கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி
அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள்
நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின
கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் டென்னிஸ் வீரர், ஆசிய சாம்பியன் ஆன சாகசம் எல்லாம் உண்டு
பின்னர் அவர் ஐபிர்ஸ் ஆகி காவல்துறைக்கு வந்தபின் அவரின் தைரியமான நடவடிக்கை அவரை ஆச்சரியமாக நோக்க வைத்தது
இந்திரா காந்தியின் கார் நொ பார்க்கிங்கில் நிறுத்தபட்டபொழுது சட்டபடி அதை தூக்கி சென்றவர் கிரண் பேடி, நாடே அப்பொழுது அவரை வித்தியாசமாக நோக்கியது
திகார் ஜெயில்லை ஒரு பெண் சிங்கமாக அவர் புரட்டி எடுத்து சீர்படுத்தியபொழுது அது மாபெரும் துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கபட்டது
தன் ஒரே மகள் சுகவீனமாயிருந்தபொழுது மனரீதியாகவும், பணி ரீதியாகவும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம், அவர் அதை துணிச்சலாக கடந்தார்
தன் நடவடிக்கை முலம் இந்திய பெண்களின் துணிச்சலாக அவர் உலகெல்லாம் அறியபட்டார்
ஐ.நா விருதும், புகழ்பெற்ற ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தன
கணவன் இறந்தபின்பு பொதுவாழ்விற்கு வந்தார், அர்விந்த் கெஜ்ரிவாலின் இயக்கத்தில் இருந்தார், 2015ல் பாஜகவிற்கு வந்தார்
இப்பொழுது பாண்டிச்சேரி கவர்னராக இருந்து நாராயணசாமி குடுமியினை பிடித்து ஆட்டிகொண்டிருக்கின்றார்
இந்திய பெண்களின் மகா துணிச்சலான முகமான அந்த கிரண்பேடி ஏராளமான இந்திய பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்
அவருக்கு இன்று பிறந்தநாள் , அந்த அசாத்திய பெண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
