கில்லாடி கிளைவ் : 09
கில்லாடி கிளைவ் : 09
கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார்
இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின
தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின
நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி தெரிந்ததும் அவனுக்கு வியர்த்தது
காரணம் ஆங்கிலேயர் ஒரு நாளும் இங்கு ராணுவ வெற்றி பெறுவார்கள் என அவன் நம்பவில்லை, அவன் என்ன மொத்த இந்தியாவும் அப்படித்தான் எண்ணி இருந்தது
நவாபின் படைகள் தோற்றது என்ற செய்தி கேட்டதும் அவனின் நரிமூளை வேலை செய்தது
எதற்காக இவர்களிடம் போராட வேண்டும்? வந்திருப்பது கிழக்கிந்திய கம்பெனி படை, அவர்கள் தலமையிடமே பேசிவிட்டால் என்ன?
கம்பெனியாருடன் சமாதானம் பேசினான் சிராஜ் உட் டவ்ளா, பெரும் நஷ்ட ஈடும் வில்லியம் கோட்டையினை செப்பனிட்டும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்
பெரும் பணம் கிடைத்ததால் கம்பெனியும் ஒப்புகொண்டது, கிளைவிற்கோ நவாபினை போட்டு அடிக்கும் வெறி இருந்தது ஆனால் மேலிட உத்தரவினை அவரால் மீற முடியவில்லை
இது அவமானம், சண்டைக்கென்று வந்துவிட்டு காசு கொடுத்தவுடன் திரும்ப சொன்னால் எப்படி என அவன் முணுமுணுத்தாலும் கேட்பார் யாருமில்லை
கட்சி தொண்டர்கள் மோதுவார்கள் ஆனால் தலமை கூட்டணி வைக்கும் அல்லவா? அப்பொழுது தொண்டன் துடிப்பான் அல்லவா? கிளைவின் மனநிலை அப்படி இருந்தது
ஆனால் அவன் மனதில் நவாபினை ஒரு நாள் டூப்ளேயினை அடித்தது போல் அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது
இதனிடையே ஐரோப்பாவில் மறுபடியும் பிரெஞ்ச்காரரும் பிரிட்டானியரும் மோத சென்னை கோட்டை தாக்கபடும் அபாயம் இருந்ததால் கிளைவ் சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டார்
கிளைவிற்கு இக்காலம் வரை சண்டை தெரியும், வியூகம் தெரியும், தைரியமாக அடிக்க தெரியும்
இந்த போர்களை எல்லாம் அவன் விளையாட்டாகவே நடத்தி வந்தான், பலமுறை சாக முயன்றவன் என்பதால் சாவினை கண்டு அவன் அஞ்சவில்லை
ஆனால் இந்திய யதார்த்தமுறை அவனுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தன, குறிப்பாக இந்திய மனநிலை அவனுக்கு வினோதமாக பட்டது, குழப்பியது
அவன் இங்கிலாந்து மனநிலையில் வளர்ந்தவன், அங்கு அப்பொழுது பொய் சொல்லுதல், வாக்கு கொடுக்கு முன் யோசித்தல், கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், பொய் சாட்சி சொல்லுதல் எல்லாம் கவுரவ பிரச்சினைகள், சுருக்கமாக சொன்னால் பணத்திற்காக மனசாட்சியினை விற்பது அவர்களுக்கு அன்று அருவருப்பானது
அவை எல்லாம் அங்கு மிக மிக இழிவானவையாக இருந்தன
ஆனால் இந்திய யதார்த்தமோ அப்படியே தலைகீழாக இருந்தது
இங்கு பொய் சொன்னார்கள், பொய்சாட்சி சொன்னார்கள், பணத்திற்காக ராணுவ சிப்பாய்களகளே விலை போனார்கள், நவாபின் அருகில் இருப்பவரை கூட பணத்த்தால் வளைக்க முடிந்தது
அதிகாரத்திற்கும் பணத்திற்கும் விலைபோக கூடிய கூட்டமும் மக்களும் இங்கு இருந்தார்கள், தேசதுரோகம் அவர்களுக்கு தவறாய் படவே இல்லை, அதன் பெயர் சாமார்த்தியம் என சொல்லிகொண்டார்கள்
இந்த போக்கு கிளைவிற்கு பெரும் குழப்பத்தை கொடுத்தாலும் இறுதியில் தெளிந்தான்
இந்தியாவினை ஆள, இந்த பலகீனங்களை பயன்படுத்தினால் தவறே அல்ல. நாம் என்ன இயேசுநாதாரா இல்லை அவரின் சீடரா? இவர்களை நல்வழிபடுத்த?
