காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என்று சொல்ல ஆளில்லை…
காமராஜர் ஆட்சி இருக்கும் வரை காவேரியில் கைவைக்க ஒரு கன்னடனுக்கும் துணிச்சல் இல்லை
காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என அதிரடியாக அரசியல் செய்ய இங்கு ஒருவர் கூட இல்லை
தலைவி குஷ்பு அகில இந்திய செய்திதொடர்பாளர் என்பதால் இதில் தலையிடவில்லை என சங்கம் தமிழகத்திற்கு விளக்கமளிக்கின்றது
நிச்சயம் காவேரி பிரச்சினையில் ஏதேனும் ஆறுதல் சொல்ல, அல்லது நாங்கள் தமிழகத்தில் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை என சொல்லும் ஒரே தகுதிகொண்ட கட்சி காங்கிரஸ் மட்டும்தான்
காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் காவேரி தானாக வரும் என அட்டகாச அரசியல் அவர்கள் செய்யலாம்
ஆனால் அப்படி சொல்லத்தான் ஆளில்லை
ஒருவரும் இல்லை, இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியாது
ஆனால் தேர்தல் அறிவிக்கட்டும், ஏதும் கூட்டணி கட்சி 40 தொகுதி தருவதாக சொல்லட்டும், அப்பொழுது புற்றீசலாக பறந்து வருவார்கள்
தங்கபாலு, வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், செல்லகுமார் என பல டஜன் கோஷ்டிகள் இருப்பது அப்பொழுதுதான் தெரியும்
இப்பொழுதெல்லாம் வரவே மாட்டார்கள்
பேசாமல் சத்தியமூர்த்தி பவன் என்பதை “மழைக்கால புற்றீசல் பவனம்” என மாற்றிவிடலாம், சத்தியமூர்த்தி பெயராவது காப்பாற்றபடும்