காலை மலர்கள் …

பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடானது, இதனால் தமிழக அமைதி கெடும் இந்த நிகழ்ச்சியினை தடை செய்து கமலஹாசனையும் கைது செய்யவேண்டும் : இந்து மக்கள் கட்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
“கமிஷணரய்யா நல்லாயிருப்பிய,
கமலஹாசனால பிரச்சினை இல்ல அவர விட்டுட்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பிடிச்சிட்டு போங்க
அப்படியே இந்த எச்.ராசா , அர்ஜூன் சம்பத் போன்றவர்களையும் தடை செஞ்சு பிடிச்சு உள்ளே போட்டா இன்னும் தமிழகம் அமைதியாக இருக்கும்
இந்த பிராது கொடுக்க வந்தவனுகளையும் பிடிச்சு போடுங்க”
பன்னீர்செல்வம் ஒரு கிணற்றினை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வைத்திருக்கின்றாராம் பெரும் பிரச்சினை வெடிக்கின்றது
எத்தனைஆயிரம் கோடி இந்த பன்னீர்செல்வம் சம்பாதித்தாகிவிட்டது, அந்த கிணற்றினை அம்மக்களுக்கு கொடுத்தால்தான் என்ன?
சொந்த ஊர் மக்களின் தாகத்திற்கு தன் சொந்த கிணற்று தண்ணீரை கொடுக்க சம்மதிக்காத இவர்தான் தமிழகத்தின் பொதுவாழ்க்கைக்கு வந்து பொது பிரச்சினைகளை தீர்ப்பாராம்
இவர் என்ன தர்மயுத்தம் நடத்துவது, அவருடனே அந்த பாவபட்ட மக்கள் “தர்மயுத்தம்” நடத்தி கொண்டிருக்கின்றார்கள்
பத்மினி உயிரோடு இருந்திருந்தால் பவர் ஸ்டாரின் பரதநாட்டியத்தை கண்டபின் கடன் வாங்கியாவது விஷம் வாங்கி குடித்து செத்திருப்பார்
அப்படி இந்த மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனின் பக்த கோடிகளின் கவிதை எல்லாம் கண்டு மனம் நொந்தாரோ என்னமோ நா.முத்துகுமார் குடித்தே செத்துவிட்டார்
இந்த இம்சை கவிஞர்களின் கவிதையால் இன்னும் பலர் சாக வாய்பிருக்கின்றது
”ஜெயலலிதா சபதத்தை நிறைவேற்றும் வகையில், கச்சத்தீவை மீட்டே தீருவோம்,” : அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்
மிஸ்டர் ஜெயகுமார் முதலில் நீங்கள் போயஸ் கார்டனை மீட்க முடியுமா?
அதனை முதலில் மீட்டு காட்டுங்கள், கச்சதீவினை பின்னர் பார்க்கலாம்
என்ன கட்சியோ ஆளாளுக்கு சபதமெடுக்கின்றார்கள், ஒன்று சபதமெடுத்து சிறைக்கே சென்றுவிட்டது
ஜி.எஸ்.டி. வரி குறித்து தவறான கருத்துக்களை யாரும் பரப்பக்கூடாது: தமிழிசை சவுந்திரராஜன்
உண்மையான கருத்தை அவர்களும் சொல்லமாட்டார்கள், பொய்யான கருத்தை வேறு யாரும் சொல்லவும் கூடாது
இருவருமே கம்மென்று இருக்க வேண்டும் என்கின்றார் அம்மணி
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமனம்
இதில் பெரும் காமெடி என்னவென்றால் ரவிசாஸ்திரியே ஒரு ஆல்ரவுண்டர் என்பது
விரைவில் டாஸ் போடும் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், விக்கெட் கீப்பர் பயிற்சியாளர் பதவிகள் நியமிக்கபடலாம்
ரூ.10- க்கு 225 மி.லி. ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்
முன்பெல்லாம் நெய்தான் இப்படி பாக்கெட்களில் வரும், இப்பொழுது பாலே வருகின்றது
இனி நெய் குங்குமப்பூ, புணுகு குப்பி போன்ற மிக சிறிய பாக்கெட்களில் வரலாம்
கச்சத்தீவு விவகாரம்: திமுக- அதிமுக கடும் விவாதம்
அதாவது கச்சதீவு எப்படி கையினை விட்டு போனது என்பதற்கான வாதம் இது,” நீ கொடுத்தாய்” என இவர்களும், கொடுக்கும்போது “நீ சும்மா இருந்தாய்” என இவர்களும் சொல்லிகொள்கின்றார்கள்
சரி இருவருமே பல்லாண்டுகள் ஆண்டாயிற்றே, ஏன் மீட்கவில்லை என்றால் அது ஹிஹீஹி கொடுத்தது மத்திய அரசு என்பார்கள்
சரி நீங்கள் இருவருமே மத்திய அரசில் பங்காளிகளாக இருந்த காலம் உண்டல்லவா? அப்பொழுது ஏன் கேட்கவில்லை என்றால், இல்லை முடியாது கொடுத்தது கொடுத்ததுதான் இனி மீட்க முடியாது என்பார்கள்
பின் ஏன் இன்னும் அதனையே விவாதிக்கின்றீர்கள் என்றால் பதில் இருக்காது ஆனால் அடிக்கடி கச்சதீவு என விவாதித்துகொள்வார்கள்