காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்
காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்
காஷ்மீரில் மட்டுமல்ல, பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதன் அண்டை நாடுகளில் எல்லாம் ஒருவித ஆட்டத்தை தொடங்கியிருக்கின்றார்கள், அதன் நோக்கம் பாகிஸ்தானை ஏதாவது ஒரு நாட்டுடன் சண்டைக்கு இழுத்துவிடுவது
இப்பொழுது பன்னீர் , பழனிச்சாமி மோதலில் நிச்சயம் அதிமுகவில் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும், ஏதாவது திட்டமிடுவார்கள், முன்பு அழகிரி ஸ்டாலின் மோதலில் திமுகவில் சிலர் மகிழ்ந்திருக்கலாம்
பலமிக்க இருவர் மோதினால், அல்லது மோதவிட்டால் நமக்கு லாபம் என்பது சற்று பலஹீனமானவர்கள் செய்யும் தந்திரம்
அதாவது பாகிஸ்தானில் என்ன நடக்கின்றது என அரசுக்கே தெரியவில்லை, பெரும் தீவிரவாத குழப்பம், அந்த அரசே திணறுகின்றது, இங்குதான் குதர்க்கமாக யோசிக்கின்றார்கள் தீவிரவாதிகள்
பாகிஸ்தானின் பலம் அந்த ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிராக அவைகள்தான் உள்நாட்டில் தாக்குகின்றன, இதில்தான் இப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் ராணுவத்தாரே தீவிரவாதிகளின் இலக்கு, கடந்த ஆண்டு ராவல்பிண்டி ராணுவபள்ளி தாக்குதலே அதற்கு சான்று
ஏதாவது ஒரு நாட்டோடு பாகிஸ்தானை மோதவிட்டால், ராணுவ கவனம் எல்லையில் திரும்பும், உள்நாட்டில் நாம் நினைத்ததை செயலாம் எனும் திட்டம் தீவிரவாதிகளிடம் உள்ளது
அதனால் முடிந்தவரை இந்தியாவிடம் சீண்டுகின்றார்கள், பாகிஸ்தான் விஷயத்தில் அதன் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பது இந்தியா, எது பாகிஸ்தான் விளையாட்டு? எது தீவிரவாத விளையாட்டு என்பது நன்றாக தெரிவதால் இந்தியா யோசிக்கின்றது
பாகிஸ்தான் விளையாட்டென்றால் யுத்தம் தீர்வு, ஆனால் தீவிரவாதிகள் சதி என்றால் நிதானமே முக்கியம் என்ற ரீதியில் காய் நகர்த்துகின்றது இந்தியா
இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூளவில்லை என்ற வெறுப்பில் தீவிரவாதிகள் ஈரான் பக்கம் சென்றனர், அங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிகழ்ந்து ஈரானிய வீரர்கள் கொல்லபட்டனர், எந்நேரமும் பாகிஸ்தானி மீது அடிப்போம் என எச்சரிக்கை செய்கின்றது ஈரான், பாகிஸ்தானிடம் சத்தமில்லை
ஈரானிய நிலவரம் வேறு, முன்பு சதாமினை ஏவிவிட்டு ஈரானை தாக்கினார்கள், இப்பொழுது இஸ்ரேலை தவிர அரேபியாவில் ஈரானுக்கு எதிர்கள் இல்லை, அதனால் பாகிஸ்தானை ஏவிவிடும் தந்திரம் இருக்கலாம், அது வல்லரசு விளையாட்டாகவும் இருக்கலாம்
அதே நேரம் தீவிரவாதிகள் திட்டமாகவும் இருக்கலாம்
பாகிஸ்தான் யுத்தத்தை விரும்பவில்லை, இந்தியாவும் விரும்பவில்லை ஆனால் வேறு சிலர் விரும்புகின்றனர். இரு நாடுகளையும் மோதவிடும் லீலை நடக்கின்றது
இந்தியா இந்த தந்திரத்தை புரிந்து நடக்கின்றது , ஆனால் சதிகாரர்களின் ஆட்டம் எல்லை மீறுகின்றது, நேற்று கூட ஒரு ராணுவ அதிகாரியினை காஷ்மீரில் கொன்றிருக்கின்றார்கள்
அவர் விடுப்பில் இருந்திருக்கின்றார், அதுவும் ஆயுதமில்லாமல் இருந்த அவரை தீவிரவாதிகள் வீரமாக சுட்டிருக்கின்றார்கள். இறந்த அதிகாரியும் இஸ்லாமியர். தீவிரவெறிக்கு மதம் ஏது?
அந்த வீரனுக்கு வீரவணக்கம்
காஷ்மீரில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இந்தியா இருக்கின்றது,
இந்தியா கொஞ்சம் ராஜதந்திரமாக செயல்பட்டு ஈரானுடன் நெருங்கி இந்த பிரச்சினையினை பெரும் பிரச்சினையாக மாற்றி சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது கரி பூசலாம், அட்ட்காசமாக செய்யலாம்
ஈரான் ஷியா நாடு, நமது காஷ்மீரிகளும் பெரும்பாலும் ஷியாக்கள், ஒரு ராஜதந்திர நகர்வை இந்தியா செய்யலாம்
ஆனால் இந்தியா செய்யாது, அதுவும் மோடி அரசு செய்யாது, காரணம் ஈரானை விட, அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் மோடிக்கு விருப்பம். இது வேறுமாதிரி அரசியல்
மிக வேகமாக இந்தியா செயல்பட்டு காஷ்மீருக்கு அமைதி கொண்டுவர வேண்டிய நேரமிது, நமது தேசத்தில் எந்த வன்முறையினையும் கட்டுபடுத்தும் அதிகாரமும், கடமையும் அரசுக்கு உண்டு
அப்படி அங்கு பெரும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதிகளை அடக்கும்பொழுது, தமிழகத்தில் எவனாவது மனித உரிமை அது இது என கொடிபிடித்தால் அவனையும் தூக்கிபோட்டு மிதிக்கும் “கடமை”யும் நிச்சயம் உண்டு