காவேரி வராத நிலையிலே போராட்டங்கள் நீர்த்து போயிற்று

காவேரி வராத நிலையிலே அதன் போராட்டங்கள் நீர்த்து போயிற்று, ஜனாதிபதி தமிழகத்தில்தான் இருக்கின்றார் கருப்பு கொடி என்ன கருப்பு புள்ளி போராட்டம் கூட இல்லை

இப்பொழுடு நீட் தேர்வு சர்ச்சை வலுக்கின்றது. நிச்சயம் இது தங்களுக்கான வெற்றி என மத்திய அரசு புன்னகைக்கலாம், கடந்தமுறை நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழகம் இன்று நீடடுக்காக கதறி நிற்கின்றது என அவர்கள் நினைக்கலாம்

ஆனால் இதெல்லாம் பயங்கர வெறுப்பினை அவர்கள் மேல் கொண்டுவரும் என்பதை மட்டும் உணரமறுக்கின்றார்கள்

என்னாகிவிட்டது? கொஞ்சம் மாணவர்களுக்கு தேர்வு எழுத தமிழகத்தில் மையம் இல்லையாம். அவசரமாக செய்ய முடியாதாம்

செய்ய முடியுமா என்றால் நொடியில் முடியும், ஆனால் செய்யமாட்டார்கள், சப்பைகட்டு கட்டுகின்றார்கள்

நாளை போர்க்காலம் என்றாலோ, இங்கு அணுவுலைகளில் ஏதும் அசம்பாவிதம் என்றாலோ இப்படித்தான் சாவகாசமாக ராஜஸ்தான் வாங்கள், டெல்லி வாருங்கள் என சொல்வார்கள் என்பது தெரிகின்றது

சில நூறு மாணவர்களையே அவசரமாக தேர்வுக்கு அடுத்த மாநிலத்திற்கு அனுப்பமுடியாத அரசு, நாளை அசம்பாவிதம் என்றால் எப்படித்தான் இம்மக்களை காக்குமோ தெரியாது