நாம் வியாபாரி, வந்த இடத்தில் சண்டை என்றாலும் நமக்கு லாபமே முக்கியம். இந்த மக்களை திருத்தமுடியாது மாறாக நமக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் கம்பெனிக்கு நல்லது
வீரனாக இருந்த கிளைவ் ராஜதந்திரியாக மெல்ல மாறினான்
இந்நாட்டை ஆள வீரம் மட்டும் போதாது, இந்நாட்டு கலாச்சாரமான லஞ்சம் இன்னபிறவிஷயங்களில் மூழ்கினால் தவறில்லை என அவனின் உள்மனம் சொல்லிற்று
வீணாக யுத்தம் நடத்தி உயிர்களை கொல்வதெல்லாம் விட எளிதாக லஞ்சம் கொடுத்து சாதிக்கலாம் என்ற திட்டங்கள் எல்லாம் மனதில் ஓடின
இப்படியான நிலையில் வங்கத்தில் அவன் அடிக்கடி சுற்றியபொழுது ஒரு வியாபாரி கிளைவ் முன்னால் நின்றான்
அவன் சாதாரண வியாபாரி அல்ல, இக்கால அம்பானி போல அன்று அங்கு மிகபெரும் சக்தி, நவாபிடம் நேருக்கு நேர் பேசும் சர்வ சக்தி படைத்தவன்
ஜெயா அரசில் வைகுண்டராஜன் போல, மோடி அரசின் அம்பானி போல மிக வலுவான வியாபாரி
அவன் பெயர் ஓர்மிசென்ட்
வில்லியம் கோட்டையினை நவாப் படைகள் தாக்கியபொழுது இவரின் வியாபாரமும் நஷ்டமடைந்தது, இப்பொழுது சமாதானம் ஆகி வெள்ளையர் வந்துவிட்டதால் அவர்கள் பக்கம் அனுகூலம் ஏதும் கிடைக்குமா என பார்க்க வந்திருந்தார்
ஓர்மிசென்டை அனுப்பிவிட்டு அவரை பற்றி விசாரித்தான் கிளைவ்
அய்யா அவர் எல்லா இடங்களிலும் இருப்பார்,நவாப்பிடம் இருப்பார், அந்த பக்கம் சந்திரநாகூரில் பிரெஞ்ச்காரரிடம் இருப்பார், நம்மிடமும் இருப்பார்
யாரிடம் சேர்ந்தால் அதிக லாபமோ அவர்களிடம் சேர்ந்து கொள்வார், சந்தர்ப்பவாதி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சாமார்த்திய சாலி
கிளைவிற்கு கோபம் வந்தது, அவன் வியாபாரம் பேசவேண்டுமென்றால் கம்பெனியுடன் பேசலாம், யுத்தம் வேண்டுமென்றால் என்னிடம் பேசலாம்
ஆனால் என்னை பயன்படுத்திகொள்ள எண்ணுகின்றானா? இதென்ன கீழ்தரமான புத்தி. சரி அவன் வழியிலே அவனை அணுகுவோம் என மிக கவனமாக அவனை கையாள ஆரம்பித்தான் கிளைவ்
மாவீரன் கிளைவினை தந்திரமாக கையாள எண்ணி அவனை மாபெரும் தந்திரசாலி ஆக்கியதே இந்த ஓர்மிசென்ட் என்பவர்தான்
அதாவது நவாப் சிராஜ் உட் டவ்ளா என்பவர் தற்காலிகமாக பின்வாங்கினாலும் அயோத்தி சுல்தான், டெல்லி சுல்தானுடன் சேர்ந்து வில்லியம் கோட்டையினை நாசமாக்கி வெள்ளையரை அடியோடு சாய்க்கும் ஆபத்து இருந்தது
அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன
ஆனால் ஒர்ச்சிமின்டோ அஞ்சினான், இது தன் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என அஞ்சினான்
அடிக்கடி நவாபினை பார்க்க செல்லும்பொழுது அவரின் ஒருமாதிரி போக்கும் குணமும் அவனை எரிச்சலடைய செய்தன
வங்கத்தில் இந்துக்கள், இஸ்லாமியர், வணிகர் என பலதரப்பும் நவாபின் மேல் வெறுப்பில் இருந்தன
இந்த இடத்தில் ஓர்மிசென்டுக்கு ஒரு ஐடியா உதித்தது, இந்த நவாபிற்கு பதிலாக பொம்மையாக ஒருவரை வைத்தால் என்ன?
