கால பைரவர்
இந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கையும் ஏற்பாடும் ஆச்சரியாமான ஞானம் கொண்டவை, இன்னொரு வகையில் அவையெல்லாம் விஞ்ஞானத்தின் வடிவங்கள், இன்றும் மானிடர் புரிந்துகொள்ளமுடியாத தத்துவங்களை, பிரபஞ்ச ரகசியங்களை தெய்வத்தின் பெயரால் சொல்லி வைத்தார்கள் இந்துக்கள்
பாற்கடல் என பிரபஞ்ச அண்டத்தை சொல்லியதாகட்டும், சக்தி தேவி என பிரபஞ்சதை இயக்கும் சக்தியினை சொன்னதாகட்டும், நீள் வட்டமான அண்டத்தின் தோற்றத்தை முட்டையில் இருந்து உலகம் தோன்றிற்று என்றதாகட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு தெய்வ கோலத்தை நிறுத்தி மக்களுக்கு சொல்லி வைத்தார்கள் இந்துக்கள்
இந்துக்களின் தெய்வங்களும் புராணங்களும் எல்லாமே பிரபஞ்ச தத்துவங்களை சொல்பவை, மானிடன் மனதால் தெளிவு பெறவு இந்த பூமியும் வாழ்வும் அற்பமானது என்பதை சொல்லவும் வந்தவை
அப்படிபட்ட தெய்வங்களில் ஒருவர்தான் கால பைரவர்
இந்த கால பைரவர் இன்றைய பெரும் விஞ்ஞான தேடலின் இந்துக்கள் கண்ட வடிவம் கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டியவர், சிவனின் ஒரு அம்சமான அந்த கால பைரவர் தமிழகத்தில் பைரவர், வைரவர் என்றும் அவரை பின்பற்றுவோர் பைராகிகள், வைராகிகள், அகோரிகள் என்றும் அழைக்கபடுவதும் தொன்றுதொட்டு வரும் மரபு
காலம் என்றால் என்ன என அறிந்தால் கால பைரவர் யார் என அறிவதும் எளிதானது
இந்துக்கள் காலம் என்பது பிரபஞ்சத்தை கடந்து நிற்பது, அந்த பரம்பொருள் என்பது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாமும் கடந்து, காலத்துக்கு அப்பாற்பட்டு நிற்பதை உணர்ந்து கால பைரவர் என்றார்கள்
இந்த பூமி பிரபஞ்சத்தின் ஒரு துளி அந்த துளியில் வாழும் மனிதன் தன் வசதிக்காக ஆண்டு பருவம் வயது வரலாற்று காலம் , கடந்த காலம் எதிர்காலம், காலண்டர் என என்னென்னவோ செய்திருக்கின்றானே அன்றி உண்மை அது அல்ல, அவன் கண்டதொரு மாயை என்றார்கள்
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் ஒரு துளி, அந்த துளியில் பூமி சூரியனை சுற்றுவதால் நாள், மாதம், ஆண்டு , இரவு, பகல் என சில மாற்றங்களை காலம் என மானிடன் பிரித்தானே தவிர, உண்மை அது அல்ல
காலம் என ஒன்று இல்லை எல்லாமே மாயை, எல்லாம் கடந்த ஒன்று உண்டு அங்கு காலமில்லை நேரமில்லை எதுவுமில்லை அதுதான் நிரந்தரம் அதுதான் பரம்பொருள் என அதனை காலத்தின் பைரவர் என்றார்கள்
இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் அறியாமையில் இருக்கும் மானிடருக்கு காலம் என்றொரு மயக்கத்தில் இருக்கும் மானிடருக்கு பைரவர் கோலத்தில் நின்று வழிகாட்டும் தெய்வத்தை கால பைரவர் என்றார்கள்
அவர் கால காலத்துக்கும் நின்றிருப்பதால் கால பைரவர் என்றானார்
நவீன விஞ்ஞானத்தில் நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் இங்கு பேசினால் இந்த ஞானத்தின் உண்மை ஓரளவு புரியும்
