காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது, சுற்றுலா பயணிகள் அவசரமாக காஷ்மீரை விட்டு நீங்கும் நிலையில் அங்கு தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கபட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌

இப்பொழுதைய காஷ்மீர் ஆட்சியாளர் கவர்ணர் என்றாலும் அவர் ஜீன்ஸ் படத்து தம்பி நாசர் போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார், கையில் சட்டபுத்தகம் இருக்கலாம்

“எனக்கு எதுவும் தெரியாது, சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது,நாளை நடப்பது எனக்கு தெரியாது” என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார்.

இதனிடையே பாகிஸ்தானின் இம்ரான்கான் காஷ்மீரில் பெரும் இன அழிப்பு என நமது ஊர் வைகோ, சைமன் போல கிளம்பிவிட்டார்

சில துப்பாக்கி மோதல்களில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் கொல்லபட்டிருப்பது அவருக்கு கவலை அளித்துவிட்டது, என்ன இருந்தாலும் தீவிரவாதிகளை உருவாக்குவது சாதரண விஷயமா? அவர்கள் கொல்லபட்டால் ஒரு ஆத்திரம் வரும் அல்லவா?

அவர் ஏதோ பேசிகொண்டிருக்கும் பொழுதே இந்தியா தன்நவீன ஏவுகனையினை அதாவது தரையிலிருந்து விண்ணுக்கு பாயும் நவீன ஏவுகனையினை வெற்றிகரமாக சோதித்திருக்கின்றது

அது எப்16 போன்ற நவீன விமானத்தையும் நொறுக்கும் திறன் கொண்டது என்கின்றன தரவுகள்

ஆக காஷ்மீரில் ஏதோ பெரும் திட்டத்துடன் இந்தியா களமிறங்கிவிட்டது நிஜம், பாகிஸ்தான் வந்தால் அதை சந்திக்கவும் இந்தியா தயாராகிவிட்டதும் நிஜம்

எல்லாம் தயார் என்றபின்னும் முக்கிய அறிவிப்பினை ஏன் இன்னும் வெளியிடவில்ல்லை?

அமித்ஷாவின் ஆஸ்தான ஜோதிடருக்கு லேசான குளிர்காய்ச்சலோ என்னவோ இன்னும் தேதி குறிப்பிடபடவில்லை