‘காலா’ வரட்டும், ரஜினி மறுபடியும் பாபாஜி என ஓடப்போவது உறுதி
நாம் முதலில் சொன்னபொழுது நீ ரஞ்சித் மேலுள்ள பொறாமையால் கொக்கரிக்கின்றாய் என்றன அந்த கோஷ்டிகள்
பா.ரஞ்சித் என்பவருக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இல்லை கொடுக்கல் வாங்கலா?
அவர் ஒரு மாதிரியானவர், அவரிடம் இருந்து ரஜினியினை காப்பாற்றுங்கள் என்றுதான் சொன்னோம்
14 இடங்களில் சென்சார் போர்டு வெட்டியிருக்கின்றதாம், படம் வெளிவந்தால் மும்பையில் ரஜினி போஸ்டரை கிழித்தெறியும் அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கின்றார் ரஞ்சித்.
சென்சாரிலே தப்பாத படம் என்ன பாடு ரஜினியினை படுத்தும், அதுவும் ரஜினிக்கு ஏகபட்ட எதிரிகள் கிளம்பியிருக்கும் நேரமிது, ஆளாளுக்கு லென்ஸ், ஸ்பீக்கர் சகிதம் பார்ப்பார்கள்.
இப்பொழுது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியிருக்கின்றார்கள், அங்கும் பல ஆட்சேபங்கள் தெரிவிக்கபடுகின்றதாம்
இதென்ன மலேசிய ரவுடி சம்பந்தமில்லாமல் காந்தி, அம்பேத்கர் கோட் பற்றி எல்லாம் பேசுகின்றான் என மலேசிய அதிகாரிகள் குழம்பி கண்டுகொள்ளாமல் விட்டதை போல இந்தபடத்தை இந்திய அதிகாரிகள் விடவில்லை
மலேசிய ரவுடிக்கு எதற்கு அம்பேத்கர்? என்ற குழப்பம் இப்பொழுதும் பலர் கேட்கும் கேள்வி
இப்பொழுது ரஜினிக்கு தேவை காலா படத்து சென்சார் யூ சான்றிதழ், அவ்வளவுதான்
காவேரி பிரச்சினையில் ரஜினி மத்திய அரசை அதிகம் ஏன் சாடவில்லை என்பதற்கு இனி காரணம் தேவை இல்லை
படம் வரட்டும், ரஜினி மறுபடியும் பாபாஜி என ஓடப்போவது உறுதி