காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? – கமல்ஹாசன்

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? – கமல்ஹாசன் கேள்வி

மகா மட்டமான அரசியல் அறிதல் துளியுமில்லா , மடத்தனமான அரசியல்வாதி என கமலஹாசன் நிரூபித்துவிட்டார்

இதைவிட ஒரு பெரும் முட்டாள் அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது , அங்கிள் சைமன் கூட இருக்க முடியாது

எங்கே பொதுவாக்கு எடுத்தால் குஜராத்தின் ஜுனாகத் போல இஸ்லாமிய மக்கள் இந்தியா பக்கம் சென்றுவிடுவார்களோ என அஞ்சி போர்தொடுத்த நாடு பாகிஸ்தான்

இந்தியா அல்ல .

இந்தியா முறையாக ஹரிசிங்கின் கோரிக்கைக்கு பின்பே களமிறங்கிற்று

காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிடம் இருக்க, சிறுபகுதி அக்ச்சாய் சின் என சீனாவிடம் இருக்க, இந்தியாவில் இருக்கும் காஷ்மீரில் மட்டும் எப்படி பொதுவாக்கெடுப்பு நடத்த முடியும்?

1949ல் உலகம் இந்தியாவினை நிர்பந்தித்தபொழுது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறாமல் எதுவும் சொல்வதற்கில்லை என்ற இந்திய நிலைப்பாடு இன்றுவரை தொடர்கின்றது

பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீரை அப்படியே வைத்துகொள்ளுமாம், இந்தியா மட்டும் வாக்கெடுக்க வேண்டுமாம்

மிக பெரும் பைத்தியகாரதனமான இந்த உளறலை பொறுத்துகொள்ள நல்ல இந்தியனால் முடியாது

கமலஹாசனுக்கு ஸ்ருமதி ராணி கேட்ட கேள்விதான் சரி

மனிதருக்கு கொஞ்சமும் அரசியல் ஞானமில்லை, அறிவுமில்லை

இந்த மனிதர் கொஞ்சமும் அரசியலுக்கு லாயக்கற்றவர், கமலஹாசன் ஏதும் நாட்டுக்கு செய்வதாக இருந்தால் அரசியலைவிட்டு வெளியேறுதல் நலம்