காவேரி வழக்கில் உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு…
காவேரி வழக்கில் தன் இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வெளியிட்டுவிட்டு இனி அப்பீல் கிடையாது எனவும் சொல்லிவிட்டது, இதுவே நாட்டாமை தீர்ப்பு என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டது.
கிட்டதட்ட 50 ஆண்டுகளாய் நடந்த இழுபறியில் இனி இழுக்க முடியாதவாறு தீர்ப்பினை சொல்லிவிட்டது மன்றம்
இந்த தீர்ப்பில் 177.5 டி.எம்.சி கொடுத்தாக வேண்டும் என உறுதிபட சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி, 10 டிஎம்சி இடைக்காலத்தில் திறக்க சொன்னாலே மூக்கால் அழும் கன்னடத்தின் செவிட்டில் அடித்து 177.5 கொடு என சொல்லியிருப்பது நல்ல விஷயம்
இனி இதனை எப்படி செயல்படுத்தபோகின்றார்கள் என்பதில்தான் இருக்கின்றது உச்சநீதிமன்றத்திற்கான மரியாதையும் மாண்பும்
உண்மையில் தமிழக உரிமை 1960 வாக்கில் 205 டிஎம்சி என சொல்லபட்டது, பின் 195 டிஎம்ஸி என சுருங்கியது, இப்பொழுது 177.5 டிஎம்சி என இறுதியாக சொல்லியாயிற்று நல்ல வேளையாக இனி அப்பீல் இல்லை
ஆனால் மாறிவிட்ட கால சூழலில் சில நியாயமான விஷயங்களை சொல்லியாக வேண்டும், கன்னடத்திலும் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றார்கள், லட்சகணக்கில் இருக்கின்றார்கள், தொழில்களும் நடத்துகின்றார்கள்
ஆக அவர்களுக்கும் சேர்த்து 14 டி.எம்.சி வேண்டும் என சொல்லபட்டிருக்கின்றது என்பதைத்தான் பார்க்க வேண்டும்
“நதி யாருக்கும் சொந்தமில்லை” என உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது வரவேற்க தக்க விஷயம். இந்திய பெருந்நாட்டிற்கு மகா அத்தியவசியான வரிகள்
இந்த 177.5 டிம்சியினை முறையாக இனி கொடுக்க வேண்டியது அரசுகள் கடமை, வாட்டாள் நாகராஜ் போன்ற சில்லறைகள் சத்ததிற்காகவும் வாக்கு வங்கிக்காகவும் கன்னடம் நாடகம் ஆடுமானால் அந்த அரசினை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சி நடத்தி ராணுவ துணையோடு அந்த நீரினை திறந்தாக வேண்டும்
இதுவே இனி இந்நாட்டில் காவேரி விவகாரத்தில் நியாயமாய்
நடந்துகொள்ள வேண்டிய முறை
நீதியினை செயல்படுத்த மாநில அரசு தடையாக இருக்குமானால் அதனை தூக்கி எறியட்டும், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு சவால்விடும் அந்த அற்பர்களை துர எறிந்து தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க இந்த நடுவன் அரசு வழி செய்யட்டும்
அதுவே தர்மம், அதுவே நியாயம்
சிலர் இந்த 14 டிம்சி குறைந்துவிட்டது என ஊளையிடுகின்றார்களாம், அவர்கள் வாயினை மூடுவது நல்லது
காரணம் தமிழகத்தில் காவேரியில் கலக்கும் துணையாறுகள் உண்டு அமராவதி, பவானி, நொய்யல் என மூன்று உண்டு, இவை கலந்துதான் அகண்ட காவேரி கல்லணைக்கு வரும்
அதில் அணைகட்டி முடக்கிவிட்டு அதாவது தஞ்சை மக்களுக்கு உரிமை இல்லாமல் செய்துவிட்டு கன்னடன் திறக்க வேண்டும் என கேட்பது நியாயமான காரியமாகது
இது இன்னும் சீண்டபட்டால் மேற்கு மாவட்ட தமிழர்களுக்கும் தஞ்சை மாவட்ட தமிழர்களுக்குமான உட்பிரச்சினை ஆகிவிடும்
அதனால் கிடைத்த 177.5 டிஎம்சி நீரை உறுதியாய் வாங்கி காட்டுவதில் மாநில அரசின் தைரியமும் திறனும் உள்ளது
தீர்ப்பு வழங்கிவிட்டு இனி அப்பீல் இல்லை என சொல்லிவிட்ட அந்த நீதியரசர்களுக்கு வாழ்த்துக்கள்
நீதிமன்றம் நீதியினை சொல்லிவிட்டது, இனி அரசுகள் செய்ய வேண்டியதை செய்யட்டும்