கில்லாடி கிளைவ் : 08

அது 1754ம் வருடம், லெப்டினல் கர்னல் என்ற பட்டத்துடன் இந்தியா திரும்பினார் கிளைவ்

அப்பொழுது மாவீரன் சத்ரபதி சிவாஜி இறந்து 80 வருடம் ஆகி இருந்தது, அவன் அரசு வலுவோடு இல்லை ஆனால் அழிந்துவிடவும் இல்லை

அப்பொழுது கொடூரமான கொள்ளை கூட்டங்களும் ஆங்காகங்கு தோன்றின, உண்மையில் பல இனங்களை அடக்கி ஒன்று சேர்த்து மாவீரன் சிவாஜி பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருந்தான்

அப்பொழுதே பிரிட்டிசார் பம்பாயில் வியாராம் செய்தாலும் அதிகாரம் செய்யும் திட்டமெல்லாம் இல்லை, சிவாஜி பிரிட்டானியரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தான்

கம்பெனியாரும் நாம் வியாபாரம் செய்யத்தான் லாயக்கு என பம்பாயில் செய்துகொண்டிருந்தனர்

அவனுக்கு பின் அது சிதறியது, அரசு ஒருபக்கம் கொள்ளை கூட்டம், கூலிபடை இன்னொரு பக்கம் என பெருகிற்று

அப்படி ஒரு கொடூர கொள்ளை கூட்டம், பம்பாய்க்கு தெற்கே இருந்தது, விஜயதுர்க்கம் என அந்த தீவிற்கு பெயர் அதிலிருந்த கொள்ளை கும்பலின் பெயர் ஆங்கிரியா

அது தீரன் அதிகாரம் சினிமாவில் வருவது போல பவேரியா போன்ற கொடூர கொள்ளை கும்பல், இப்பொழுது ஏடன் வளைகுடாவில் கப்பலை கொள்ளையிடும் சோமாலியர்கள் எல்லாம் அதனருகில் வரமுடியாது

கம்பெனி கப்பல்கள் எல்லாம் கொள்ளையிடபட்டன, பிரிட்டிஷ் கப்பல் மட்டுமல்ல போர்த்துகீசிய கப்பல்களும் அடிபட்டன‌

அந்த கொடூர கும்பலான ஆங்கிரியா கும்பலை அடக்கத்தான் கிளைவ் நேரடியாக சென்றார்

கிளைவோடு இம்முறை வாட்சன் எனும் கடற்படை தளபதியும் அவனுக்கு வலுசேர்க்க வந்திருந்தார், காரணம் கிளைவ் தரைபோரில் கில்லாடி ஆனால் கடல் அனுபவம் போதாது

இதனால் வாட்சன் கடல்வழி முற்றுகையும், கிளைவ் தீவில் இறங்கியும் தாக்கினர், ஆங்கிரியா கும்பலை சோலி முடித்தார் கிளைவ், கொள்ளை கும்பல் வைத்திருந்த ஏராளமான பணமும் தங்கமும் மீட்கபட்டது, அதில் கொஞ்சம் வாட்சனுக்கும் கிளைவிற்கும் போனது

ஆங்கிரியாக்களை அடக்கியபின் சென்னை கோட்டைக்கு வந்தார் கிளைவ்

இந்தியாவில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்றே லெப்டினென்ட் கர்னல் பட்டமும், கவர்னர் பட்டமும் அவருக்கு கொடுக்கபட்டது

கம்பெனியின் போர்டு ஆப் டைரக்டர்ஸ் எனும் குழுவும் அவர்மேல் பெரும் சுமை சுமத்தி அனுப்பி இருந்தது. நிறைய சம்பாதித்து கிழகிந்திய கம்பெனியினை வளர்க்க வேண்டும் என்ற வெறி ஊசி போட்டு அனுப்பி இருந்தார்கள்

கிளைவ் எனும் மாவீரன் முதலாளிகளுக்கு பதில் சொல்லி ஆகவேண்டிய நிலை, இப்பொழுது சென்னையில் அவர்களுக்கு நல்ல வியாபாரம், எதிரிகள் இல்லை. டூப்ளே பிரான்ஸ் சென்று இறந்தபின்பு பிரெஞ்ச்காரர் சத்தமே இல்லை

