கார்ப்பரேட் ஜெகத்ரட்சகன்
இலங்கையில் அம்பாந்தோட்டை எனும் நகரில் அமையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திட்ட மதிப்பீடு 28000 கோடி. இதில் 70% கிட்டத்தட்ட 18000 கோடி ரூபாய் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட சில்வர் பார்க் இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை புரிகின்றதா இனி படியுங்கள்
இந்த சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்கள் யாரென்றால் இந்த ஜெகத்ரட்சகனும் அவரின் குடும்பத்தாரும்
இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் இலங்கைக்கு மோடி, ரஜினி போன்றோர் செல்ல கூடாது என கொடிபிடித்த திருமா எங்கே போனார்?
அவர் திமுக கூட்டணியில் இருப்பதால் அமைதியா?
சரி இன்னும் பலரை காணவே இல்லை குறிப்பாக இலங்கை அணி வீரர்கள் சென்னையில் ஐ பி எல் விளையாடக்கூடாது, கலை நிகழ்ச்சிக்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக்கூடாது என கொடிபிடித்தர்களை காணவே இல்லை
ரஜினி வரக்கூடாத இலங்கைக்கு ஜெகத்ரட்சகன் வரலாமா என கிண்டலடிப்பது யார் தெரியுமா?
நெஞ்சை பிடித்து கொள்ளுங்கள் ராஜபக்சே மகன், ஆம் அவன் பகிரங்கமாக கேட்கின்றார்
அங்கிள் சைமனிடமும் இதற்கு பதிலில்லை
அம்பானி , அதானி எல்லாம் கார்பரேட் என்றால் ஜெகத் ரட்சகன் யார்?
பொதுவாக திமுகவில் தோழரே என அழைப்பார்கள், காம்ரேட் எனும் கம்யூனிச சொல்லின் தழுவல் அது
ஆக திமுக காம்ரேட் எல்லாம் கார்ப்பரேட் ஆகும் நேரம் இது
கார்பரேட் ஜெகத்ரட்சகன் போல இனி நிறைய காம்ரேடுகள் கார்பரேட்டுகளாக வரலாம்