காஷ்மீர் விவகாரம்

அரசியல் செய்ய ஆயிரம் காரணம் தேடலாம், ஆனால் சில விஷயங்களை வைத்து அரசியல் செய்ய கூடாது, அதனை சோதித்து பார்ப்பதே தவறு

காஷ்மீருக்கு தன்னாட்சி என காங்கிரஸ் சொல்லியிருப்பது கண்டிக்கதக்கது.

நம்மோடு இணையும்பொழுது என்ன ஒப்பந்தம் போடபட்டதோ அந்த சிறப்பு அந்தஸ்து இன்னும் தொடர்கின்றது, இன்னும் எவ்வளவோ சலுகைகள் கொடுக்கபட்டு கொண்டுதான் இருக்கின்றது.

பல மாநிலம் இருக்கும் நாடு இது, எல்லா மாநிலத்திலும் ஒரு சில அதிருப்தி குரல்கள் கேட்டுகொண்டுதான் இருக்கும். காஷ்மீருக்கு தன்னாட்சி என்றால் மறுநிமிடம் வடகிழக்கில் குரல் கேட்கும், தணிந்திருக்கும் பஞ்சாப் மறுபடியும் எரியும்

சும்மாவே மாநில சுயாட்சி என சொல்லிகொண்டிருக்கும் தமிழகமும் சில கோரிக்கைகள் வைக்கும்

ஆக மிக பொறுப்பான காங்கிரஸ் கட்சி இம்மாதிரி குரல்களை எழுப்ப கூடாது.

காமராஜர், சாஸ்திரி, இந்திரா என எல்லா காங்கிரஸாரும் அழுத்தி சொன்னது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதே, அதனை இவர்கள் மறுக்கின்றார்களா?

தன்னாட்சி என்பதெல்லாம் அங்கு அமைதியினை கொடுக்காது,

காஷ்மீரின் இன்னொரு பகுதி பாகிஸ்தானிடம் இருக்கின்றது, அங்கு ஏதாவது கலவரம், உரிமை குரல் எழும்பி யாரும் கேள்விபட்டதுண்டா?

அவர்கள் கொடுத்திருக்கும் “சுதந்திரம்” அப்படி?

நாமோ நமது காஷ்மீருக்கு எல்லா விஷயங்களிலும் சுதந்திரம் கொடுத்துதான் வைத்திருக்கின்றோம்

பாகிஸ்தான் கையில் இன்னொரு காஷ்மீர் இருக்கும் வரை, இந்திய காஷ்மீரில் இப்போது இருக்கும் நிலை தொடர்வதே நல்லது

காங்கிரஸ் கட்சி இனியாவது கொஞ்சம் பொறுப்போடு பேசவேண்டும்

எத்தனை யுத்தங்களை காஷ்மீருக்காக காங்கிரஸ் நடத்தியது, எத்தனை இழப்புகள்? எத்தனை சோகங்கள்

ஏன் அப்பொழுதே காங்கிரஸ் தன்னாட்சி கொடுத்தால் என்ன? காரணம் அது முடியாது, முடியவே முடியா விஷயம்

தான் செய்யாத விஷயத்தை பாஜகவினை செய்ய சொல்வது அரசியலே அன்றி, அமைதி கொண்டுவரும் விஷயம் அல்ல‌