நியூட்டன் கொள்கைபடி காலம் மாறாதது, இங்கு எல்லோருக்கும் ஒரே காலமே. எல்லாம் நிலையானது எல்லோர் கடிகாரமும் ஒரே நேரம், எல்லோருக்கும் ஒரே சூரியன் ஒரே இயக்கம் கொண்டது
ஆனால் ஐன்ஸ்டீன் இதனை மாற்றினார், காலம் என்பது இடத்தை பொறுத்தது என்றார், சூழலை பொறுத்தது என்றார். பூவுக்கு ஒரு நாள்தான் காலம், மனிதனுக்கு 80 ஆண்டு காலம், காலம் சூழலை பொறுத்தது பார்வையினை பொறுத்தது என்றார்
பூமியில் ஒரு ஆண்டு என்பது சனிகிரகத்தில் தூரத்தை பொறுத்து மாறும், வியாழனில் இன்னும் மாறும் என அவர் விளக்கினார்
விஞ்ஞானத்தின் காலம், வெளி எனும் புதிய பரிமாணத்தை அவரே தொடங்கி வைத்தார், அவரின் சார்பியல் கொள்கை முதல் ஆற்றல் கொள்கை வரை இப்படித்தான் உருவானது, காலம் மாறும் என்பதை நிறுவினார்
இனிவரும் விஞ்ஞானிகள் இதனை வேறுவிதமாக சொல்லலாம், மாற கூடியது விஞ்ஞானம்
இதெல்லா பிரபஞ்சம் எனும் உள்வட்டத்தில் இருக்கும் மயக்கம் என்பதை சொல்லி உண்மையான பரம்பொருளும் சக்தியும் இந்த வட்டத்துக்கு வெளியே இருக்கின்றது, அதுதான் எல்லாம் படைத்து இயக்குகின்றது அதுதான் கால பைரவர் என சொன்ன மதம் இந்துமதம்
இந்த கால பைரவர் என்பதில் அது தத்துவமும் ஞானமும் போதனையும் சொன்னது
காலத்தால் மானிடன் பிறந்து காலத்தால் வாழும் இந்த வாழ்வெல்லாம் ஒவ்வொரு நொடியும் காலம் என பிரித்து மானிடன் வாழ்கின்றான் என்பதை அது தன் மந்திரங்களிலே சொன்னது
இந்த யுகத்தில் இந்த ஆண்டில் இந்த பொழுதில் இந்த திதியில் என்றுதான் அந்த மந்திரங்களெல்லாம் தொடங்கும் அதன் பொருள் பரம்பொருள் இந்த காலகட்டத்தில் இதனை நிகழ்த்துகின்றான் என்பதனை நினைவுபடுத்தவே
இந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி அந்த புள்ளியில் சிறுபொழுது வாழவந்தவன் மனிதன், இந்த பிறப்பும் வாழ்வும் அவன் முடிவு அல்ல, இந்த உலகை இயக்கும் பெரும் சக்தி அவனை இயக்குகின்றது, இங்கு அவன் படும் வாழ்வும் தாழ்வும் மகிழ்வும் சோகமும் எல்லாமே அவனால் இயக்கபடுகின்றது என்பதை கால பைரவரில் சொன்னது
இதனாலே இந்து கோவில்களில் இன்றும் கால பைரவருக்கு தனி சன்னதி உண்டு, அங்கு அவரிடம் வேண்ட வேண்ட ஞானம் பெருகும்
அவரும் இந்த வாழ்வு நிலையற்றது, ஒரு சாம்பலை கூட எடுத்து செல்லமுடியா அளவு நிலையில்லாதது, கொஞ்ச கால வாழ்வு இது, அதுவும் மாயை எல்லாமே மாயை, அந்த மாயையில் ஞானத்தை தேடு மெய்பொருளை தேடு என கால பைரவரை நிறுத்தினார்கள்
ஆலயத்தின் காவலே அவர் என வைத்தார்கள்
காசி எனும் மாபெரும் ஞான நகரின் எட்டு மூலைகளிலும் அவரை நிறுத்தி சிவன் காலங்களை கடந்தவர், இங்கு வாழும் மக்களின் காலத்துக்கு காவல் இருப்பவர், எக்காலமும் அறிந்தவர், எல்லா காலமும் அவருக்கு நிகழ்காலமே என்பதை சொல்லி அவரை காவல்கார தெய்வமாக்கினார்கள்
யார் காவல் செய்யமுடியும்?
