காலை கழுவும் சடங்கு

கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களில் காலை கழுவும் சடங்கு பெரிய வியாழனில் நடக்கும்

அதாவது இயேசு கொல்லபடுவதற்கு முன்பு மேற்காசிய கலாச்சாரபடி சீடர்கள் காலை கழுவி முத்தம் செய்தாராம், அது இன்றளவும் கத்தோலிக்க சம்பிரதாயம்

அது தமிழக கத்தோலிக்க ஆலயங்களிலெல்லாம் நடக்கும் அன்று குருவானவர் சீடர்கள் அல்லது சாமான்யர்கள் பாதங்களை தன் கையால் கழுவி முத்தம் செய்வார்

இந்த பகுத்தறிவு கூட்டம் என்றாவது மனிதன் காலை மனிதன் கழுவுவது தவறு அது சமூக இழிவு, சமூக நீதிக்கு எதிரானது என ஒரு வார்த்தை சொல்லுமா என்றால் இல்லை

மாறாக இந்துமத சம்பிரதாயங்களில் மட்டும் புகுந்து கும்மியடிப்பதெல்லாம் எவ்வகை பகுத்தறிவோ தெரியவில்லை

இந்து சன்னியாசியினை பல்லக்கில் சுமப்பது சமூக நீதிக்கு எதிரானது என்றால் கிறிஸ்தவ ஆலயங்களில் காலை கழுவும் சடங்கினையும் தடை செய்ய வேண்டுமா இல்லையா?