இனி மற்ற இடங்களில் கவனம் செலுத்த சிந்தித்தார் கிளைவ்

அந்நேரம் பிரென்ஞ், போர்ச்சுக்கல், டச்சு ஆகிய நாடுகளும் இங்கு வியாபாரம் செய்தன, அவர்களுக்குள் சில எல்லை கோடுகளும் இருந்தன‌

ஐரோப்பிய வாரிசு உரிமைக்காக நடந்த போரின் தொடர்ச்சியாக அப்படியே ஏதோ ஆற்காடு நவாப் குடும்பத்திற்காக உள்ளே போய் பிரிட்டானியாரும் பிரெஞ்ச்காரரும் மோதி கிளைவ் எனும் மாவீரனால் ஆற்காடு சமஸ்தானம் பிரிட்டானியர் ஆதிக்கத்தில் இருக்கலாம்

அதற்காக எல்லா இடத்திலுமா முடியும்? மும்பை, சென்னை, கல்கத்தா என முக்கிய பகுதிகளில் பிரிட்டிசார் இருந்தனர்

கோவா, டையூ , கோழிக்கோடு சென்னையின் சில பகுதிகள் போர்த்துகீசியர் கையில் இருந்தனர், வங்காளத்தில் பெட்டிகடை வைத்திருந்தனர்

இந்தியாவினை விட தொடக்கத்தில் இலங்கையில் போர்ச்சுகீசியர் அதிக கவனம் செலுத்தினர், காரணம் கேரள மிளகு போலவே இலங்கையின் லவங்க பட்டைக்கு கிராக்கி அதிகம்

டச்சுக்காரர்கள் கொச்சி, குளச்சல் பக்கம், மசூலிபட்டினம் என வலுவாக இருந்தார்கள்

பிரான்சுக்கு கேரளத்தில் மாஹி, தமிழகத்தில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால், ஒரிசா பக்கம் யானோன், அப்படியே கல்கத்தா பக்கம் சந்திரநாகூர் என பல ஏரியாக்கள்

ஐரோப்பியர் தங்களுக்குள் பாகம் பிரித்து வியாபாரம் செய்த வரலாறு இது

இப்பொழுது கேரளாவில் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் டச்சுக்காரர், போர்த்துகீசியரோடு மல்லுகட்ட வேண்டும், பிரான்சும் உண்டு

பம்பாய் வெள்ளையருக்கானது சூரத்தும் உண்டு இதனால் கேரளா பக்கம் செல்வது அரிது

என்ன செய்யலாம், கிளைவின் கண் இரு இடங்கள் மேல் விழுந்தது ஆம் அவை இரண்டும் வலுவான மிக செழிப்பான இடங்கள்

ஒன்று பஞ்சாப், இன்னொன்று வங்கம்

இதில் பஞ்சாபில் சீக்கியர் வலுவாக‌ இருந்தனர், இன்னொன்று அதை அடைவது சிக்கலான நிலவழி இன்னபிற, சில வலுவான அரசுகளும் இருந்தன‌

ஆனால் வங்காளம் அன்று அதைவிட செழிப்பாய் இருந்தது

கங்கை நதியின் டெல்டா பகுதி அது, கங்கை பல ஆறுகளாக பிரிந்து வங்காளத்தை எப்பொழுதும் பசுமையாகவே வைத்திருந்தது, நெல் என்பது அளவுக்கு மீறி விளைந்தது

வங்க காடுகளில் புலிகளும் மான்களும் செழித்திருந்தன, புலிகளின் வேட்டை பொருட்களுக்கான சந்தையே இருந்தது

கரும்பும், பருத்தியும் அதிகம் விளைந்தன, மெல்லிய துணி அங்கு நெய்யபட்டது அதற்கு ஐரோப்பாவில் கனத்த வரவேற்பு இருந்தது

காய்கறிகள் எக்கசக்கம் விளைந்தன, கடலிலும் ஆற்றிலும் மீன் வளமும் நிறைந்திருந்தது, உப்பு வியாபாரமும் நடந்தது

மொத்த்தில் இந்தியாவின் மிக வளமான பகுதியாகவும் , பெரும் ஆலயங்கள் கொண்ட மக்கள் எப்பொழுதும் குவியும் இடமாகவும் வங்கம் இருந்தது

