காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் என்பதற்கும் , மேற்பார்வை வாரியம் என்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள அதிகார வித்தியாசங்கள் உண்டு

அதனால் மேலாண்மை வாரியம் எனும் உத்தரவிடும் அதிகாரம் கொண்ட அமைப்பே வேண்டுமே தவிர, மேற்பார்வை எனும் மிக்சர் தின்னும் அமைப்பெல்லாம் தேவை இல்லை

காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

கலைஞர் காவேரி கரையில் வளர்ந்தவர், ஜெயாவும் அப்படியே அவர் மைசூரில் வளர்ந்தாலும் அவரின் முன்னோர்கள் திருச்சி திருவரங்கத்தார்

ஜெயாவினை இயக்கியதாக சொல்லபடும் சசிகலாவும் அதே காவேரிபாயும் மன்னார்குடிகாரர்

கிட்டதட்ட தமிழகத்தை ராமசந்திரன் ஆண்ட 10 ஆண்டுகளை தவிர இவர்கள்தான் ஆண்டார்கள், அதிலும் கலைஞர் மத்திய அரசில் எல்லாம் பங்குபெற்றார்

இவர்களுக்கு இது சொந்த ஊர் பிரச்சினையும் கூட, ஆனாலும் காவேரி மீளவில்லை

இந்த ராமர் கோவில் விவகாரமும் இப்படியே

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுதும் கட்டவில்லை, அதாவது அது பெரும்பான்மை அரசு இல்லை என சமாளிக்கலாம்

இப்பொழுது மோடி, யோகி என இருவரும் மிருக பலத்தோடு இருக்கும் நேரம், நினைத்தால் நொடியில் கட்டலாம்

ஏன் கட்டவில்லை?

கட்டினால் உலக அதிருப்தி ஒரு பக்கம் என்பதும், வேலை முடிந்துவிட்டால் அதை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதும் இன்னொரு காரணம்

ஆக என்ன முடிவிற்கு வரமுடியும் என்றால், இங்கு எதை சொல்லி ஆட்சிக்கு வருகின்றார்களோ அதை சத்தியமாக செய்யவே மாட்டார்கள் என்பது புரிகின்றது