கில்லாடி கிளைவ் : 05

கில்லாடி கிளைவ் : 05

Image may contain: one or more people

கொஞ்சமும் அனுபவமில்லா படையினை அதுவும் ஆயிரம் பேருக்கு குறைவானவர்களை கொண்ட படையுடன் ஆற்காடு கோட்டைக்குள் நுழைந்தான் கிளைவ்

கிளைவின் பெரும் பலம் வேகம், அவனது வேகத்த்தில் அர்த்தமும் இருந்தது. சாந்தா சாகிப்பும் டூப்ளேவும் திருச்சியில் மல்லுகட்டும்பொழுது இங்கு யார் இருக்கபோகின்றார்கள்

அவன் வந்த வேகத்திலே ஆற்காட்டில் இருந்த வீரர்கள் ஓடினார்கள், ஒரு தோட்டா கூட வீணாக்காமல் ஆற்காட்டை பிடித்தான் கிளைவ்

அத்துடன் பெரும் போருக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை சேர்க்க உத்தரவிட்டான், எல்லாம் உடனே திரட்டபட்டது, இனி கோட்டை கதவுகளை மூட வேண்டியதான்

மூடும் முன் அவனுக்கொரு யோசனை வந்தது , தப்பி ஓடிய வீரர்கள் வந்துவிட்டால்… அதனால் தேடினான் அந்த கோஷ்டி கட்டளை இட தலைவன் இல்லாததால் கோட்டையின் மறுபுறம் ஓளிந்திருந்தது, நள்ளிரவில் அவர்களை தாக்கி பலரை கொன்றான் கிளைவ், எஞ்சியவர் தப்பி ஓடினர்

கிளைவ் பக்கம் ஒரு இழப்புமில்லை மாறாக சாந்தா சாகிப்பின் ஆயுதங்கள் கிடைத்தன, கோட்டைக்குள் ஆயுத கஜானாவும் இருந்தது, பெரும் தொகையில் உணவும் சேர்த்துகொண்டார்

மெல்ல விஷயம் திருச்சி காவேரி ஆற்றங்கரையில் நின்று கொண்டு மலைக்கோட்டையினை பார்த்துகொண்டிருந்த சாந்தா சாகிப் காதிற்கு சென்றது

முதலில் அவனால் நம்ப முடியவில்லை, என்னது? பிரிட்டானியரா? ஆற்காட்டையா? அங்கு எவன் உண்டு? லாரன்ஸ் என்றொருவன் உண்டு அவனும் லண்டனுக்கு சென்றுவிட்டான், பின்னர் யார்?

அதுவும் தென்னகத்தின் நவாப் இந்த சாந்தா சாகிப்பை, அதுவும் மாவீரன் டூப்ளேவின் ஆசிபெற்ற என்னை எதிர்ப்பது யார்? கோபத்தில் குதித்து கேட்டான் சாந்தா சாகிப்

யாரவன்?

ராபர்ட் கிளைவ்

இதுவரை என்ன சாதித்தான்?

ஒன்றுமில்லை

வயது என்ன?

25

யுத்த அனுபவம்

இதுதான் அவன் வாழ்வில் உருப்படியாக பெற்ற முதல் வெற்றி

குழம்பினான் சாந்தா சாகிப், டூப்ளே பாண்டிச்சேரியில் இருந்தார் விஷயத்தை சொன்னான்

சாந்தா சாகிப்பின் மகன் சாய்பு தலமையில் 5 ஆயிரம் பேர்கொண்ட படை திரண்டது, வேலூரில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் வந்தனர் , டூப்ளே தன் படைபிரிவினை அனுப்பினார்

மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை ஆற்காட்டை வந்ததடைந்தது, இதில் சாந்தா சாகிப் அனுப்பிய 5 ஆயிரம் பேரில் ஒருவனே சாஹிப், அப்படி சொன்னால் புரியாது தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மருத நாயகம்

ஆற்காடு கோட்டை அவ்வளவு வலுவாக இல்லை, கொத்தளம் சாய்ந்திருந்தது, அகழிகள் பாழ்பட்டிருந்தன, இன்னும் ஏக ஓட்டைகள்

கிளைவுடன் வந்தவர்களில் 100 பேருக்கு மேல் நோயில் இறந்தனர், கிளைவுக்கும் உடல்நிலை சரியில்லை

ஆற்காடு முற்றுகை இருமாதம் நீடித்தது, உணவு பற்றாக்குறை வந்தது, வெளியில் இருந்த பெரும் படை கோட்டை சுவரை பீரங்கியால் நாசம் செய்தது

ஆனால் கிளைவ் அசரவில்லை மிக சிறந்த திட்டம், கவனம், முன்னேற்பாடு என யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார், கோட்டையினை கைபற்ற முடியாமல் தவித்தான் சாயுப்