யார் உறக்கமற்றவர்களோ யார் எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்களோ யார் எல்லா வழிகளையும் இயக்கத்தையும் அறிந்திருப்பார்களோ அவர்கள்தான் காவல் செய்யமுடியும்
ஆசையினை வென்ற ஒருவனேதான் தங்கத்துக்கும் வைரத்துக்கும் காவலாய் இருக்க முடியும், அப்படி வாழ்வின் ஆசைகளை வென்ற ஒரு வடிவமே வாழ்வுக்கு காவலாய் வரமுடியும்
அவ்வகையில் காலத்தை கடந்த மாயை கடந்த அந்த பரம்பொருளை கால பைரவர் என காவல் தெய்வமாக்கினார்கள்
ஒவ்வொரு மாதத்திலும் அஷ்டமி இந்துக்களுக்கு விஷேஷமானது, அதில் இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அன்று சில விதமான அதிர்வுகளால் ஈர்ப்பு சக்தியால் மானிட மனதில் சிந்தனை குழப்பம் ஏற்படும்
அந்த குழப்பத்தினை சரிசெய்ய வழிபாடுகள் அவசியம் அதனாலே அஷ்டமியில் நல்ல காரியங்களை தவிர்க்க சொன்னார்கள், அதுவும் அமாவாசை நோக்கி செல்லும் அஷ்டமி கொஞ்சம் வலுவானது என்பதால் அதனை கால பைரவருக்கு கொடுத்தார்கள்
கால பைரவர் காவலின் வடிவமாக கருதபடுபவர், சனிக்கே அவர்தான் குரு என்பதால் 12 ராசிக்காரர்களும் சனியின் பிடியில் இருந்து விடுபட அவரை வணங்கலாம் என்கின்றது சோதிட சாஸ்திரம்
12 ராசிகளும் அவரில் அடக்கம் என்பதில் தெரிகின்றது அவர் ராசிகளை எல்லாம் கடந்த பெரும் சக்தி என்பது, அந்த சக்திக்கு கால நேரம் என எதுவுமில்லை
அப்படிபட்ட கால பைரவருக்கு கார்த்திகை தேய்பிறை அஷ்டமி சிறப்பானது
அமாவாசை முதல் அமாவாசை வரையான ஒருமாத கால அளவில் இந்த நாள் கார்த்திகை மாதமாகும், அந்த கார்த்திகை தேய்பிறை அதனால் இன்று கொண்டாடபடுகின்றது
இன்று காலபைரவருக்கான நாள்
பொதுவாக கார்த்திகை மாதம் தீமைகளை வேரறுக்கும் அவதாரங்கள் பிறந்த மாதம். முருகன் , கால பைரவர் மற்றும் அய்யபன் வரை கொண்டாடபடும் மாதம்
கால பைரவர் சிவனின் ருத்ரகோல சாயல், அந்த கால பைரவர் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் வணங்கபடுவார், தென்னகத்து சுடலை சாமி கூட அந்த கால பைரவரின் ருத்திரகோல சாயலே
ருத்திரகோலம் என்பது மாயை அகற்றி ஞானம் வழங்கும் கோலம் அன்றி வேறு எதுவுமல்ல
காலத்தை கடந்து நிற்கும் அந்த பெரும் சக்தி, எல்லாம் அறிந்த சக்தி அதர்மம் எது தர்மம் எது என அறிந்த அந்த சக்தி அதர்மத்தை ஒழிக்கும் , சரியான காலத்தில் ஒழிக்கும். அகந்தை ஒழித்து ஞானம் அருளும்
அவ்வகையில் இன்று இந்துமக்கள் காலபைரவருக்கான சிறப்பு வழிபாட்டை மேற்கொள்கின்றார்கள்