இதனால் ஹூக்ளி ஆற்றின் கரையில் பிரெஞ்ச்காரர்கள் சந்திரநாகூர் எனுமிடத்தில் கோட்டை கட்டினர், டச்சுக்காரர் சின்சுரா ஆற்றங்கரையில் இருந்தார்கள்

ஹூக்ளி நதிகரையில் வில்லியம்கோட்டை பிரிட்டானியருக்காக இருந்தது, கிளைவ் அதில்தான் கால் வைத்து வியாபாரத்தை பெருக்க எண்ணினார்

ஆனால் கல்கத்தாவிற்கு இன்னொரு கவர்னர் இருந்ததால், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுவிட்டு சென்னை வந்தார் கிளைவ்

வில்லியம் கோட்டையினை சுற்றி மாதா கோவிலும் வந்தது சில குடோன்களும் வந்தது, முதலைகள் வாழ்ந்த அந்த சேறுபகுதி சென்னையில் கருப்பர் நகரம் ஆனது போல் நகரமானது

கிளைவ் அந்த தங்கம் விளைந்த வங்கத்தை நோட்டமிட்டான், அங்குள்ள நிலமையினை ஆராய்ந்தான்

அன்று வங்கம் என்பது தனியாக அல்ல, இன்றைய வங்கம் (இன்றைய வங்கதேசமும் அடக்கி), பீகார், ஒரிசா என மூன்றும் கலந்த தேசமாக இருந்தது, அது முகலாய சாம்ராயத்தின் அங்கமாகவும் இருந்தது

முகலாய சாம்ராஜ்யம் சரியும் பொழுது தெற்கே ஆற்காடு நவாப் தனி ஆவர்த்தனம் செய்தது போல அங்கே அன்வர்தீன்கான் என்பவர் தனி அரசரானார்

1756ல் அவர் இறக்க அவரின் பேரன் சுராஜ்‍ உட் டொவ்ளா என்பவன் மன்னரானார் அவருக்கு வயது 20

மனிதர் மிக செல்லபிள்ளையாக வளர்ந்திருந்தார், படிப்பு இல்லை பண்பும் சுத்தமாக இல்லை, எப்பொழுதும் போதை பெண்கள் என ஆட்டமும் கூத்துமாக வசந்த மாளிகை சிவாஜி கணேசன் போல் ஆடிகொண்டிருந்தார்

அது முற்றி சித்தபிரம்மை பிடித்த அளவு சென்றது, யாரையும் மதிப்பதில்லை, துதிபாடிகளை மட்டும் முக ஸ்டாலின் போல் அருகில் அமர்த்தி கொண்டார், ஜெயாவிற்கு குனிந்து நின்ற‌ அமைச்சர்கள் போல் அவருக்கும் எல்லோரும் குனிந்து நிற்க வேண்டும்

அவரின் அமைச்சரவை எப்படி இருந்தது என்றால் ரமாவரத்தில் ராமசந்திரன் செங்கோல் செலுத்திய காட்சி போல் இருந்தது, அவரை புகழ்ந்தவர்களுக்கு வாழ்வு இல்லையேல் முதலில் மன்னர் மிதிப்பார் அதன் பின் யானை மிதிக்கும்

இம்சை அரசன் வடிவேலு போலவே ஆட்சி செய்து கொண்டிருந்தார் இந்த சுராஜ்‍ உட் டொவ்ளா

இவரிடம் இருந்த கொடூர குணம் நேரம் போகவில்லை என்றால் விலங்குகளை சித்திரவதை செய்து ரசிப்பது அதாவது குதிரைக்கு வாலை வெட்டி ரத்தம் கசிய அது ஓடுவதை ரசிப்பது, மாட்டிற்கு கழுத்தில் வெட்டி அது துடிப்பதை ரசிப்பது

ஏதும் பறவை கிடைத்தால் ஒரு இறக்கையினை முறித்து பறக்கவிட்டு மகிழ்வது என்ற கொடூர விளையாட்டு இருந்தது, மன்னன் ஆசைபட்டால் மறுக்க முடியுமா?

