காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம்.. மீட்பாராம்…. கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

Image may contain: 1 person, close-up

காவேரியில் நீர்வராதது ஜெகஸ் கஸ்பர் எனும் கன்னியாகுமரி பாதிரிக்கு இப்பொழுதுதான் தெரிந்ததாம். கன்னியாகுமரி தொலைவில் இருப்பதால் அப்படி மெதுவாக தெரிந்திருக்கின்றது

காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம். மீட்பாராம். நல்லது கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்து பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை நீரை வறண்ட ராதாபுரம் பக்கம் மிஞ்சியதை கொடுக்கலாம் என்றால் கன்னியாகுமரியே பற்றி எரியும்

பலமுறை பற்றி எரிந்ததது

இந்த பாதிரி கொஞ்சம் ராதாபுரம் மக்களுக்காக அப்பக்கம் நடந்துவிட்டு காவேரி பக்கம் வந்தால் என்ன?

பாதிரி அதற்கெல்லாம் நடக்க மாட்டார் , அப்படி நடந்தால் ஜெகத் கஸ்பர் கன்னியாகுமரியிலே சிலுவையில் அறையபடுவார் என்பது அவருக்கு தெரியும்

அதனால் காவேரிக்கு நடக்க தொடங்கிவிட்டார்

ராதாபுரம் விவசாயி எப்படி போனால் என்ன? காவேரி விவசாயி வாழட்டும் என எண்ணுகின்றார் அல்லவா?

அந்த பெரிய மனதின் பெயர்தான் கிறிஸ்தவ சாமியார்.

என்ன வரிசையோ தெரியவில்லை

இந்த பொன்னார், தமிழிசை, நாஞ்சில் சம்பத், இந்த சர்ச்சை சாமியார் என மொத்த வரிசையும் கன்னியாகுமரி பக்கம் இருந்துதான் வந்து தொலைகின்றது

ஒரு மாதிரி மாவட்டமாக இருக்கலாம், இதனை தமிழகத்தோடு இணைக்க முன்பு கடும் போராட்டமாம்

ஏன் போராடவேண்டும்?

கொஞ்சநாள் விட்டிருந்தால் கேரள அரசே விட்டுவிட்டு ஓடியிருக்கும்.