காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது

என்னமும் சொல்லுங்கள், நான் ஆர்.எஸ்.எஸ் ஏஜண்ட் என்று கூட திட்டுங்கள் உண்மை இதுதான்

எல்லா ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. அது இந்துமத ஆலயம் என்றல்ல கிறிஸ்தவ ஆலயமோ அல்லது ஜெப கூட்டங்களோ மசூதிகளோ எல்லாம் எப்பொழுதும் தமிழகத்தில் ஹவுஸ் புல்

இந்துக்களின் அடையாளமான திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை கூட்டம் இல்லா ஆலயம் என எதை காட்ட முடியும்?

எல்லா இந்துக்களின் வீடுகளும் காலையில் திருபள்ளி எழுச்சி பாடலோடே விடிகின்றது, சடங்கு சம்ப்ரதாயம் விரதம் கொண்டாட்டம் என்றே நகர்கின்றது

இக்காலத்தில் பெரியார், கடவுள்மறுப்பு, பிராமண எதிர்ப்பு என சொல்லி அரசியல் செய்வீர்களாயின் அது ஏகே 47 துப்பாக்கி படைக்கு முன் வேல் பிடித்து நிற்பது போலவும் முன் ஏவுகனை படைமுன் பீரங்கியோடு நிற்பது போலவுமே ஆகும்

இன்று தெரியாவிட்டாலுன் இன்னொரு காலத்தில் நிச்சயம் தெரியும்

காலத்திற்கேற்ப மாற்றங்களை திராவிட அரசியலில் செய்யுங்கள், செய்தால் சீனா கம்யூனிசத்தில் சில மாற்றங்களை செய்து உலகில் நிலைபெற்றிருப்பது போல நிலைபெறலாம்

இல்லையேல் சோவியத் யூனியன் போல் கடும் வீழ்ச்சி அடைவீர்கள்

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது என சொன்னவன் தமிழன் “வழுவல்ல கால வகையினாலே” என அன்றே சொன்னவன் தமிழன்

சொல்வதை சொல்லியாயிற்று, இனி அவர்கள்பாடு அவர்கள் கட்சிபாடு