காலா கதை களம் மும்பையாம்

Image may contain: 1 person, beard and text

காலா கதை களம் மும்பையாம்

ஆனால் பாடல் முழுக்க என் நிலம், என் உரிமை, போராடு, கிளம்பு என வருகின்றது

அங்கு என்ன நில மீட்பு, என்ன உரிமை போராட்டம்?

அங்குள்ள எல்லா தமிழரும் இங்கிருந்து பிழைக்க சென்ற கூட்டமே, ஓரளவு நல்ல நிலையிலும் பலர் இருக்கின்றார்கள்

அவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் அவர்களுக்கு கிடைத்தது, கிடைத்துகொண்டிருக்கின்றது

முன்பு வரதராஜபெருமாள் ஹாஜி மஸ்தானுடன் ரவுடியிசம் செய்தபொழுது தாக்கரே தமிழரே வெளியேறுங்கள் என மிரட்டினார்

வரதராஜன் சென்னை திரும்பிய பின் அக்குரலும் இல்லை

ஓரளவு அமைதியுடன் மும்பை தமிழர் வாழ்கின்றனர்

இதில் என்ன நிலம் மீட்பு, என்ன போராட்டம்? என்ன அடக்குமுறை கொடுமை?

நிச்சயம் மராட்டிய அரசுக்கும் மும்பை மக்களுக்க்கும் எரிச்சலும் கோபமும் மூட்ட கூடிய விஷயம் இது

பாடல் வரியினை மாராட்டி இந்தியில் மொழிபெயர்த்து சிவசேனாவிடம் காட்டினாலே முடிந்தது விஷயம்

“யார் மண்ணில் யாருக்கு நிலம்?” என பொங்கினால் காலா படப்பெட்டி நிச்சயம் எரிந்து கரிகட்டையாக கிடக்கும்

சில சிக்கல்களை இப்படம் மும்பையில் ஏற்படுத்தாமல் ஓயாது

ஆனாலும் தனக்கு இருமுறை சொந்த சூனியம் வைத்த ரஜினியின் நிலை பரிதாபம்

ரஞ்சித் என்பவர் எல்லாவற்றையும் குறுகிய மனப்பான்மையில் பார்க்கும் ஒரு மனப்பான்மை கொண்டவர்

சினிமாவிற்குள்ள ரசனையோ இல்லை வேறு அழகான விஷயங்களோ அவருக்கு வராது, சுத்தமாக சினிமாவிற்கு லாயக்கில்லா நபர்

சம்பந்தமே இல்லாமல் வலுகட்டயமாக கதைகளில் புரட்சி, மண்ணாங்கட்டி என சொல்லி கதையினையே குழப்பி வெறுக்க வைப்பவர் அவர்

அவர் மனம் முழுக்க ஒருவகை இருட்டு

அது படத்திலும் தெரியும், பாடலில் முன் கூட்டியே தெரிகின்றது

ஏம்பா ரஞ்சித், புரட்சி வெங்காயம் இருக்கட்டும், படத்தில் உமது சம்பளம் என்ன? படத்தின் உண்மை பட்ஜெட் என்ன என பகிரங்கமாக சொல்லமுடியுமா?

முடியாதல்லவா? பின் என்ன புரட்சி?

மேடையில் தென்னக நதி இணைவது கனவு, அதெல்லாம் நடந்தபின் நான் செத்தாலும் பரவாயில்லை என சொன்னார் ரஜினி

அப்படியே சாகும் முன் தான் வாங்கிய உண்மை சம்பளம் என்ன? எவ்வளவு கருப்பு? என உண்மையினை சொல்லிவிடுவாரா என தமிழகத்தில் சில குரல்கள் வருகின்றன‌

அது அவர் செத்தாலும் வெளிவராது