கில்லாடி கிளைவ் : 03

கில்லாடி கிளைவ் : 03

Image may contain: 1 person, standing and outdoor

சென்னை கோட்டைக்கு வந்த கிளைவின் கையில் கால் காசு இல்லை, லண்டனில் அவர் தந்தைக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக நம்பி வந்த கிளைவிற்கு அந்த நபரும் லண்டன் சென்றது பின்னர்தான் தெரிந்தது

சென்னை வெயில் அவருக்கு ஒத்துவரவில்லை, உடல் நலம் கெட்டது, அவருக்காக கொடுக்கபட்ட குமாஸ்தா அறையும் அவருக்கு உகந்ததில்லை

அக்காலங்களில் அவருக்கு ஆறுதலை கொடுத்த இடம் கடற்கரை, கோட்டையின் மாதா கோவில் , அந்த நூலகம்

சென்னை கவர்னர் ஒரு நூலகமும் வைத்திருந்தார், அங்கு விடாபிடியாக வாசித்து நேரத்தை கடத்தினார் கிளைவ்

குமாஸ்தா பணியில் அவருக்கு சிக்கல்கள் வந்தன, உடல் நல கோளாறு, மன நெருக்கடி, சூழல் எல்லாம் அவரை பாதித்திருந்தன, மேலதிகாரிகளுடன் சண்டை எல்லாம் போட்டார்

அத்தோடு சும்மா விட்டாரா? கிளைவிற்கு ஒரு மனசிக்கல் இருந்தது, இந்த 3 படத்தின் தனுஷ் சாயல் அது. உச்சகட்ட மனநெருக்கடிக்கு சென்றுவிட்டால் தற்கொலைக்கு முயற்சிப்பார்

Image may contain: sky, house, grass, tree, outdoor and natureசென்னை கோட்டையிலும் இரண்டுமுறை முயற்சித்தார், ஆனால் ஒருமுறை துப்பாக்கி வெடிக்கவில்லை, இன்னொரு முறை குண்டு காதுபக்கம் உரசி சென்றது. இப்படியாக விதி அவரை காப்பாற்றியது

வேண்டா வெறுப்பாக கிளைவ் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் திணறியபொழுதுதான் ஐரோப்பாவில் வாரிசு உரிமை போர் வெடித்தது

என்ன வாரிசு? யார் யாருக்கு வாரிசு?

ஆஸ்திரியா நாட்டில் சார்லஸ் என்றொரு மன்னன் இருந்தார், அவருக்கு ஆண்வாரிசு இல்லை. இதனால் தனக்கு பின் தன் மகள் மரிய தெரசே ராணி ஆகவேண்டும் என பிரிட்டன் உட்பட்ட நாடுகளிடம் எல்லாம் சொல்லி வைத்துவிட்டு செத்துவிட்டார்

ஆனால் பல்கேரியா எனும் பக்கத்து நாட்டு மன்னன், அவர் எனக்கு தூரத்து உறவு அதனால் அவர் நாட்டுக்கு நானே மன்னன் என சொல்லிகொண்டிருந்தான்

இது பஞ்சாயத்து பேசி முடியாமல் போர் ஆயிற்று

பிரான்சும், ஸ்பெயினும் பல்கேரியா மன்னனுக்கு ஆதரவாய் கிளம்பினார்கள், ஆச்சரியமில்லை பிரிட்டனுக்க்கு எதிராக பிரான்ஸ் அன்று எங்கு நிற்கும்

பிரிட்டனின் பெரும் பலம் கப்பற்படை என்றாலும் ஸ்பெயினும் பிரான்சும் கூடி தாக்கியதில் கொஞ்சம் திணறியது, ஐரோப்பாவில் இந்த யுத்தம் வெடிக்க உலகெல்லாம் இருந்த பிரென்ஞ் முகாம்களிலும் அது தென்பட்டது

அப்படி மொரிஷியஸில் பிரான்சின் கவர்னராக இருந்தவன் லா‍பார்ட்டினே, இவன் இந்திய பகுதியில் சுற்றி திரிந்த பிர்ட்டன் கடற்படையுடன் மோத தொடங்கினான், வாரிசு போர் ஐரோப்பாவினை தொடர்ந்து ஆசிய கடலுக்கும் வந்தது

Image may contain: tree, sky, outdoor and natureஅப்படி பிரிட்டன் படையுடன் மோதியவன் வெற்றியும் பெற்று, பிரிட்டனின் சென்னை கோட்டையினை கைபற்றினான், கம்பெனியாரிடம் அவனை எதிர்க்கும் அளவு பலமில்லை என்பதால் கோட்டை அவனிடம் சரண்டடைந்தது

கிளைவ் அப்பொழுது அங்குதான் இருந்தார், ஆனால் சாதரண குமாஸ்தா என்ன செய்ய முடியும்?

