கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..

ஈரோட்டு ராம்சாமி விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பெண் விடுதலை வரலாற்று புரட்சியாளராம்

இதை சொல்வதில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இருப்பதுதான் ஆச்சரியம்

அரேபிய கலாச்சாரத்தில் விதவைகளுக்கான இடம் கடுமையானது,

தூய்மையான நபி பெருமான் கதீஜா எனும் விதவையினை திருமணம் செய்து உலகுக்கே முன்மாதிரியாய் திகழ்ந்தார்

வயதில் மூத்த கதீஜா அம்மையார் மகா நல்லவராயும் இறையச்சம் கொண்டவருமாயிருந்ததால் தயக்கமின்றி அவரை மனைவியாக ஏற்றார் நபி பெருமான்

இது அச்சமூகத்துக்கே வழிகாட்டலாய் இருந்தது.

இயேசுவின் வாழ்வு சொல்வதென்ன?

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி கல்லெறிந்து கொல்லபட இருந்தபொழுது “உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்” என சொல்லி அந்த ஆண்கள் கூட்டத்தை விரட்டி அப்பெண்ணை காத்தார் இயேசு

இயேசுவின் வாழ்வு பெண்விடுதலை போராட்ட வாழ்வாகவே இருந்தது, விதவைகள் பாவிகள் என எல்லா ஒதுக்கபட்ட பெண்களுக்கும் அவர் நல்வார்த்தை சொல்லி ஆறுதலும் பாதுகாவலுமாக இருந்தார்

அவரின் புதுமை கானாவூரில் ஒரு பெண்ணின் கண்ணீரை துடைக்க நிகழ்ந்து கடைசியில் உயிர்த்து காட்சி கொடுத்ததும் ஒரு பெண்சீடருக்கே

மகா தூய்மையான நபிபெருமானும், கடவுளின் தேர்ந்தெடுக்கபட்ட மனிதனாக வலம் வந்த இயேசுவும் செய்து காட்டியதை விட, வாழ்ந்து காட்டியதை விடவா ஈரோட்டு ராம்சாமி கிழித்தெறிந்துவிட்டார்

பகுத்தறிவில் இதையெல்லாம் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..