இந்நிலையில் கொஞ்ச நேரத்தில் கிளைவின் உடல் அல்லது தலை வரும் என எதிர்பார்த்திருந்த சென்னை கோட்டை பிரிட்டானியருக்கு கோட்டையில் கிளைவ் தாக்கு பிடித்து நிற்கின்றார் என்ற செய்தி மகா ஆச்சரியத்தை கொடுத்தது

அவருக்கு உதவும் விதமாக மராட்டிய கும்பலில் ஒருவனான மோராரி ராவ் எனும் அக்கால தாதாவிடம் கேட்டார்கள், அவன் கூலிக்கு அனுப்ப ஒரு படை வைத்திருந்தான்

ஆனால் “சாந்தா சாகிப்புக்கு எதிராக வரமுடியாது, பிரென்ஞ் படை என் அடியாட்களை முழுக்க கொன்றுவிடும், பின் இப்படிபட்ட அயோக்கியர்களை எங்கே தேடுவேன்?” என சொல்லி மறுத்துவிட்டான்

முற்றுகை வலுத்தது, கோட்டைக்குள் உணவுபஞ்சம் ஏற்பட்டது

அப்பொழுது இந்திய வீரர்கள் கிளைவிடம் சொன்னார்கள், “அய்யா நாங்கள் இந்தியர்கள் கஞ்சி குடித்து பசியாறுவோம், நீங்கள் சோறு உண்ணுங்கள், கஞ்சி குடித்துகொள்ள மாட்டீர்கள் , அதனால் எங்களுக்கு கொஞ்சம் அரிசி போதும், நீங்கள் நன்றாய் உண்ணுங்கள்”

அஞ்சா நெஞ்சனான கிளைவ் கண்கள் கலங்கிவிட்டான், ஏன் என கேட்டான்?

“நீங்கள் எம் எஜமான், அந்த விசுவாசத்தை நாங்கள் விடமாட்டோம்” இந்த வரிகளில் இந்தியர் மீதான அபிமானம் அவனுக்கு கூடிற்று. விசுவாசமிக்கவர்கள் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் என முதலில் லண்டனுக்கு கடிதம் எழுத கிளைவின் சாட்சியாக நின்ற தமிழர் நின்ற இடம் இதுதான்

யுத்தம் வலுத்து நிற்க சாந்தா சாகிப் படைகளால் உள் நுழைய முடியவில்லை, நாட்கள் கடந்துகொண்டிருந்தன‌

அங்கே வருமானம் இன்றி இருந்த மொரார் ராவ் இன்னும் வெல்லமுடியாவிட்டால் பிரிட்டானியர் வலுவானர் என எண்ணிகொண்டு கிளைவிற்கு உதவ முன்வந்தான்

அவன் டாக்டர் ராமதாஸ் போன்றவன் போலிருக்கின்றது, எந்த பக்கம் வெல்லுமோ அந்தபக்கம் சரிந்துவிடுவது அவன் ஸ்டைல்

அவன் வந்துவிட்டால் ஆபத்து என உணர்ந்த ராஜா சாய்பு தந்திர திட்டமிட்டான்

உண்மையில் அவன் வந்திருந்தால் கோட்டைக்கு வெளியே மோதியிருப்பார்கள் கோட்டை திறந்தால் கிளைவின் உண்மையான பலம் தெரிந்திருக்கும்

ஆனால் பயந்த ராஜா சாய்பு தன் அடுத்த திட்டத்தை கையில் எடுத்தான்

ஆம் கிளைவிற்கு ஓலை அனுப்பினான், எப்படி?

இந்தியாவில் அன்றிருந்த கலாச்சாரமான லஞ்சத்தை கொடுப்பதாக சொன்னான், பதிலுக்கு கிளைவ் தன் படையில் சேரவேண்டும்

தன் வீரத்தின் முன்னால் எதிரி பணிந்துவிட்டான் என்பதை உணர்ந்த கிளைவிற்கு மனதளவில் பலம் கூடிற்று , ஆனால் அந்த விஷயத்தை நம்பமுடியவில்லை

போர்களத்தில் லஞ்சமா? ஐரோப்பாவில் அப்படி எல்லாம் இல்லையே? இந்தியாவில் சாத்தியமா?

