காவேரி விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு வரவில்லை

Image may contain: ocean, sky, water, outdoor and nature

காவேரி விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு வரவில்லை, மத்திய அரசு தாக்கல் செய்த காவேரி வரைவு திட்டமும் முழுவதும் தெரியவில்லை

ஆனால் கசியும் செய்திகளை கண்டால் இதுவரை நடந்த அநீதிக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் உள்ளது

காவேரி மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கும் எனும்பொழுதே முடிந்தது விஷயம். இப்பொழுது அப்படித்தான் இருக்கின்றது, கன்னடம் சொன்னதே முடிவு

இதனைத்தான் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு சொன்னதாக சொல்கின்றார்கள்

இதற்கு ஏன் வழக்கு? இதற்கு ஏன் இழுபறி? பழைய நிலை நீடிக்கும், தமிழகம் வஞ்சிக்கபடும் என நேரடியாக சொன்னால் என்ன?

எனினும் உச்சநீதிமன்றம் முன்பு தன் தீர்ப்பில் நதிகள் தேசியமயமானவை, மாநில அரசு சொந்தம் கொண்டாட முடியாது என சொல்லியிருப்பதால் இப்பொழுதும் அதனை கடைபிடிக்கும் என நம்புவோம்

இப்படி பகிரங்கமாக காவேரியில் மாநில அரசு கட்டுபாடு கொண்டிருக்கும் என மத்திய அரசு சொல்லும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை

இருவருக்கு சண்டை வந்தால் மூன்றாம் நபர் தூரத்தில் இருந்து வந்து சமரசம் செய்வார், அப்படி மத்திய அரசே தன் கட்டுபாட்டில் காவேரி அணைகளை எடுத்திருக்க வேண்டும்

நிச்சயம் அதனைத்தான் செய்திருக்க வேண்டும், அப்படி செய்து வாரியம் அமைத்து, காவேரியிலும் அதன் துணையாரிலும் டெல்டாவிற்கு உள்ள உரிமையினை கொடுக்க வேண்டும்

அது காவேரி, அமராவதி, கபினி, என எல்லா நதி அணைகளானாலும் சரி, டெல்டாவிற்கான உரிமை வரவேண்டும்

மாறாக காவேரியினை மாநில அரசு கண்காணிக்கும் என்பதெல்லம் அப்பட்டமான கொடுமை, இப்பொழுது இருக்கும் நிலமைக்கு வலுசேர்க்கும் செயல்

மத்திய அரசின் இந்த முடிவினை பலர் கடுமையாக ஆட்சேபிக்கும்பொழுது பன்னீர் செல்வம் வரவேற்கின்றார், அவர்தான் மாநில நிதியமைச்சர் என்பது மாபெரும் வெட்க கேடு

இது கூட தெரியாமல் அல்லது தெரிந்தே பல்லிளிப்பது தமிழகத்தின் மாபெரும் சாபக்கேடு

மிசா கொடுமையினையே வரவேற்ற அதிமுக இன்னும் திருந்தவில்லை, அது ஒழியாமல் தமிழகத்திற்கு விடிவே இல்லை

உச்சநீதிமன்றம் மத்திய அரசின் வரைவு திட்டத்தை தூர எறிந்துவிட்டு வேறு நல்ல தீர்ப்பினை கொடுக்கும் என நம்புவோம்

அணுவுலை, துறைமுகம், மின் திட்டங்கள் இன்னும் ஏராள விஷயங்கள் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்க இந்த அணைகள் மட்டும் மாநில அரசு கையிலா?

அணைகளை தேசிய மயமாக்கி, அனைத்து அணைக‌ளும் அவர்கள் கட்டுபாட்டில் இருப்பதே இங்கு ஒருமைபாட்டை நிலை நிறுத்தும்