கொஞ்சம் அதை பல்ஸ் பார்த்தவனுக்கு ஆச்சரியம் மிகுந்த பதில் கிடைத்தது
சிராஜ் உட்டவ்ளாவினை வீழ்த்த பலர் மனதார விரும்பியிருந்தனர், அவர்கள் யாரெல்லாம் என்றால் நவாபின் தளபதி மீர் ஜாபர், மந்திரி ராய்டுல்லப், பிரபல வியாபாரி ஜெகத்ஷேட் என சிலர் சிக்கினர்
பொல்லாட்சி வழங்கிய சிராஜ் உட்டல்ளா மீது அவனின் நெருங்கிய வட்டமே வெறுப்பில் இருந்தது, நவாபோ அதை அறியாமல் இருந்தான்
இந்த ஓர்ச்சிமென்ட், மீர் ஜாபர், ராய்டுல்லப், ஜெகத்ஷேட் அடங்கிய குழு அடிக்கடி விவாதித்தது
இவர்கள் இன்னொருவனை துணைக்கு அழைக்க முடிவு செய்தனர், ஆம் கிளைவினை இழுக்க முடிவு செய்தனர்
கிளைவிற்கோ இதுவரை வீர ஆட்டம் தெரியுமே தவிர, துரோகம் தெரியாது, ஆனால் இந்த மாதிரி கூட்டம் இருக்கும் பொழுது ஏன் போர்?
இப்பொழுது கிளைவினை பயன்படுத்தி நவாபினை வீழ்த்த வியாபாரி ஓர்ச்சிமென்ட் திட்டமிட்டான்
கிளைவோ இந்த கும்பலை பயன்படுத்தி வங்கத்து ஆட்சியினை பிடிக்க திட்டமிட்டான்
இரு தந்திரசாலிகளும் தங்கள் மனதிட்டம் வெளிதெரியாமல் ஒருவரை ஒருவர் பாவித்து கொள்ளும் திட்டத்தோடு பழகிகொண்டிருந்தனர்
இந்த கும்பல் விவாதிக்கும்பொழுதே கிளைவின் உள்ளிருந்த எச்சரிக்கை உணர்வு அலாரம் அடித்தது
நடப்பது நவாபிற்கு எதிரான சதி, ரகசியமாகத்தான் நடக்கின்றது ஆனால் தெரிந்துவிட்டால் மொத்தமும் காலி, கம்பெனியில் தன் இடமும் காலி
எப்படி நவாபிற்கு தெரிய வரும்? இந்த ஒர்ச்சிமென்ட் சொல்ல வாய்ப்பு இருக்கின்றது, நம்மிடம் அரசனை கவிழ்ப்போம் என வருகின்றவன், ஒருவேளை அரசனின் தூதனாக இருந்துவிட்டால், இல்லாவிட்டாலும் ஒர்ச்மின்ட் நல்லவன் அல்ல, அதனால் நாம் முந்திகொள்வது அவசியம்
இதனால் நவாபிற்கு ஒரு கடிதம் எழுதினான்,” அய்யா, அய்யன்மீர் நாங்கள் ஒரு நாளும் உங்களை எதிர்ப்பவர்கள் அல்ல, எங்கள் கோட்டைக்காகவே போரிட்டோம்
மற்றபடி உங்கள் நிம்மதியான ஆட்சியினை ஆதரிப்போம், அய்யா வாழ்ந்தால்தான் நாங்கள் வாழமுடியும், உங்கள் நீண்ட ஆயுளை விரும்பும் கிளைவ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி”
கடிதம் கண்டவுடன் சிராஜ் உத்தவ்லா மகிழ்ந்தான், தன்னிடம் பிரிட்டானியர் சரணடைந்ததாக எண்ணி கொண்டு கவலை மறந்தான்
கிளைவோ மற்றுமோர் ரகசிய கடித்தத்தை இன்னொரு பெயரில் மீர் ஜாபருக்கு அனுப்பினான், எழுதியது கிளைவ் ஆனால் ரகசிய தூது என்பதால் செய்தி மட்டும் இருந்தது
நவாபை வீழ்த்தி உம்மை நவாப் ஆக்க கிழக்க்கிந்திய கம்பெனி உதவும் முடிவில் இருக்கின்றது, கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பீரா?
மீர் ஜாபர் துள்ளி எழுந்தான்
மிக அட்டகாசமாக காய்களை நகர்த்தினான் கிளைவ், எல்லாம் தனக்கு சாதகமாக இருப்பதாக நம்பினான் ஒர்ச்சிமின்ட்
மிக ராஜதந்திரமாக சிராஜ் உத்தவ்ல்லா, ஒர்ச்சிமென்ட்டை எல்லாம் நம்ப வைத்து, தளபதி மீர் ஜாபருக்கு கனவு மூட்டிகொண்டிருந்தான் கிளைவ்
இப்போது கிளைவின் துருப்பு சீட்டு மீர் ஜாபர், காரணம் அவனே நவாபின் தளபதி
(தொடரும்..)
