கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் ….
1996களில் இந்த கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, அம்பேத்கரின் மறுபிறவி போல ஆடிகொண்டிருந்தார்.
அந்த அப்பாவி சமூகமும் அவரை நம்பியது. அதனால் இவர் செய்த இம்சைகள் கொஞ்சமல்ல.
சில தேர்தல் முடிவுகள் கூட இவரால் பாதிக்கபட்டு அதிமுகவிற்கு சாதகமாக மாறின
தலைவர்கள், தியாகிகள் பெயரில் இருந்த மாவட்ட பெயர்களும், போக்குவரத்து கழகமும் இவர் செய்த அட்டகாசத்தால் பெயரையும் அடையாளத்தை இழந்து இன்று மொட்டையாய் நிற்கின்றன.
பாரதிராஜாவினை ஏதும் கேட்காமல் கமலஹாசனை மட்டும் இவர் குறிவைத்து அடித்த பொழுதுதான் பலருக்கு இவர் மீது சந்தேகம் வந்தது.
பின்பு மாஞ்ச்சோலை தொழிலாளர்களை போராட்டம் எனும் பெயரில் தாமிரபரணியில் அவர் தள்ளியபின், அதன் பின் அம்மக்கள் வழக்கிற்கு அலையும் பொழுது அவர் அவர்களை கண்டுகொள்ளாத காலங்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மக்கள் புரிந்துகொண்டனர்.
“வஞ்சிக்கபட்ட சமூகத்தின் வரலாற்று சங்கமம் ” என இவர் அழைத்ததில் அச்சமூகம் நம்பியிருக்கின்றது, அந்த வஞ்சிக்கபட்ட சமூகத்தை வஞ்சித்திருக்கின்றார் கி.சாமி
இவர் தாழ்த்தபட்டவர்களுக்காக ஒன்றும் செய்யமாட்டார், இவர் நோக்கம் வேறு என அறிந்தபின் அச்சமுகம் அவரை கைவிட்டது
அதன் பின் அரசியல் அனாதை ஆகியிருந்த கிருஷ்ணசாமி இன்று பாஜகவின் ஜால்ராவாக வந்து நிற்கின்றார்.
எந்த கிருஷ்ணசாமி?
பலருக்கு மறந்திருக்கலாம், ஆனால் தென்னகத்தாருக்கு மறக்க முடியா ரணம் அது.
ஆனால் மிக தந்திரமாக அதனை தமிழக வரலாற்றில் இருந்து எடுத்துவிட்டார்கள்.
இங்கு கீழவெண்மணி அஞ்சலி உண்டு, கீழதூவல் அஞ்சலி உண்டு ஆனால் கொடியன்குளம் அஞ்சலி என யாராவது கேட்டதுண்டா? இல்லை
எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த பல கலவரங்களின் துப்பாக்கி சூடு அஞ்சலிகளை எங்காவது கேட்டதுண்டா? இல்லை
அதாவது அதிமுக ஆட்சியின் படுகொடுரங்கள் திட்டமிட்டு மறைக்கபடும், கொடியன்குளமும் அப்படி மறைக்கபட்டது.
1991ல் ஆட்சிக்கு வந்த சசிகலா, (பின்ன ஜெயலலிதாவா ஆண்டார்?) இனி தமிழக ராணி நான் எனும் மமதையில் ஆண்ட காலத்தில், அந்த தாழ்த்தபட்ட கிராமத்தில் அதிகார வர்க்கம் நடத்திய கொலைவேட்டை அது.
முதுகுளத்தூர், கீழவெண்மணி சம்பவங்களை விட கொடூரமானது அது.
அந்த அதிமுக அராஜகத்தை எதிர்த்துதான் பலர் அச்சமூகத்திலிருந்து அரசியலுக்கு வந்தனர், அவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணசாமி.
அதன் பின் அவர் எப்படி சிலருக்கு செருப்பானார், வில்லில் கணையாணார் என்பதற்கு இப்பொழுது கசிகின்ற செய்திகள், அதாவது ஜெயலலிதாதான் அவர் மகளுக்கு மருத்துவ சீட் கொடுத்தார் என வரும் செய்திகளே சாட்சி.
அடிக்கடி இவர் அதிமுகவுடன் நெருங்கிய காட்சிகளுக்கு இப்பொழுதுதான் விடை தெரிகின்றது.
தன் மீது அச்சமூகம் வைத்திருந்த நம்பிக்கைகளை, தன் சுயநலத்திற்காக பலிகொடுத்திருக்கின்றார் கிருஷ்ணசாமி.
இன்று அதே நன்றிகணக்கில் திமுக மீது பெரும் பழிகளை சுமத்திகொண்டிருக்கின்றார். தாழ்த்தபட்ட மக்களுக்கு அரணாக நிற்கும் திமுக மீதுதான் இந்த பார்ப்பண சிந்தை டாக்டர் பழி சொல்கின்றார்.
வந்த வழி இவருக்கு சுத்தமாய் மறந்துவிட்டது, கொடியன் குள கொடூரம் எல்லாம் அவருக்கு நினைவற்று போயிற்று.
இன்றுவரை அதில் கொல்லபட்டவருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.
அந்த கொடியன் குள ஆன்மாக்கள், தாமிரபரணி ஆன்மாக்கள், பரமக்குடி ஆன்மாக்கள், இப்பொழுது செத்த அனிதாவின் ஆன்மா கூட இவரை நிச்சயம் மன்னிக்காது.
இவரை என்ன சொல்ல, பாரதி சொன்னதுதான்.
“படித்தவன் சூதும் வாதும் செய்தால்
அய்யோண்ணு போவான்”
கிருஷ்ணசாமி பற்றி நான் சொன்னது சொன்னதுதான், அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் : தோழர் பாலபாரதி
உலகில் இன்னும் தைரியமிக்க கம்யூனிஸ்டுகள் வாழ்கின்றார்கள், அதுவும் தமிழகத்தில் வாழ்கின்றார்கள் என நினைக்கும்பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது.
வாழ்த்துக்கள் தோழர்.