காஷ்மீரில் அசாதரண நிலை நிலவுகின்றது

காஷ்மீரில் அசாதரண நிலை நிலவுகின்றது, இந்திய செய்தியினை புறம்தள்ளுங்கள் ஒன்று ஆளும் கட்சிக்கு ஜால்ரா அல்லது தேசத்துக்கு எதிர்ப்பு இந்த இரு பிரிவினை தவிர வேறு பத்திரிகை இந்தியாவில் இல்லை

ஆனால் உலக செய்திகள் அதிர வைக்கின்றன, காஷ்மீருக்கு சுற்றுபயணிகள் வரவேண்டாம் வந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என இந்தியதரப்பில் செய்தி வந்ததாக அவை சொல்கின்றன‌

வழக்கமாக இப்படி இந்திய வரலாற்றில் நடக்காது, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகுவிக்கும் அதன் பின்பே இந்தியா களமிறங்கி அடித்துவிரட்டும்

இம்முறை இந்தியா முந்திகொண்டது

மிக உறுதியான உளவுதகவலை அடுத்து இந்தியா முந்திகொண்டதாக சர்வதெச தகவல்கள் தெரிவிக்கின்றன‌

காஷ்மீர் சிக்கலுக்கு ஒரு முடிவு கண்டுவிடுவது என மத்திய அரசு களமிறங்கி இருப்பது தெரிகின்றது, அதற்கேற்ற அசைவுகளும் தெரிகின்றன‌

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எப் 16 கொடுப்பதாக சொன்னாலும் அதை தங்கள் கட்டுபாட்டில் இருக்குபடி கிடுக்குபிடி போட்டுத்தான் அனுப்புகின்றது

உலக உளவுதகல்களும் அவற்றின் தரவுகளும் அறிவிக்கபடா பெரும் திட்டத்தோடு காஷ்மீரில் இந்தியா களமிறங்கியிருப்பதை உறுதிபடுத்துகின்றன‌

எப்பொழுதும் எதுவும் நடக்கலாம், பஞ்சாபின் பொற்கொவில் சம்பவம் போல கடுமையாக இருக்கலாம் என்கின்றன கணிப்புகள்

செய்தி வர வர உடனுக்குடன் உங்களுக்கு தருகின்றோம்