கிருஷ்ணகரியம்

தங்களுக்கு யாதவாரியம் அல்லது யாதவத்துயம் ஏன் அவசியம் என விளக்குகின்றார், அவரின் பேட்டி இதோ

அய்யா நீர் ஏன் இப்படி யாதவத்தியம் பேச தொடங்கிவிட்டீர்?

இரண்டாயிரம் வருடமாக மட்டுமல்ல பல லட்சம் வருடமாக நாங்கள் தடுக்கபட்டவர்கள், விரட்டபட்டவர்கள்

ஒடுக்கபட்டவர் தெரியும் அதென்ன தடுக்கபட்டவர்?

ஆடு மாடு மேய்க்க விடாமல் எங்களை தடுத்தார்கள், தடுத்து தடுத்து விரட்டினார்கள், அப்படி தடுத்து விரட்டபட்டதால் நாங்கள் தடுக்கபட்டவர்கள்

இது உங்கள் அனுபவமா?

பல லட்சம் ஆண்டுகளாக யாதவ நிலை இதுதான், இதனால்தான் பகவான் கண்ணனே வந்து நாங்கள் வாழ துராவராக நகரை உருவாக்கினான் எங்கள் ஆடுமாடெல்லாம் சந்தோஷமாக மேய்ந்தன, அவன் காலத்துக்கு பின் ஆதிக்க கூட்டம் துவாரகையினை கடலுக்குள் தள்ளிவிட்டது

ஒரு ஊரையே கடலுக்குள் தள்ளமுடியுமா?

ஆதிக்க சாதி கடலை வெட்டி ஊடுக்குள் இழுத்து வந்து பின் மிதித்தே எங்கள் துவாரகையினை கடலுக்குள் அமிழ்த்திவிட்டது

வேறு என்னெல்லாம் இழந்தீர்கள்?

பகவத் கீதையே யாதவர்க்கு கண்ணன் உரைத்தது, கடமையை செய் பலனை எதிர்பாராதே என்றால் என்ன? சொல்லுங்கள்

தெரியவில்லை அய்யா

பசுமாட்டில் 5 மாதம் பாலிருக்கும், 7 மாதம் பாலிருக்காது , பால் இல்லா காலங்களிலும் பசுவினை பராமரி என்பதைத்தான் அப்படி சொன்னார், அந்த நூலையும் திருடினார்கள்

அட பாவமே?

இப்படி துவாரகையில் இருந்த எங்களை அவர்கள் பாலுக்காகவும் இறைச்சிக்காவும் நாடெல்லாம் ஒவ்வொரு இடமாக இழுத்து சென்று அடிமையாக்கினார்கள்

அய்யோ

பால் போல் வெண்மையானவர்கள் நாங்கள் என்பதற்காக வெள்ளை உடை அணிவோம் அதையும் திருடிகொண்டார்கள்

ஏன் அப்படி செய்தார்கள்?

அதுதான் ஆதிக்கம், அக்காலத்தில் வண்டிமாடு , உழவுமாடு, பால், தோல் என எல்லாமும் நாங்கள்தான் கொடுத்து கொண்டிருந்தோம், எங்கள் கைகளைத்தான் நம்பியிருந்தார்கள். இப்படியே இவர்களுக்கு நாம் அடிமையாவதா என திட்டமிட்ட பார்ப்பனரும் இன்னும் பலரும் எங்களை அடிமையாக்கினார்கள்

இதனால் என்ன லாபம் அவர்களுக்கு?

பார்பானுக்கு சல்லி விலையில் நெய்கிடைக்கும், அரசனுக்கு பால் கிடைக்கும், விவசாயிக்கு உரம் கிடைக்கும், இசை சாதிக்கி மேளம் கிடைக்கும், இப்படிஎல்லா சாதியும் எங்களை சுரண்ட அடிமையாக்கிவிட்டார்கள்

இந்த அடிமைதனத்தை நீங்களும் அனுபவித்தீர்களா?

ஆமாம், மேல்சாதி தோட்டம் பக்கம் மாடு கொண்டு சென்றால் கல்லால் அடிப்பார்கள், அவர்கள் பயிறை மேய்வதாக ஓட ஓட கல்வீசுவார்கள், இப்பொழுது சூர்யகுமார் யாதவ் எப்படி சிக்ஸர் அடிக்கிறார் என நினைக்கின்றீர்கள்?

சொல்லுங்கள்

அந்த மேல்சாதி எறிந்த கல்,பனங்காய் எல்லாம் பனைமட்டையால் சமாளித்த அனுபவம் , பல லட்சம் ஆண்டாக வந்த அனுபவம் கைகொடுக்கின்றது

இப்பொழுது யாதவர்கள் படித்துவிட்டார்கள், பெரும் பதவிக்கும் வந்துவிட்டார்கள் இன்னும் சிக்கல் உண்டா?

