காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று… ஜெய்ஹிந்த்
அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார்
அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது
பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது
சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் முத்திரை பதித்த இடங்களும் உண்டு
வஞகமாக தன் குரங்கு சேட்டையினை நரிதந்திரமாக செய்தது பாகிஸ்தான், இந்திய உளவுதுறையின் தோல்வியும் நாம் ஒப்புகொள்ள கூடியது எனினும் பனிபடர்ந்த அம்மலை புவியில சிக்கல் உள்ள இடம் என்பதும் இன்னொரு விஷயம்
போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி அந்த இடத்தை இந்தியா மீட்டது
காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று.
மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள்
உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது,
அந்த போரினை பார்த்தவர்களுக்கு புரியும், அது முஷாரப் ரகசியமாக நடத்திய போர், முதலில் திணறிய இந்தியா கொஞ்சம் உயிர் பலிகளை கொடுதது
பின் சுதாரித்து நிலமையினை அளந்து அடித்தது, இந்திய விமானபடையின் வீரமான அதே நேரம் நுட்பமான தாக்குதலும் பாகிஸ்தானை ஓட வைத்தது
இது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என ராஜதந்திரமாக இந்தியா அடித்த அடியில் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பாகிஸ்தான் ராணுவம் பல்லை கடித்து கொண்டிருந்தது
மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் இன்று, இந்த தோல்வியே பின்பு முஷாரப்புகும் நவாசுக்கும் பெரும் முரண்பாடாய் முடிந்தது
இந்திய எல்லையில் ஊடுருவ வந்த எதிரிகளை அடித்து விரட்டி நம் நிலத்தை நம் ராணுவம் காத்த நாள் இன்று.
அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் ராணுவம் அதன் பின் அப்பக்கம் செல்ல கூடாதாம், செல்லாவிட்டால் என்ன ஆகும் அதேதான் அதே ஊடுருவல் ஆக்கிரமிப்பு, அதே சண்டை.
இப்படி காஷ்மீரை இந்திய ராணுவம் காப்பதன் பெயர்தான் ராணுவ ஆக்கிரமிப்பாம், இதனை சொல்ல கூட்டமும், பேரணிகளும் வேறு
இதனை எல்லாம் இங்குள்ள மனித நேய போராளிகளுக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னர் ஏன் சாடுகின்றார்கள் என்றால் அப்படி காஷ்மீரிலிருந்து பின் இந்தியாவிலிருந்தே இந்திய ராணுவத்தை விரட்டிவிட்டால் இத்தேசம் உடையுமாம், ஈழநாடு, திராவிட நாடு, தனி தமிழ்நாடு எல்லாம் கிடைக்குமாம்
அப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் பேசுவார்கள்
கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்
வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என்ற பாரதியின் வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்
வந்தே மாதரம்…ஜெய் ஹிந்த்