காவேரி விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு நாள் போராடும் கட்சிகள்

ராஜிவ் தமிழகம் வந்தால் உயிரோடு திரும்ப முடியாது என 1991ல் பேசினார் வைகோ

அவர் சொன்னபடியேத்தான் நடந்தது

இன்று கிட்டதட்ட மோடியினை அதே சாயலில் பேசிகொண்டிருக்கின்றார்

இங்கு ராஜிவ் கொல்லபட்டார், அத்வாணி மயிரிழையில் தப்பினார். தமிழகம் ஒன்றும் மிக பாதுகாப்பான மாநிலம் அல்ல‌

வைகோவின் இன்றைய பேச்சிற்கு உடனே புழலுக்கு அனுப்புவது மாநில நலனுக்கு மிக நல்லது

அவரோடு இன்னும் சிலரை உடனே அனுப்புவது அதிகம் நல்லது.


தங்கள் அரசியலுக்கு சிக்கல் இல்லா வகையில் காவேரி விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு நாள் போராடும் தமிழக கட்சிகளின் இன்றைய நாள் பாமாகவிற்கானது

அதன்படி அவர்கள் இன்று களத்தில் குதித்து ரயிலை மறித்து பின் கைதாகி திருமண மண்டபம் சென்றனர்

இன்றைய நாள் பாமாகவிற்கானது என்பதால் அவர்கள் சத்தம் அதிகம், மீடியாவில் உறுமிகொண்டிருக்கின்றார்கள்

இவர்கள் போராட்டத்தில் ஒருவர் இறந்தும் விட்டார்,

நாளைய நாள் யார் போராட போகின்றார்கள் எனும் செய்தி இன்னும் வரவில்லை


சென்னையில் புலிகொடி பறந்தது, புலிகள் கர்ஜித்தது, தமிழகம் அதிர்ந்தது, இந்தியா குலுங்கியது என்றெல்லாம் செய்தி கொண்டிருந்தனர்

ஐரோப்பிய ஈழ புலிகள் சிலது இன்று சேப்பாக்கம், நாளை ஜார்ஜ் கோட்டையில் புலிகொடிபறக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தது.

இப்போது புலிக்கு … எடுக்க கொண்டு செல்லும் காட்சியினை கண்டு அவை எல்லாம் 
மகா அமைதி