காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு
காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு என செய்திகள் வருகின்றன
மறுக்கபட்ட குழுவின் தலைவர் பழனிச்சாமி என்று கூட செய்திகள் வருகின்றன, இவர்கள் அதிமுக பிரச்சினையினை பேசவருகின்றார்களோ என பயந்த மோடி கதவினை திறக்கவே இல்லையாம்
இவர்களும் வித்தியாசமானவர்கள், மோடி இலவச ஸ்கூட்டி வழங்க வந்தபொழுது பல்லை காட்டிகொண்டே இருந்தார்களாம், இப்பொழுது அவர் டெல்லியில் கதவினை பூட்டியபின் தட்டிகொண்டிருக்கின்றார்கள்
ஆக இவர்களால் பிரதமரை பார்க்க முடியவில்லை
என்ன செய்யலாம்?
இந்திய பிரதமரை காணவில்லை, காவேரி சிக்கலை தீர்க்காமல் தலைமறைவு என உச்சநீதிமன்றத்தில் இனி ஆட்கொணர்வு மனு போடாமல் மோடியினை பார்க்க முடியாது போல
அப்படி ஒரு மனுகொடுத்து மோடியினை மன்றத்தில் நிறுத்தினால் அப்படியே உச்சநீதிமன்ற தீர்ப்புபற்றி சொல்லவும் வசதியாக இருக்கும்
தமிழக அரசு கதவை தட்டுவதற்கு பதிலாக, மோடியினை காணவில்லை என கோர்ட்டுக்கு செல்லலாம்