததா?
இதனை எல்லாம் யார் கேட்பார்கள்?
மிக இழிவாக அண்ணாவினை விமர்சித்து ஒரு சுவரில் எழுதியிருந்தார்கள், விஷயம் அண்ணாவிற்கு சென்றது
இரவில் படிக்க வசதியாக அதிலொரு விளக்கினை மாட்டுங்கள் என சொல்லிவிட்டு சென்றார் அண்ணா
அந்த அண்ணாவின் பெயரை கொண்ட இந்த அதிமுகவிற்கு ஒரு விமர்சனத்தை பொறுக்க முடியவில்லை
எத்தனையோ இழிசொல்லையும் , கேலி சித்திரங்களையும், பெரும் பழிகளையும் சில இடங்களில் ரத்த காயங்களையும் கண்ட பின்னும், இவ்வளவுதானே உங்களால் செய்ய முடியும், இதற்கு மேல் இந்த கருணாநிதியினை உங்களால் என்ன செய்துவிட முடியும்? என கெத்தாக நின்றாரே அந்த கலைஞர் நினைவுக்கு வருகின்றார்