கால பைரவர் எல்லோருக்கும் காவலாய் இருப்பார், அதுவும் எப்படி இருப்பார் என்றால் அந்த நன்றியுள்ள விலங்கை போல காவல் இருப்பார் கலங்காதே என்றது இந்துமதம்
அந்த விலங்கு பல்லாயிரம் வருடமாக மனிதனோடு அண்டி வாழ்ந்தாலும் அதன் இயல்பான விசுவாசமும் காவல் உணர்ச்சியும் மாறாததை சுட்டிகாட்டி அந்த பரம்பொருளும் என்றும் மாறாதது என்றார்கள்,
இதனால்தான் அந்த ஜீவனை கால பைரவர் என்றே அது அழைத்தது, இன்றும் அது பைரவரின் வடிவம் என சொல்வதன் தத்துவம் அதுவே
நன்றியும் கடும் காவல் பண்பும் கொண்ட விலங்கினை தெய்வத்தின் இடத்திற்கு உயர்த்தவும் இந்துமதம் தயங்கவில்லை
அதன் காவலிலும் விசுவாசத்திலும் நன்றியிலும் தெய்வத்தை காண சொன்னது இந்துமதம்
அவர்கள் ஆலயத்தில் வைக்கபடும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு இறை தத்துவம் உண்டு, மனிதனை தாண்டி விலங்கிலும் கடவுளின் தன்மையினை கண்ட மதம் அது.
இந்த சாயல் உலகில் எந்த பூமியிலுமில்லை இந்த தர்ம பூமியில் மட்டுமே சாத்தியம்
நேர்மையும் நெஞ்சில் சுத்தமும் பொதுநலமும் கொண்டோர் அழைக்காமலே கால பைரவர் வருவார் என்கின்றது சாஸ்திரம், நீதி கிடைக்காமல் தவிப்போர் கால பைரவரிடம் முறையிட்டால் அது நடக்கும் என்பது ஐதீகம்
கால பைரவரின் அம்சமான சுடலைமாடனிடம் இப்படி முறையிடும் வழக்கம் தென்னாட்டில் இன்றும் உண்டு
காலத்தை கடந்து நிற்கும் அந்த மகாசக்தி, காலமும் நேரமும் கட்டுபடுத்தமுடியா அப்பெரும் சக்தியிடம் மானுடன் தன்னை அர்பணித்து சமர்பிப்பதே ஞானத்தின் தொடக்கம்
மனிதன் குறைவுள்ளவன் பலவீனமானவன் அவன் காலத்துக்கும் நேரத்துக்கும் கட்டுபட்டவன், அவனால் இரவு பகலை மாற்றமுடியாது, அவனால் காலத்தை வெல்லமுடியாது, அவன் காலத்தால் இழுத்து செல்லபடும் தூசு என்பதை உணர்ந்து காலத்தால் நெருங்க முடியாததும், காலத்தை தன் காலடியில் போட்டு எல்லா காலத்தையும் தாண்டி நிலைத்திருப்பதுமான பரம்பொருளிடம் சரணடைதலே முழு ஞானம்
அந்த ஞானத்தை சொல்லும் நாள் இது
காலத்தை கடந்து ஒவ்வொருவரையும் காப்பவர் அந்த கால பைரவர்
காசி கால பைரவரின் மகா முக்கிய ஸ்தலமாகும், காசி எனும் புண்ணிய நகரை அவர்தான் காத்து கொண்டிருக்கின்றார் என்பது ஐதீகம்.
காசியினை காக்கும் எல்லோருக்கும் கால பைரவரின் கடாட்சம் கிடைக்கும் என்பார்கள், மோடி காசிக்கு பல நற்காரியங்களை செய்திருக்கின்றார் இன்னமும் செய்வார்
அந்த கடாட்சம் மோடிக்கும் கிடைத்திருக்கின்றது,
இந்நாட்டை காத்து நிற்கும் கால பைரவரின் சாயலான மோடிக்கு அந்த பகவான் எல்லா நலமும் வளமும் காவலும் அருளட்டும்
