காஷ்மீர் துளி – 28/02/2019 (1)
இப்பொழுதும் அமெரிக்க பாணியில் தாக்கி அபிநந்தனை மீட்க வேண்டும் என சொல்லும் வெறிபிடித்த மூளை மழுங்கிய கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது
இவர்களை பிணையாக கொடுத்துவிட்டு அபிநந்தனை மீட்டால் மிக நல்ல நடவடிக்கையாக இருக்கும்
காற்றுவெளியிடை
மணிரத்னத்திற்கு இப்பொழுதெல்லாம் நேரம் சரியில்லை
அந்த “காற்றுவெளியிடை” இப்பொழுது வரவேண்டிய படம்,
தமிழில் விமானபடை வீரர்களின் கதை என “பார்த்தால் பசிதீரும்” படத்திற்கு பின்பு வந்த கதை அதுதான்
இப்பொழுது வந்தால் படம் பிய்த்து கொண்டு ஓடும், ஆனால் முன்பே வந்து சறுக்கிவிட்ட
***************
“என்னய்யா ஹேர் ஸ்டைல் இது, தமிழ்நாட்டு நடிகர் செந்தில் மாதிரி?
சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாய்யா, இந்தியா பாகிஸ்தான் கூட ஒரு பஞ்சயாத்து பேசவேண்டி இருக்கு , சீக்கிரம்யா”

பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் இம்ரான்கான்
தாவுத் இப்ரஹிமினை கொடுக்கும் வரை, மசூத் அசார் போன்ற , லஷ்கர் இயக்க கமாண்டர் போன்றவர்களை விடுவிக்கும்வரை , தீவிரவாதிகளை கைவிடும் வரை பேச்சு என்பதே கூடாது என்பதுதான் சரியான நிலைப்பாடு
அபிநந்தனை வீடியோ போட்டு காட்டியிருப்பதால் அவரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்பதால் சர்வதேச அளவில் பேசி அவரை விடுவிக்க வேண்டும்
****************
பாகிஸ்தான் எப்16 விமானம் இந்திய பகுதியில் வீழ்த்தபட்டிருந்தால் நிச்சயம் புகைபட ஆதாரமாக இந்தியா கொடுத்திருக்கும், ஏன் தப்பிய அந்த பைலட்டே இந்தியாவில் விழுந்திருப்பார் தூக்கியிருக்கலாம்
ஆனால் அது பாகிஸ்தானின் காஷ்மீரில் விழுந்திருக்கின்றது, அந்த சண்டையில் அபிநந்தனின் விமானமும் வீழ்த்தபட்டு அவர் பிடிபட்டிருக்கின்றார்
அதாவது பாகிஸ்தானில் புகுந்து அடித்த சண்டையில்தான் அவர் பிடிபட்டிருக்கின்றார்
இதை சொன்னால் திரைகதை வசனம் என்கின்றார்கள்
நடந்த மிக யதார்த்தமான உண்மையினை சொன்னாலும் வசனமா?
பராசக்தி முதல் பல படங்களுக்கு வசனம் எழுதியவரின் கட்சிக்காரர்களுக்கு எல்லாமே திரைகதை வசனம் போலவே தெரியும் போல…
குத்தீட்டி, கேடயம், போர்வாள், ஈட்டி, சேனை,தளபதி, போர்களம், முரசு என வாயிலே வடைசுட்ட, பேப்பரிலே பேனாவால் தோசைசுட்ட கட்சி எது என யாருக்கு தெரியாது?
*****************
முதலில் #saynototerrorism என்பதை பாகிஸ்தான் சொல்லட்டும்
#saynotowar என்பதை நாம் உடனே சொல்லலாம்
**************
இந்த இருநாட்களில் கண்டுகொண்ட விஷயம் ஒன்றுதான்
சீக்கிய இனத்திற்கு ராஜ்புத் இனபிரிவுகளுக்கு அடுத்தபடியாக இங்கு நாட்டுபற்றோடு இருப்பது பிராமண இனமே
சீக்கியர்களுக்குள்ள அதே சீற்றம் அவர்களுக்கும் அப்படியே நாடு என்றால் இருக்கின்றது
அதை சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை