காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது என்பது இதுதான்

அன்றே ஜெயலலிதா காஷ்மீர் பற்றி அப்படி பேசினார் இப்படி பேசினார் என ஏக குரல்கள்

உண்மையில் அவர் பேசினார் ஆனால் எழுதியது சோ ராமசாமி குரலோ ஜெயாவின் குரல்

அந்த 1980களில் கலைஞரிடம் தோற்றுகொண்டிருந்த ராமசந்திரனுக்கு மக்கள் ஆதரவு குறிப்பாக தாய்குலங்கள் ஆதரவினை தக்க வைக்க ஜெயா தேவைபட்டார்

நிச்சயம் அந்த இடம் சரோஜாதேவிக்கானது ஆனால் அவர் மறுத்தபட்சத்தில் ஜெயாவினை இழுத்துவந்தார் ராமசந்திரன்

வந்த நாளில் இருந்து ஆர்.எம் வீரப்பன் கோஷ்டிக்கும் ஜெயாவுக்கும் பொருந்தவில்லை கட்சிக்கும் முட்டல் மோதல்

தேர்ந்த தந்திரசாலியான ராமசந்திரன் ஜெயாவினை டெல்லிக்கு அனுப்பினார்

ஏற்கனவே சோவின் நாடகங்களில் நடித்திருந்த ஜெயா சோ ராமசாமியினை தன் குருநாதராகவே வணங்கினார். சோவும் இந்திரா மேல் இருந்த கடுப்பில் மிக அட்டகாசமான குறிப்புகளை எழுதி கொடுத்தார்

இளவயது ஜெயலலிதா நுனிநாக்கு ஆங்கிலத்தில் காஷ்மீர், ஈழம்,வடகிழக்கு மாநிலங்கள் என கடும் கேள்விகளை கேட்க ரசிக்க ஆரம்பித்தார் இந்திரா

பின் இந்திராவின் தனிபட்ட விருந்தில் ஜெயா பங்குகொள்ளும் அளவு சென்றது நிலை

இங்கே ராமசந்திரனுக்கு கடும் சந்தேகம் வந்தது, அது அவரின் பிறவி குணம். திமுகவினை தன்னை வைத்து பிளந்தது போல ஜெயாவினை வைத்து அதிமுகவில் ஏதோ செய்ய திட்டமிடுகின்றது டெல்லி என பதறினார்

பதற்றம் இருக்கும்பொழுதே இந்திரா கொல்லபட்டார்

அடுத்து வந்த ராஜிவ் அன்னை வழியில் ஜெயாவினை கையாண்டார், உடலுக்கு முடியாத நீங்கள் ஜெயாவினை ஏன் துணைமுதல்வர் ஆக்க கூடாது என்ற அளவு ராஜிவின் கட்டளை இருந்தது

வலம்புரி ஜாண் போன்றோரை எல்லாம் டெல்லியில் பின் தள்ளி தனி முகமாக வலம் வந்தார் ஜெயா, வலம்புரி ஜாண் வைகோ போல ஆகியிருந்தார்

தன்னை ராஜிவ் கட்டுபடுத்துவதை உணர்ந்த ராமசந்திரனுக்கு காலம் பிரபாகரன் வடிவில் வந்தது

பிரபாகரனுக்கும் ராஜிவுக்கும் இருந்த முறுகலை அட்டகாசமாக கையாண்டார் ராமசந்திரன். நீ ஜெயாவினை வளர்த்துவிடுவதை நிறுத்து, நான் பிரபாகரனை கைவிடுகின்றேன் மீறி நீர் ஜெயாவினை வளர்த்தால் நாம் அவனை கையில் எடுப்பேன்

இந்த நிலைப்பாட்டில் இருந்தபொழுதே ராமசந்திரனும் சென்றாயிற்று

அதன்பின் ராஜிவ் உயிர்கொடுத்து ஜெயாவினை முதல்வராகினார், பின்பு ஜெயா மிகவும் மாறிவிட்டார்

பிராமண முகமாக ஜெயாவினை உருவாக்கி கலைஞருக்கு எதிராக நிறுத்த சோ முயன்றார் ஆனால் நடராஜன் உள்ளே புகுந்து ஜெயாவினை திராவிட அரசியல்வாதிகளில் ஒருவராக நிறுத்தினார் அதற்கு தேவர்சாதி ஆதரவு உட்பட ஏக காரணம்

தேசியமும் மதமும் திராவிடமும் கலந்த ஒரு பிம்பமாக இருந்தார் ஜெயா

ஆக சோ ராமசாமி திமுகவுக்கு எதிராக பார்த்து பார்த்து உருவாக்கிய ஜெயா எனும் இரும்பு கோட்டையினை நேரம் பார்த்து அடித்து சென்று அழிச்சாட்டியம் செய்தது மன்னார்குடி கோஷ்டி

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது என்பது இதுதான்