காலம் நல்லபடியாக மாறிகொண்டிருக்கின்றது

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில்கூட தமிழகத்தில் நாத்திகவாதம் அதிகமில்லை, ஒருபக்கம் சுதந்திர கணல் இன்னொரு பக்கம் சைவ சித்தாந்த கழகம், மிஷனரிகளுக்கு கடும் சவால் என காலம் ஓரளவு சரியாக இருந்தது

அன்று வெள்ளையைன் ஆட்சியில் மிஷனரிகளின் கை ஓங்கி இருந்தது ரகசியமல்ல என்றாலும் இந்துக்களின் வாதமும் சரியாக இருந்தது

சுதந்திர இந்தியாவில்தான் பெரும் குழப்பங்கள் ஆரம்பித்தன , காங்கிரஸ் திமுக எனும் இரு இந்து அபிமானமில்லா கட்சிகளின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது

1950களில் திருப்பதி சென்ற நடிகனை கேவலபடுத்துவார்கள், இந்துவேடங்களில் நடிக்கமாட்டேன் எனும் நடிகன் “புரட்சி நடிகன்” என அழைக்கபட்டார்

என்.எஸ்.கே போன்றோரின் “நந்தனார் கிந்தனார்” போன்ற அப்பட்டமான இந்து வெறுப்பு நாடகங்களும், எம் ஆர் ரதாவின் “ராமாயணம் கீமாயணம்” போன்றவையெல்லாம் இந்துக்கள் மனதை கடுமையாக நோகடித்தன‌

ஆனால் இந்துக்களின் எதிர்ப்பு குரல் ஊடகங்களாலும், கட்சி அரசியலாலும் பலமாக நசுக்கபட்டன‌

அக்காலத்தில் இந்து துவேஷம் பேசிய எல்லா நடிகனும் கம்பீரமாக , பெருமையாக புரட்சியாளனாக வலம் வந்தான், பக்திமான் என்றாலும் எம்ஜி ராமசந்திரனே திருநீறு பூசவும் இந்து கோவில் செல்லவும் அஞ்சினார்

அப்படியான காலமும் இருந்தது, கருணாநிதியின் காலம் அப்படித்தான் இருந்தது, அவர் மேடைகளில் எதுவும் பேசலாம் என்னமும் பேசலாம் இல்லையென்றால் அவரே பேசுவார்

இன்று ஒரு நடிகன் இந்து வெறுப்பு பேசினால் மேடையில் கதற வைக்கபடுகின்றான், “நானும் மீனாட்சி பக்தன்” என மண்டியிடுகின்றான்

சக நடிகர்கள் மவுனம் காக்கின்றார்களே தவிர யாருக்கும் இந்துக்களை எதிர்க்க தைரியமில்லை, இந்துக்களை பகைத்தால் இனியும் தாக்குபிடிக்க முடியாது எனும் நிலை வந்திருப்பதை எல்லோரும் உணர்கின்றார்கள்

ஆக காலம் நல்லபடியாக மாறிகொண்டிருக்கின்றது என்பது மட்டும் தெரிகின்றது