எல்லோரும் வரவில்லையே , இன்றும் பால் கறக்கும் யாதவர் அவர் பாலுக்கு விலை வைக்கமுடியாது, ஊருக்கே பால் ஊற்றும் அவனுக்கு ஆவினில் சலுகை கிடையாது, ஊருக்கே ஆடு வளர்க்கும் அவனுக்கு இறைச்சிகடை, தோல் செருப்பு கடையில் சலுகை கிடையாது

இட ஒதுக்கீடு கோருகின்றீர்களா?

ஆம், நாங்கள் கேட்பதுதான் உண்மையான இட ஒதுக்கீடு, இந்தியா முழுக்க ஆடுமாடு மேய்த்தவர்களுக்கு இன்று மேய்க்க இடமில்லை, ஊரெல்லாம் கம்பி வேலி காட்டுக்குள் வனதுறை தொல்லை என எங்கள் மாடு மேய இடம் இல்லை அதனை அரசு ஒதுக்கிதரவேண்டும்

எத்தனை சதவீதம்?

33% இந்தியாமுழுக்க எங்கள் மாடு மேய இட ஒதுக்கீடு வேண்டும்

வேறு என்னெல்லாம் வேண்டும்?

ஒரு காலத்தில் கோவிலில் பால் ஊற்றும் சமூகமே கருவறையில் பால் ஊற்றியது, பின்னாளில் அந்த உரிமை மறுக்கபட்டது, எல்லா கோவிலிலும் பாலாபிஷேகம் நாங்கள் செய்ய வேண்டும்

இந்த தேன், சந்தணமெல்லாம்?

நாங்கள் நியாயமானவர்கள் பால், தயிர் , நெய் அபிஷேகம் மட்டும் நாங்கள் செய்வோம், சந்தண அபிஷேகத்தில் தலையிடமாட்டோம், அப்படியே ஜல்லிகட்டில் எங்களுக்கு முன்னுரிமை இன்னும் மாடு ஆடு எங்கெல்லாம் இருக்குமோ, பாலும் நெய்யும் எங்கெல்லாம் புழங்குமோ அங்கெல்லாம் எங்களுக்கு உரிமையும் சலுகையும் வேண்டும், ரயில் விமான பயணங்களில் பாலுக்கு எங்களுக்கு பாதிவிலைதான் வேண்டும்

இதுதானா இன்னும் உண்டா?

ஆடுமாடு தோல் செருப்பாகவும் இசைகருவியாகவும் வருவதால் அவர்களிடமும் எங்களுக்கு சலுகை வேண்டும், காரணம் எல்லாம் எங்களால் வந்தது, நாங்கள் இல்லாவிட்டால் ஏதுமில்லை, எங்களை அவ்வளவு அவமானபடுத்தியிருக்கின்றார்கள்

யார்?

எல்லாரும், நாங்கள் பால் விற்க போனால் வீட்டுக்குள் விடமாட்டார்கள், எங்களை இடையர் அவன் இவன் என கிண்டல் செய்வார்கள், பாரதி கூட இடைசாதி என்றார், காளமேக புலவரும் அதையே சொன்னார் அது இன்றுவரை நீடிக்கின்றது

எப்படி?

ரஜினி கூட அண்ணாமலை படத்தில் பால்கார வேடமிட்டார் ஆனால் தான் ஒரு யாதவர் என அப்படத்தில் அவர் சொல்லவில்லை என்பது எங்களுக்கெல்லாம் பால் கெட்டுவிட்டது போல பெரும் வலி, அந்த அளவு நாங்கள் புறக்கணிக்கபட்டோம், இந்த வலிதான் கோரிக்கைகளை வைக்க சொன்னது

எப்படி உங்கள் கோரிக்கையினை வலியுறுத்துவீர்கள்?

அரசு முறையாக செவிசாய்க்காவிட்டால் நாடெல்லாம் சாலைகளில் மாடுமறியல், ஆடுமறியல் செய்வோம், நடுரோட்டில் ஆட்டுகிடை செய்வோம், ஊருக்குள் எங்கும் மாடுகளை விட்டு சாணிபோட செய்வோம், பால் தயிர் என எதுவும் கிடைக்காதபடி நாங்கள் தெருவில் ஊற்றி போராடுவோம்

இதெல்லாம் சாத்தியமா?

பல லட்சம் ஆண்டாக தடுக்கபட்ட இனத்தின் தர்மம் இது, பாரதம் முழுக்க எங்கள் ஆடுகளும் மாடுகளுமே மேய்ந்தன, இன்று ஆளாளுக்கு அதை பறித்து எங்களை தடுக்கபட்ட்டவனாகிவிட்டார்கள், இதனால் கிருஷ்ணகரியம் வழியில் போராடுவோம்

அதென்ன கிருஷ்ணகரியம்

எங்களுக்க்கு கிருஷ்ணர்தான் தலைவர் அவர் காட்டியவழி கிருஷ்ணகரியம், ஆடுமாடு மேய்க்கும் மக்களுக்கு எல்லா உரிமையும் இடஒதுக்கீடும் மாடுமேய நில ஒதுக்கீடும் வேண்டும், அந்த துவாரகை காலம் மீட்டெடுக்கபட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும், இதுதான் கிருஷ்ணகரியம்