இங்கு லஞ்சம் மிகபெரும் ஆயுதம் , அதனால் எவ்வளவும் சாதிக்கலாம் என உணர்ந்தான்

சுத்தமான வீரனுக்கு லஞ்சத்தை அறிமுகபடுத்தியது இந்தியாவே, பின்னாலில் லஞ்சக்காரன் என்றும் பணம் கொடுத்து காரியம் சாதித்தவன் என்றெல்லாம் பெயர் பெற்ற கிளைவிற்கு லஞ்சத்தை அறிமுகபடுத்தியன் சாந்தா சாகிப்பின் மகன் சாய்பு

அன்றே கிளைவ் லஞ்சத்தை ஏற்றிருந்தால் இந்திய வரலாறு மாறி இருக்காது, அவன் கில்லாடி. இங்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமே தவிர வாங்க கூடாது என்பதில் கவனமாயிருந்தான்

லஞ்சம் வாங்காத கிளைவ் மேல் சாய்பு கடும் கோபமுற்றான், இறுதியில் எச்சரித்தான்

5 நாட்களுக்குள் சரணடையாவிட்டால் கோட்டையினை தகர்த்து உனக்கு சமாதி கட்டிவிடுவேன் ஜாக்கிரதை

கிளைவ் யோசித்தான், 2 மாதமாக மோதிகொண்டிருந்தவன் இந்த 5 நாள் அவகாசம் ஏன் கொடுக்கின்றான்? அவனின் சிந்தனை ஆழமானது

அப்பொழுதுதான் அவனுக்கு சொன்னார்கள், “5 நாளில் மொகரம் வரபோகின்றது, அன்று இறப்பவர்கள் நேரே சொர்க்கத்துக்கு செல்வார்கள், அங்கு கன்னிபெண்கள் எல்லாம் இவர்களை வரவேற்பார்கள் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை

சாய்புவின் படையில் இஸ்லாமியர் நிறைய இருப்பதால் அன்று உற்சாகமாய் சண்டை இடுவார்கள் என நம்புகின்றார் அவர்”

இதற்குத்தான் நம்புகின்றானா, அவனை அன்றே அவன் நம்பிக்கை பொய்க்காதபடி அனுப்பிவிடுவோம் என சொல்லிகொண்டான் கிளைவ்

அந்த மொகரமும் வந்தது, சொர்க்கம் காண சாய்புவின் வீரர்கள் தயாரானார்கள். அக்கால வழக்கபடி சண்டை கோழிக்கு கொடுக்கபடும் ஒருவித போதை லாகிரியினை கொடுத்து அவர்களை அனுப்பினான் சாய்பு

அன்று கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தான் போலும், யுத்தம் தொடங்கியவுடன் தன் யானை படையினை ஏவினான் சாய்பு

அதுதான் கோட்டை கதவினை உடைத்து உட்செல்லும் வியூகம்

யானை கோட்டை கதவை தாக்க, கிளைவ் தன் பீரங்கி படைக்கு உத்தரவிட்டான், ஆம் வழக்கமாக கோட்டைகளை தகர்க்க பயன்படும் பீரங்கிகுண்டுகள் யானைகளை நோக்கி செலுத்தபட்டன‌

அது அதுவரை யாரும் செய்யாத முயற்சி, அடிபட்ட யானைகள் பிளிறிகொண்டு ஓடின, ஓடும்பொழுது சொந்த படைகளையே மிதித்து கொன்று ஓடின‌

சாய்பு எதிர்பார்க்கவில்லை, அகழி வழியாக கட்டுமரங்களை இறக்கி கோட்டையினை கைபற்ற உத்தரவிட்டான்

பதிலுக்கு கிளைவ் வீரர்கள் தவித்து நிற்க, கிளைவே முன்னால் நின்று எப்படி அவர்களை தடுக்க வேண்டும் என சொல்லி கொடுத்தார்

கோட்டை பாதுகாப்பு , தற்காப்பு பின் தாக்குதல் என எல்லா பக்கமும் சுழன்று சுழன்று சண்டையிட்டான் கிளைவ், சோர்ந்த நேரமெல்லாம் வீரர்கள் முன்வந்து சண்டையிட்டு ஊக்கமும் கொடுத்தான்

முதல் முறை கோட்டை அருகே வந்த படைவீரர்கள் கிளைவின் துப்பாக்கி மழைக்கு பலியாகி பின்னால் ஓடினார்கள்

பின் மொகரத்தில் இறக்காவிட்டால் சொர்க்கம் கிடைக்காது என மறுபடியும் இரண்டாம் முறை மோதினர், அப்பொழுதும் தோல்வி

கிளைவின் யுத்த வியூகமும், மிக நுட்பமான யுத்தமும் அவர்களை விரட்டியது

கிட்டதட்ட 24 வயதில் நெப்போலியன் காட்டி நின்ற போர்க்கள சாகசங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது கிளைவின் அந்த வீரப்போர்

மறுபடியும் பின் வாங்கினர் எதிர்படையினர்

இம்முறை சொர்க்கம் உறுதி என தங்கள் முழுபலத்துடன் பாய்ந்தனர்

கிளைவும் இருமுறை வென்ற உத்வேகத்தில் கடும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்

கிட்டதட்ட 500 பேரை இழந்த வெறியுடன் சாந்தாசாகிப் படை சுனாமி போல பாய்ந்தது

தொடரும்..