காவேரியாவது மண்ணாவது?
கர்நாடக தேர்தலை நாடே எதிர்பார்க்கின்றது, விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான தேர்தல் இது
மோடி அரசின் ஆட்சியினை எடைபோடும் தேர்தலும் இதுதான்
பாஜக, காங்கிரஸ் இருவருக்குமே வாழ்வா சாவா போராட்டம், இந்த தேவகவுடா கோஷ்டியும் தாங்கள் இருப்பதை காட்டியே தீரவேண்டும்
இதனால் கடும் போட்டி, பணம் முதல் எல்லா வித வியூகமும் களை கட்டுகின்றன
இந்தியா முழுக்க யார் வெல்வார்? என எதிர்பார்க்க,தமிழக கட்சிகளும் எதிர்பார்க்கின்றன?
எதற்கு?
யார் வென்றாலும் அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலிலும் வாய்ப்பு என்பதால் , அவர்களுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டு வைக்க வேண்டும் மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என கனத்த எதிர்பார்ப்பு
இதில் காவேரியாவது , மண்ணாவது?