காவேரி மேலாண்மை வாரியம் என்பது என்ன செய்யும்?
காவேரி மேலாண்மை வாரியம் என்பது என்ன செய்யும்?
வெறுமனே காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருகின்றதா என பார்க்காது. எல்லா அணைகளும் அதன் கட்டுபாட்டில் வரும்
எல்லா அணையுமென்றால் கேஆர்எஸ், மேட்டூர் கபினி, ஹேமாவதி அப்படியே அமராவதி, பவானி எல்லாம்
காவேரி தீர்ப்பினை கவனியுங்கள் கன்னடம், தமிழகம், கேரளா, புதுவை என 4 மாநிலங்கள் பிரிக்கவேண்டும்
இதில் கேரளா எங்கிருந்து வருகின்றது? அமராவதி துணை ஆறு, பவானி அணை நீரில் அவர்களுக்கும் பங்கு உண்டு
காவேரி மேலாண்மை வாரியம் அமைந்து அது முறையாக செயலாற்றும் பட்சத்தில் கபினி, ஹேமாவதி அணைகள் முறையாக பங்கிடபடுவது போலவே அமராவதியும், பவானியும் பங்கிடபடும்
இப்பொழுது கோபி, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் என எப்பொழுதும் பசுமையாக இருக்கும் அப்பகுதி அப்பொழுது பற்றி எரியும்
காவேரி மேலாண்மை வாரியம் அமைந்து அமராவதி, பவானியில் கைவைக்கும்பொழுது கொங்கு பக்கம் பெரும் சிக்கல் உருவாகலாம்
இதனை கொங்கு மண்டலத்தில் இருந்து வந்திருக்கும் பழனிச்சாமி அனுமதிப்பாரா?
முன்பு திமுக லேசாக நெளிந்ததற்கும், இன்று பழனிச்சாமி பம்முவதற்கும் இப்படிபட்ட உள்ளடி காரணமும் உண்டு
ஆனால் கபினியினை திற, ஹேமாவதியினை உடை என சொல்லிவிட்டு நான் அமராவதி, பவானியினை பூட்டிகொள்வேன் என சொல்லவும் முடியாது
ஆக்டோபஸின் கரங்கள் போல, எங்கேல்லாமோ வேர்விட்டிருக்கும் பிரச்சினை இது. இடியாப்ப சிக்கல் போன்றது
தவறாது பெய்யும் மழை ஒன்றே முதல் தீர்வு, மானிடர் எடுக்கபோகும் தீர்வுகள் அதன்பின்பே
காவேரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கபட வேண்டும் ஆனால் அது எந்த தரப்பிற்கும் இனிப்பாக இருக்காது திருச்சி, தஞ்சை தவிர