சென்னை கோட்டையில் பிரான்ஸ் கொடி பறந்தது, மொத்த பிரிட்டானியரும் கைது செய்யபட்டனர், கிளைவ் உட்பட‌

கிளைவுக்குள் உறங்கி கொண்டிருந்த மிருகம் அப்பொழுதுதான் விழித்தது

பிரிட்டானியர் நாட்டுபற்று மிக்கவர்கள், பிரான்ஸ் என்றால் ஆகாது. பிரிட்டனின் கோட்டையினை பிரான்ஸ் கைபற்றியதும் தங்களை கைதியாக்கியதும் அவன் உள்ளத்து மிருகத்தை உறும வைத்தது

ஆனால் என்ன செய்யமுடியும்?

லாபார்ட்டினோ பிரிட்டன் அரசுக்கு நிபந்தனை வைத்தான், ஏராளமான பணம் கொடுக்கும் வரை, யுத்ததிற்கு நஷ்ட ஈடு கொடுக்கும் வரை கோட்டை எங்கள் கட்டுபாடு யாரையும் விடுவிக்க முடியாது என சொல்லிவிட்டான்

இந்த செய்தி கேள்விபட்டு ஓடிவந்தான் புதுச்சேரி டூப்ளே, ஏற்கனவே இந்தியா முழுக்க பிரான்ஸ் ஆளப்போகின்றது என சொல்லிகொண்டிருந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்? பெரும் மகிழ்ச்சி

எனினும் லா‍‍‍பார்ட்டினோவிடம் நீ மொரிஷியசுக்குத்தான் பொறுப்பு, இந்தியாவிற்கு நானே பொறுப்பு என சொல்லி அவனை விரட்டிவிட்டு கோட்டையினை பிடித்தான்

டூப்ளேக்கு தான் இந்தியாவினை ஆளபோகின்றோம் எனும் கனவு இருந்ததால் அவன் சொன்னான், இனி புதுச்சேரியே தலமையகம் ,இந்த சென்னை கோட்டை தேவை இல்லை இடித்துவிடலாம்

ஆனால் இடித்துபோடவில்லை என்றாலும் முக்கியமான பகுதிகளை சேதபடுத்தினான் என்கின்றது வரலாறு

அத்தோடு கோட்டையின் பொருட்கள், செல்வம், தங்கம் முக்கியமாக பிடித்த பிரிட்டானியரோடு புதுச்சேரிக்கு சென்றான்

எப்படி சென்றான் பிரிட்டனின் சென்னை கவர்ணர் உள்ளிட்ட பெரும் புள்ளிகளையும், அதிகாரிகளையும், குமாஸ்தாக்களையும் விலங்கிட்டு புதுச்சேரி தெரு வழியாக மக்கள் பார்க்க பெருமையுடன் இழுத்து சென்றான்

பிரான்ஸ்காரன் கையிலே சிக்கியது அவமானம் என்றிருந்த கிளைவிற்கு இந்தியர் முன்னிலையில் தெரு தெருவாய் இழுத்து சென்றது பெரும் அவமானத்தை கொடுத்தது

புதுச்சேரியில் அடைபட்ட கிளைவ் தூங்கவில்லை, அவனின் மன உளைச்சல், நோய், பிரிட்டன் பிரிவு எல்லாம் நொடியில் மறைந்து டூப்ளேயிடம் பெற்ற அவமானமே மனம் முழுக்க நிறைந்திருந்தது

ஒரு அமாவாசை அன்று புதுச்சேரி சிறையில் இருந்து தப்பினான் கிளைவ், இஸ்லாமியர் போல் மாறுவேடம் போட்டுகொண்டு வியாபாரி போல் நடித்து புதுச்சேரியினை கடந்து வெளிவந்தான்

அப்பொழுது கடலூரில் டேவிட் கோட்டை என கிழக்கிந்திய கம்பெனிக்கு சிறிய அலுவலகம் இருந்தது, அங்கு வந்து சேர்ந்தான், அப்பொழுது அங்கிருந்த அதிகாரிகளிடம் கண்களில் கோபம் சிவக்க கேட்டான்

