காலா நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்….

ரஜினியினை நிலை குலைய வைக்க வேண்டும், அவர் அரசியல் பக்கமே வராமல் அடித்துவிரட்ட வேண்டும் என்றொரு கும்பல் கிளம்பி இருப்பது தெரிகின்றது

கன்னடத்தில் காலா படத்திற்கு வரவேற்பு இருந்தால்தான் ஆபத்து, கன்னடர்கள் எதிர்ப்பது நல்ல விஷயம். அப்படியே அங்கிருந்து இங்கு வந்த எல்லா நடிகர்களையும் விரட்டி வாட்டாள் நாகராஜ் கழுத்தை பிடியுங்கள் என அனுப்பினால் விஷயம் தீரும்

ஆனால் வெளிநாட்டில் ரஜினி படத்திற்கு தடை என சில கிளம்பி இருகின்றன, யாரென்று பார்த்தால் ஈழதமிழர்கள்

அதாவது ரஜினி ஈழபடுகொலையினை கண்டிக்கவில்லையாம், இன்னும் தூத்துகுடியில் என்னமோ பேசிவிட்டாராம் அதனால் பழிவாங்குவார்களாம்

விஜயும், அஜித்தும் இன்னும் பலரும் ராஜபக்சே சட்டையினை இழுத்தா நியாயம் கேட்டார்கள் என்றெல்லாம் நாம் கேட்க கூடாது

காலா படத்திற்கு ஐரோப்பிய அரசுகள் ஏதும் சொன்னால் அர்த்தம் உண்டு, இவர்களாக குதிப்பது சரியல்ல‌

யாழ்பாணத்திலும் , கொழும்பிலும் தமிழர் காலா படத்தினை எதிர்ப்பார்த்திருக்க நார்வேயில் இருந்து ஊளையிடுவது எல்லாம் அரசியல்

இவர்கள் பின்புலம் எது என கண்டால் வைகோ சீமானிய பாரதிராஜா தொடர்புகள் அன்றி வேறல்ல‌

ரஜினியினை எதிர்ப்பவர்கள் இப்பொழுது ஏன் வருகின்றார்கள்? 2009ல் நடந்த சம்பவத்திற்கு இப்பொழுது ஏன் குதிக்கின்றார்கள்?

அவ்வளவு தீவிர தமிழ் உணர்வாளர்கள், லைகா சுபாஷ்கரனின் கழுத்தை பிடித்து ரஜினி வைத்து நீ எப்படி படமெடுக்கலாம் என கேட்டார்களா?

இல்லை எந்திரன் 2.0 வரும்பொழுது தடுப்பார்களா?

மாட்டார்கள்

ஈழதமிழன் ரஜினி வைத்து படமெடுத்து பலநூறுகோடி வியாபார கணக்கு என்றால் கம்மென்று இருப்பார்கள்

வேறு தயாரிப்பாளர் என்றால் ஏய் ரஜினி என பொங்குவார்கள்

இந்த ஈழதமிழர்கள் தமிழக திரையுலகினை கட்டுபடுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அல்லது கட்டுபடுத்தலாம் என நினைக்கின்றார்களா?

ஒரு காலமும் நடக்காது

நார்வே மிக சிறிய நாடு, அதில் ஈழதமிழர் எண்ணிக்கை மிக மிக சொற்பம், சில ஆயிரம் கூட தேறாது

இவர்கள் எதிர்த்து ஒன்றும் நடக்காது, எல்லாம் வெற்று விளம்பரம், வீண் கூச்சல்

படம் நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்,

ஆனால் எங்களால்தான் தோல்வி என சொல்வார்கள் அல்லவா? அதுதான் தாங்கமுடியாத எரிச்சலை கொடுக்கும்