ஆளாளுக்கு புதுபுது ஐடியா கொடுத்து விளையாட வைத்தார்கள், ஓணானை கள்ளியில் சிலுவையில் அறைவது அவரின் கண்டுபிடிப்பாக இருக்க கூடும்

இந்த சுல்தானுக்கு இருந்த இன்னொரு கொடும் விஷயம் ஐரோப்பியர் வெறுப்பு, 20 வயதுதான் ஆகியிருந்தாலும் இனம்புரியா வெறுப்பு இருந்தது அதை விளையாட்டாக ஆடினார்

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் அரேபிய நாடுகளில் சில அரபிகள் பிழைக்க வந்த வெளிநாட்டவரை ஒரு மாதிரி பார்ப்பது, வெளிநாட்டு தமிழர்கள் இந்திய தமிழர்களை மட்டமாய் நடத்துவது போன்ற தன்மை அது

அடிக்கடி பிரெஞ்ச்காரர், பிரிட்டானியர் கோட்டைக்குள் புகுந்து அவர்கள் கல்லாபெட்டியினை தூக்கிவருவார், அவர்கள் விட்டுவிடுமாறு கெஞ்சுவர், இவர் ரசிப்பார் கடைசியில் அவர்களை கொன்றுவிடுவார்

இதெல்லாம் அவரின் பொழுது போக்கு ஆனால் மன்னராயிற்று எதிர்க்க முடியாது, அவ்வப்பொழுது அடிவாங்கினாலும் வங்கத்தில் சம்பாதிக்கலாம் என்பதால் புதிய பாதை பார்த்திபனிடம் அடிவாங்கும் சிறுவன் போல ஐரோப்பியர் இருந்தனர்

இந்நிலையில் ஒரு பெரும் பணக்காரனை மிரட்டினார் சுராஜ்‍ உட் டொவ்ளா, பெரும் பணம் கோரினார், அவனோ உயிர்தப்ப வெள்ளையரிடம் சரண்டைந்தான்

வில்லியம் கோட்டை பிரிட்டானியர் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தனர், அவனை சுராஜ்‍ உட் டொவ்ளாவிடம் ஒப்படைக்க மறுத்தனர்

அவ்வளவுதான் அந்த ஐரோப்பிய வெறுப்பு சாமியாய் இறங்க தன் படையுடன் கோட்டைக்குள் புகுந்தார் சுராஜ்‍ உட் டொவ்ளா, அதுவரை பிரிட்டானியர் வெறும் வியாபாரிகள் அவ்வப்பொழுது பிரெஞ்சுக்காரரோடு கும்மாங்குத்து போடுவார்கள்

பெரும் படையினை எதிர்த்து பழக்கம் இல்லை என்பதால் வில்லியம் கோட்டை கவர்னரே படகேறி நடுகடலில் இருந்த கப்பலில் பதுங்கினார்

கோட்டையில் இருந்த 150 பிரிட்டானியரை இழுத்து சென்றான் சுராஜ்‍ உட் டொவ்ளா, எனக்கு அந்த வணிகன் தரவேண்டியதை விட பல மடங்கு தந்தால் இவர்களை விடுவிப்பேன் என அறிக்கையிட்டான்

அதன் பின் அவன் செய்ததுதான் கொடூரம்

மிக சிறிய நிலவறை சிறையில் காற்றோ, வெளிச்சமோ இல்லாத, 30 பேர் மட்டுமே இருக்க கூடிய அறையில் அவர்களை மொத்தமாக விலங்கிட்டு அடைத்தான்

கொஞ்சநேரம் தன் வழக்கமான விளையாட்டினை ஆடினான், அதாவது அவர்கள் தாகத்தால் நீர் கேட்டால் கொடுப்பது போல் காட்டுவான் அவர்கள் ஓடிவந்து விழுவார்கள் ஆனால் கொடுக்கமாட்டான்

பின் ஜெபிக்க சொல்வான், அவர்கள் ஜெபிப்பார்கள் இவன் சிரிப்பான்

இந்த விளையாட்ட்டு விளையாடிகொண்டே நன்றாக குடித்துவிட்டு நான் சொல்லும் வரை இவர்களுக்கு உணவோ நீரோ கொடுக்க கூடாது என சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டான்

அந்த உத்தரவினை மறந்தும் விட்டான், ஆனால் அந்த வெள்ளையர் இருட்டறையில் துடிதுடித்தனர், பலர் செத்தனர்

