கார்த்தி சிதம்பரம் கைது …

என்னதான் படித்திருந்தாலும் , அரசியல் அனுபவமிருந்தாலும் நடப்பு யதார்த்தம் என்பது சிதம்பரம் குடும்பத்திற்கு தெரியவில்லை போலிருக்கின்றது

குறி வைத்த உடனே லண்டனுக்கோ, பாரிஸ்க்கோ, சிங்கப்பூருக்கோ சென்றிருக்க வேண்டாமா?

மல்லையாவும், லலித்மோடியும், நீரவ்மோடியும் வந்தபின் சீனியாரிட்டிபடி நான் கடைசியாக வருகின்றேன், என் உயிருக்கு ஆபத்து என ஒரு அறிக்கை விட்டிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?

தப்பு கணக்கு போட்டிருக்கின்றார் கார்த்தி சிதம்பரம். யாரை பிடித்தால் எங்கு வலிக்கும் என்பது அறியா கூட்டமா? மத்தியில் இருக்கின்றது

கனிமொழி போன்ற அரசியல் வாரிசுகள் நீதிமன்றத்தில் இருந்து விடுதலையானது போல கார்த்தி சிதம்பரமும் வரட்டும்

ஆனால் போலி என்கவுண்டர், நீதிபதி லோயா வழக்க்கின் குற்றவாளிகள் எல்லாம் கைது செய்யபடுவார்களா? என்பது பற்றி எல்லாம் யாரும் கேட்க கூடாது.