காலா காலா காலா…..
காலா படத்தினை முதலில் பார்த்திருப்பது ரஜினியின் குருட்டு ரசிகர்கள்
அவர்கள் பாபா படத்தையே பார்த்துவிட்டு இப்படித்தான் சொன்னார்கள்,
அதன் பின் ராமதாஸ் கும்பல் படபெட்டியினை தூக்கிகொண்டு ஓடியபொழுது பார்த்தவர்கள் சோடா கொடுத்து அதனை கடலில் எறியும்படி உற்சாகபடுத்தினார்கள்
அவ்வளவு கொடுமையான படம் அது
அப்படியாக காலா படத்தை முதலில் பார்த்துவிட்ட ரஜினி கும்பல்கள் புரளி கிளப்ப, பலத்த சர்ச்சை மெதுவாக வருகின்றது
ராமரை வம்புக்கு இழுத்தாரா ரஜினி? சிவசேனையினை சாடினாரா? பாஜகவினை பதம் பார்த்தாரா? என்றெல்லாம் பேச்சு வருகின்றது
ராமர் என்பது இங்கு தொடக்கூடாத விஷயம், தொட்டிருந்தால் ரஜினிக்கு பாபர் மசூதி நிலைதான்
ரஞ்சித் சிவசேனையினை பிஜேபியினை வச்சு செஞ்சுட்டார் : ரஞ்சித் பாசறைகள் உற்சாகம்
இததானடா நாங்களும் சொன்னோம், அவன் மும்பை தமிழர் கதையில் மராட்டியரை வம்புக்கு இழுப்பான்.அது ரஜினிக்கு ஆபத்து
சிவசேனையினை மிக சீண்டியிருக்கின்றாராம் ரஞ்சித்தர்
இதோ இழுத்துட்டான்ல, இனி பாருங்க ரஜினிக்கு வரும் சோதனை எப்படின்னு….
இனி சிவசேனா ரஜினியினை வச்சி செய்யும் பாருங்கடா…
ஒரு சிலர் காலா பார்க்க போகின்றோம் என ஆர்பரித்தார்கள், டிக்கெட்டை எல்லாம் பதிவேற்றினார்கள்.
சிலர் பார்த்துவிட்டோம் என்றார்கள்
ஆனால் ஒரு பயலும் படம் எப்படி இருக்கின்றது என சொல்ல காணோம், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை போலிருக்கின்றது.
அந்த சிவகுமார் என்ன சொல்லி தொலைத்தார்?
இந்தியாவிற்கு ராக்கெட் தேவையா என்ற மகா அறிவார்ந்த சிந்தனையினை சொன்ன அவர், இப்பொழுது என்ன சொல்லி வம்பிழுத்தார்?
நடிகனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் மாபெரும் ஞானி போல கொண்டாடினால் இப்படித்தான் ஆகும்?
எவனோ முக ஸ்டாலின் வீட்டை கொளுத்துவோம் என சொல்லி இருக்கின்றான் , ஆனால் ஒரு சத்தமும் இல்லை
ஸ்டாலினுக்கும் கலைஞருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்
சொன்னவன் யார் என தெரியவில்லை, அவனுக்கு விரைவில் அமைச்சர் ஜெயக்குமார் அல்லது தமிழிசை சொல்லபோவது இதுதான்
“தம்பி, கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்தலமா?”