கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகின்றது : செய்தி
“ரஜினி சார், நானும் உங்கள வச்சி அரசியல்ல இயக்கத்தான் கால்ஷீட் கேட்டுட்டே இருக்கேன்.
எல்லோர் இயக்கத்திலும் நடிக்கிறீங்க, என் இயக்கத்தில் மட்டும் நடிக்கவே வரமாட்டேன்றீங்க ரஜினி சார்
எவ்வளவு ஸ்கிரிப்டு, சீன் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? ஒரே ஒரு கால்ஷீட் கொடுங்க சார், தயாரிப்பாளர் அமித்ஷா கூட ரெடியா இருக்கார் சார்.”

எத்தனை படங்கள் வந்தாலும் ரஜினிக்கு பாஷா என்பது நிச்சயம் மாஸ் படம், கிட்டதட்ட 25 வருடம் முடிந்தாலும் படம் இன்றும் கிளாசிக் ரகம்
அப்படிபட்ட ஹிட் எல்லாம் கொடுத்த ரஜினி காலாவில் கந்தல் கோலத்தில் நின்றதெல்லாம் விதிவகை
இது டிவி சானல்கள் நிறைந்துள்ள காலம், அதனால் காலா படத்து பாடல்கள் ஆங்காங்கு ஓடுகின்றன , இல்லாவிட்டால் எச்.ராசா ஸ்டைலில் காலா என்றொரு படம் நான் நடிக்கவே இல்லை என ரஜினி சொல்ல வசதியாக இருக்கும்
ரஜினி என்ன? ராமசந்திரனே முன்பு தன் தோல்வி படமான காதல் வாகனம் பற்றி கேட்டபொழுது அப்படி ஒரு படம் நான் நடிக்கவே இல்லை என சொல்லிவிட்டார்
இதோ பாஷா படத்தில் ரஜினியினை கட்டி வைக்கும் பொழுது “இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா” என்ற வரிகள் பாடலாக ஒலிக்கின்றது
இந்த வரி எங்கு வந்திருக்க வேண்டும்?
காலா படம் முடியும் பொழுது “பீசு பீசா கிழிக்கும் போதும், இயேசு போல பொறுமை பாரு, பச்சை ரத்தம் ஒழுகும் போது பச்ச குழந்த சிரிப்ப பாரு…
இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாருடா..” என ஒலிக்கவிட்டு
பா.ரஞ்சித் பிலிம் என முடித்திருந்தால் மிகவும் பொறுத்தமாக இருந்திருக்கும்.