(அந்த கோட்டை இன்று அழிந்து கிடக்கின்றது, கிளைவ் புலியான இடம் அதுதான்)

நான் இனி குமாஸ்தா வேலை செய்யபோவதில்லை என்னை ராணுவத்திற்கு மாற்றுங்கள்

அதுவரை அவனை சண்டைக்கு பயன்படுத்த திட்டமே இல்லா மேலதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை

கிளைவ் கோபத்தில் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தான்

சரி, அதோ நிற்கின்றானே மல்யுத்த வீரன் அவனை வெல்ல கூட வேண்டாம், கீழே தள்ளிவிட்டு வா பார்க்கலாம் என அவனை இன்னும் அவமானபடுத்தினர் மேலதிகாரிகள்

சென்ற வேகத்தில் சில நொடிகளில் அவனை வீழ்த்திகாட்டினான் கிளைவ்

அந்த கோட்டை அவனை விசித்திரமாய் நோக்கியது. அவனின் தைரியத்திற்கும் வேகத்திற்கும் ராணுவபணி சரி என சேர்த்துகொண்டனர்

கடலூர் டேவிட் கோட்டையில்தான் அவன் ராணுவ வீரன் ஆனான்

கொஞ்ச நாட்களில் ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் சமாதானமாக சென்னை கோட்டை பிரிட்டானியருக்கே திருப்பி கொடுக்கபட்டது

(சென்னை கோட்டை அப்படியே பிரான்ஸ் கையிலிருந்திருந்தால் இப்பொழுது இன்னொரு புதுச்சேரியாக சென்னை இருந்திருக்கும், இப்பொழுது கிரண்பேடியுடன் பழனிச்சாமி மோதிகொண்டிருப்பார்

டாஸ்மாக் எல்லாம் வராமலே போயிருக்கும்)

புதுச்சேரி ஆகும் யோகத்தை சென்னை இழந்தது.

அங்கு மறுபடி வந்தான் கிளைவ், ஆனால் இப்பொழுது ராணுவ வீரன் அல்லவா? பிரெஞ்ச்காரர்களை பழிதீர்க்க சமயம் பார்த்துகொண்டே வந்தான்

ஆனால் சென்னை கோட்டைக்கு வந்ததும் ராணுவத்தில் இருந்து குமாஸ்தா வேலைக்கு மாற்றபட்டான் கிளைவ்

ஏன் என கேட்டால் இனி யுத்தமில்லை ஒழுங்காக கணக்கு எழுது போ என்றார்கள்

ஆயினும் அப்பொழுது தளபதியாக இருந்த லாரன்ஸ் என்பவருக்கு கிளைவ் வேல் நல்ல அபிப்ராயம் இருந்தது, சிறிய சண்டைகளில் அவரை பங்கெடுக்க செய்தார்

சிறிய சண்டை என்றால் கடற்கொள்ளை தகறாது , ஏதும் வெள்ளையருக்கு எதிரான சண்டை போன்றவை

ஆனால் சண்டைமுடிந்தவுடன் கிளைவினை குமாஸ்தா வேலைக்கு அனுப்பவும் அவர் தயங்கவில்லை

குமாஸ்தாவாகவும் சில நேரம் ராணுவபணி என்றிருந்த கிளைவின் மனம் மட்டும் டூப்ளேவினை பழிவாங்க தேடிகொண்டே இருந்தது

ஆனால் அது சாத்தியமில்லை என லாரன்சே சொன்னாலும் கிளைவ் நம்பிகொண்டே இருந்தான்

அதற்கான வாய்ப்பு ஆற்காடு நவாப் குடும்பத்தின் மூலம் வந்தது, அங்கும் வாரிசு உரிமைபோர் ஏற்பட்டது

நிலமைகளை பிரிட்டிசார் கவனிக்காமல் விட்டனர், கவனித்து என்ன ஆகபோகின்றது என்பது அவர்கள் எண்ணம்

காரணம் ஆற்காடு நவாபின் படையும் அவரின் செல்வாக்கும் பெரிது, முகலாயருக்கு கட்டுபட்டவர் எனும் பெரும் பாதுகாப்பு வேறு

அதனால் பிரிட்டானியர் அவர் வழிக்கு செல்லவில்லை, வியாபாரத்தில் குறியாய் இருந்தனர்

ஆனால் கிளைவோ அங்கு ஒரு கண் அல்ல, இரு கண்களையும் வைத்து பார்த்துகொண்டே இருந்தான்

தொடரும்…