காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார் சரத் குமார்
சென்னை மாநகரத்து மக்கள் தயவு செய்து கவனமாக இருக்கவும், சென்னை அதிர்ந்து உலகமே திரும்பி பார்த்து, டிரம்பே ஓடிவந்து சமரசம் பேசும் பெரும் அச்சுறுத்தல் ஒன்று தொடங்கிவிட்டது
மத்திய அரசு இனி அவசர ஆலோசனையில் ஈடுபடலாம், முப்படைகளும் தயாராகலாம்
ஆம், சரத்குமார் தன் மாபெரும் கட்சியினருடன் காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார்
முன்பு காவேரிக்காக டெல்லி வரை நடப்பேன் என்றார், பின் டெல்லி வெகு தொலைவு, நீர் சென்று சேர்வதற்குள் மோடி அரசே முடிந்து தேர்தல் வந்துவிடும் என சொல்ல அப்படியா? என கேட்டவர் உண்ணாவிரதத்திற்கு வந்துவிட்டார்
அந்த கட்சியில் இவரும் எர்னாவூர் நாராயணனும் இருந்தார்கள், அவர் பிரிந்துவிட்டார் இப்பொழுது இவர் மட்டும் இருக்கின்றார்
இதில் இனி கட்சி உடையாது என சொல்லியும் கொள்வார், இவரை இரண்டாக வெட்டினாலன்றி கட்சி எப்படி உடையும்? இருப்பதே அவர் ஒருவர்தானே
இனி காவேரிக்கு நாடாளும் மக்கள் கட்சியின் கார்த்திக் மட்டும்தான் பாக்கி, அவரும் விரைவில் போராடலாம்
ஆனால் ஆடிமாத மழைக்காலத்திற்கு முன்பு போராட வேண்டும், ஒருவேளை மழை வலுத்து கடும் வெள்ளம் வரும்பொழுது கார்த்திக், “ஹேய்ய் கன்னடா தண்ண் ணீஈஈஈ விட .. மாட்டிய்ய்யா ர்ரேஸ்ஸ்லல்” என சொல்லிகொண்டிருந்தால் நன்றாய் இருக்காது.