கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்திருக்கும் அந்த இந்திராணி யார்?

ஆங்கிலேயன் காலத்திலே சொந்தமாக தொழில் ஆலை வைத்திருந்தார்கள் சிதம்பரம் முன்னோர்கள்

கானாடு காத்தான் செட்டியார் குடும்பம் என்பது, அண்ணாமலை செட்டியார், ராமசாமி செட்டியார், முத்தையா செட்டியார் குடும்பத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல‌

அவர்களின் சொத்துக்களை பட்டியல் போட்டால் அவை பெரும்பான்மை வம்சாவழி சொத்துக்களாகவே இருக்குமன்றி அரசியலில் சேர்த்த சொத்துக்கள் ஆகா

மன்னார்குடி குடும்பத்து சொத்துக்களின் பட்டியல் மகா ஆச்சரியமே அன்றி சிதம்பரம் சொத்துக்கள் அல்ல‌

இந்தியா சுதந்திரம் வாங்குமுன்பே உலகெல்லாம் வியாபாரம் செய்து எல்லா மூலையிலும் சொத்துக்களை குவித்த குடும்பம் அது.

அவர்களிடம் உலகளாவில் சொத்துக்கள் இல்லை என்றால்தான் ஆச்சரியமே தவிர, இருப்பதில் என்ன ஆச்சரியம் வேண்டி இருக்கின்றது?

அக்குடும்பம் என்ன உடன்பிறவா சகோதரி மூலம் சம்பாதித்ததா? இல்லை தாத்தாவின் அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்டு சம்பாதித்ததா?

மணல் திருடி, கல் திருடி இன்னும் என்னவெல்லாம் கடத்தியா சம்பாதித்தது? நிச்சயம் இல்லை

இவ்விஷயத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்திருக்கும் அந்த இந்திராணி யார்?

கணவர் இருவரை பிரிந்து இன்னொருவனுடன் வாழும்பொழுது தன் சொந்த மகளையே கொன்ற கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்

ஒரு கொலைகாரி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலே அவரை கைது செய்தார்களாம்

நல்ல வேளையாக இந்திராணி மகளை கொன்றது கார்த்தி என்ற கொலைவழக்கில் கைது செய்யவில்லை அதுவரை சிதம்பரத்திற்கு நல்ல நேரம்

புகார் கொடுக்க கூட ஒரு நல்ல கவுரவமான பெண் கிடைக்கவில்லையா அவர்களுக்கு? அந்தோ பரிதாபம்