கார்த்தி சிதம்பரம் கைது

கார்த்தி சிதம்பரம் கைது செய்யபட்டிருக்கின்றார். எப்பொழுதுமே காங்கிரஸ் தன் மீது சாட்டபடும் ஊழல் வழக்குகளை கண்டு ஓடி ஓளியாது, நேர்மையாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுக்கும்

போபர்ஸ் ஊழல் என வந்தபொழுது ராஜிவ் பதவி இழந்து, அடுத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க போராடியபொழுதுதான் கொல்லபட்டார்

தன் கூட்டணி கட்சிகள் ஊழல் செய்தன என்ற குற்றசாட்டு வந்தபொழுது கனிமொழியினை, ராசாவினை கூட அது விட்டுவைக்கவில்லை

அப்படிபட்ட காங்கிரசில் இப்பொழுது கார்த்தி சிறைக்கே சென்றிருக்கின்றார். நிச்சயம் நிரபராதியாக வெளிவருவார்

மல்லையா, நீரவ் போல அவர் ஒன்றும் ஓடிவிடவில்லை

இதில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது. அகில இந்திய அளவில் பல காங்கிரஸ்காரர்கள் இது உள்நோக்கம் கொண்டது என கத்திகொண்டிருக்க தமிழகத்தில் காங்கிரசார் மகா அமைதி

ஏனென்றால் கோஷ்டி தகராறு அப்படி, சிதம்பரம் கோஷ்டியினை பல கோஷ்டிகளுக்கு பிடிக்காததால் பலர் அமைதி சிலர் சிரிப்பு

குஷ்பு மட்டும் டிவிட்டரில் கண்டித்திருந்தார். அவரின் தலமைபண்பு அப்படி

மற்ற எந்த காங்கிரசாரும் ஒருவார்த்தையும் பேசியதாக தெரியவில்லை. எப்படிபட்ட மகா ஒற்றுமை?

விரைவில் சத்திய மூர்த்திபவன் கூட செங்கல் செங்கலாக பிரியலாம்.