அவர்கள் கெஞ்சியும் லஞ்சம் கொடுத்தும் மன்னனின் உத்தரவின்றி காவலர்களால் செயல்படமுடியாமல் போயிற்று

பலர் இறந்தனர், இரு நாள் கழித்து வந்த சுராஜ்‍ உட் டொவ்ளா கையில் பணம் இருப்பவர்களை வைத்துவிட்டு போக சொன்னான், மன்னனிடம் அவர்களை விடுவிக்க பேரம் பேச வந்த வில்லியம் கோட்டை கவர்னர் (கப்பலில் பதுங்கியவர்) ஹால்வெல் என்பவரையும் பிடித்து இருட்டு அறையில் அடைத்தான் சுராஜ்‍ உட் டொவ்ளா

அவர் கோட்டையின் ரகசிய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும் வரை விடமாட்டேன் என சொல்லி சித்திரவதை செய்தான் பின் சுராஜ்‍ உட் டொவ்ளாவின் சொந்தகார பெண்ணே இரக்கம் கொண்டு ஹால்வெல்லை பணம் கொடுத்து விடுவித்தாள்

இப்படியான காரியங்களை மன சுத்தியோடு செய்த சுராஜ்‍ உட் டொவ்ளா, டெல்லி சுல்தானுக்கு தான் வெள்ளையர்களை வென்றுவிட்டதாகவும், கல்கத்தாவில் ஈ அவர்களுக்கு இடமில்லை எனவும் அறிவித்தான்

கல்கத்தாவின் பெயர் அலி நாகூர் ஆனது, ஆம் அது அவனின் வெற்றிக்கு அர்த்தமாம், கடவுளின் துறைமுகம் என பெயராம்

கிட்டதட்ட 90 பிரிட்டானியர் அந்த இருட்டறையில் இறந்தனர், எஞ்சியோர் வெளிவந்து இறந்தனர்

விஷயம் சென்னைக்கு எட்டியது, அழுகையும் கோபமும் கொண்ட பிரிட்டிசார் ஏதாவது செய்யுங்கள் என கிளைவ் முகத்தை பார்த்தனர்

அவரை தவிர அவர்கள் யார் முகத்தை பார்க்க முடியும்?

கிளைவும் வாட்சனும் படை திரட்டினர், கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் கொண்ட படை அது

ஆகஸ்டில் புறப்பட்ட கிளைவ் வங்க கடலுக்க்கே உரித்தான புயல்களை கடந்து கல்கத்தாவினை அடைய டிசம்பர் ஆனது

விஷயம் சுராஜ்‍ உட் டொவ்ளா காதிற்கு சென்றது, போதையில் சொன்னான், என்னது பிரிடிசாரா? என்னிடம் மோதவா?

மொத்த ஐரோப்பாவிலே பத்தாயிரம் பேர் தேறமாட்டார்கள், இவர்கள் எத்தனை பேர்?

கிளைவோ வெறியோடு வந்தான், கூடவே வாட்சனுக்கும் கடுமையான கோபம் இருந்தது

அதுவரை வங்காளம் பெரும் போரினை கண்டதில்லை, காரணம் வங்காளிகள் சுவாவம் அப்படியாக அன்று இருந்தது

கடும் உழைப்பு இல்லாதவர்களாகவும், ஒரு மாதிரி மனநிலை கொண்டவர்களாகவும் , வெறும் பேச்சு வீரர்களாகவும், அரட்டை அடிப்பதிலுமாக இருந்தார்கள்

சண்டையோ, மோதலோ, வீர விளையாட்டோ அவர்களுக்கு தூரமாய் இருந்தது. சுராஜ்‍ உட் டொவ்ளா சுகமாக ஆள அதுவும் ஒரு காரணம்

வழக்கமாக உள்ளூரில் சண்டைக்கு ஆள் எடுக்கும் பிரிட்டாருக்கு அது பெரும் சவாலை கொடுத்தது எனினும் முடிவோடு வந்திருந்தான் கிளைவ்

ஏற்கனவே வந்து போயிருந்ததால் யுத்தம் என வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் அவனிடம் இருந்தது

களமிறங்கினான், வங்கத்தின் தலைவிதி வேகமாக மாற தொடங்கியது

(தொடரும்..)

No automatic alt text available.
Image may contain: 1 person, standing