கில்லாடி கிளைவ் 13

கில்லாடி கிளைவ் 13

மீர்பாஜபர் நவாப் ஆனவுடன் அரசின் கஜானா கிளைவிற்காக திறந்துவிடபட்டது, கிட்டதட்ட 9 லட்சம் பவுண்ட் அளவிற்கு அங்கிருந்த செல்வம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது
கிளைவ் நினைத்திருந்தால் இதில் பெரும் பகுதியினை சுருட்டி இருக்கலாம், ஆனால் அவன் எடுக்கவில்லை. அவ்வளவும் கம்பெனிக்கே சென்றது
இதனிடையே ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது, கிளைவின் வெற்றியினை அறியாத கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மாற்றி அமைத்து பல அதிகாரிகளை அனுப்பியது, மேல் மட்ட பெயரில் கிளைவின் பெயர் இல்லை
காரணம் அக்கால தொலைதொடர்பு முறை அப்படி இருந்தது
ஆனால் வந்து இறங்கிய அதிகாரிகள் கிளைவின் அதிரடியினையும் அவனின் பெரும் வெற்றிகளையும் கேள்விபட்டு அவனை முக்கிய பொறுப்பில் அமர்த்தினார்கள்
கிளைவின் வங்க‌ வெற்றி தாமதமாக பிரிட்டனுக்கு தெரிய வர, அவரை முக்கிய பொறுப்பில் அமர்த்தி அடுத்த லிஸ்டை வெளியிட்டது
அந்த விஷயம் கிளைவினை எட்டியபொழுது இங்கு நிலமை ஏற்கனவே அப்படித்தான் இருந்தது, ஆம் கிளைவ் உச்ச தலைவராயிருந்தார், அவர் செல்வாக்கு கூடி இருந்தது
எவ்வளவு செல்வாக்கனவர் என்றால், இந்திய சிற்றரசர்கள் அவரின் குதிரையினை விழுந்து விழுந்து வணங்கினர் என்றால் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கிளைவ் இந்தியாவில் அந்த டூப்ளேயினை விட பெரும் செல்வாக்கோடு வலம் வந்தார்
அப்பொழுது பிரெஞ்ச் ஆதிக்கம் கோதாவரி விசாகபட்டினம் பகுதியில் மிகுந்திருந்தது, அதை முடக்க ஆந்திர போர்களை தொடங்கினார் கிளைவ்
அவரின் அதிரடியில் கோதாவரி, கிருஷ்ணா, கடப்பா, விசாகபட்டினம் பகுதிகள் பிரிட்டிசாருக்கு கிடைத்தன. இப்பொழுது நெல்லை பகுதி முதல் விசாகபட்டினம் வரை பிரிட்டானியர் ஆதிக்கம் வந்தது, ஒரே உபயம் கிளைவ்
இடையில் ஒரிசா மட்டும் இல்லை
இந்நிலையில் மீர்ஜாபரின் மகனின் அட்டகாசம் எல்லை மீறியது, கிளைவ் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை ஆனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது
இந்த சூழ்நிலையினை பயன்படுத்த விரும்பினான் அயோத்தி சுல்தான் சுஜா உத்தவ்ல்லா. அவன் வங்கம் மேல் படையெடுப்பதாக அறிவித்தான்
அலறிய மீர்ஜாப்ர் கிளைவினை நாடினான், அயோத்தி சுல்தானை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நிறுத்தினான் கிளைவ்
கொஞ்சநாள் நிலமை சுமூகமாக சென்றபொழுது அடுத்த ஆபத்து டெல்லியிலிருந்து வந்தது
அதாவது முகலாய மன்னரான இரண்டாம் ஆலம்கீர் என்பவரை அவர் மந்திரியே சிறைவைத்தான், அதில் ஆலம்கீரின் மகனான ஷா ஆலம் என்பவன் தப்பினான்
தப்பியவன் என்ன செய்தான் என்றால் பெரும் படை திரட்டினான், மராட்டியர் பஞ்சாபியர், தக்காணம், என பெரும் எண்ணிக்கை கொண்ட படை அது
தந்தையினை மீட்க பல இடங்களில் ஆதரவு கோரினான் ஷா ஆலம். ஆம் டெல்லி முகலாய மன்னருக்கு முன்பு கட்டுபட்டவர்கள்தான், மன்னருக்கு ஆபத்து என்றால் அவர்கள் வரவேண்டும்
அப்படி வங்கத்து மீர்ஜாபருக்கும் அழைப்பு விடுத்தான் மீர் ஜாபரோ யோசித்து கொண்டிருந்தான்
மிக பெரும் தந்திரசாலியான மீர் ஜாபருக்கு இப்பொழுது ஆங்கிலேயர் பக்கமா இல்லை ஆலம் ஷா பக்கம் நிற்க வேண்டுமா என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டபொழுது அவன் அட்டகாசமான முடிவெடுத்தான்
போரில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அதே நேரம் பெரும் பணத்தை கொடுப்பதாகவும் உறுதி அளித்தான்
உறுதி அளித்தானே தவிர கொடுக்கும் திட்டமெல்லாம் இல்லை மாறாக கிளைவிற்கு கடிதம் எழுதினான்
கிளைவோ ஆலம்ஷாவிற்கு நீர் பணம் கொடுத்தால் எல்லோரும் உம்மை பணம் கேட்டே மிரட்டுவார்கள் என்பதால் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான்
கொடுத்தால் கிளைவ் அடிப்பார் கொடுக்காவிட்டால் ஆலம் ஷா அடிப்பான் என சிந்தித்த மீர்ஜாபர், பாட்னா சுல்தானை வைத்து ஆடினான்
பாட்னா சுல்தானை ஆலம் ஷாவிற்கு எதிராக ஏவிவிட்டான் மீர் ஜாபர், இதனால் ஆலம்ஷாவின் படைகள் பாட்னாவினை முற்றுகை இட்டது
இந்நேரம் பாட்னா சுல்தான் உதவி கேட்பதாக கிளைவிடம் சொல்லிவிட்டான் மீர் ஜாபர்
கிளைவும் நடக்கும் விஷயத்தை கவனித்து கொண்டே இருந்தான், பாட்னா விழுந்தால் அடுத்தால் ஆலம் ஷா மீர் ஜாபர் மேல் பாய்வார் என்பது அவனுக்கு தெரியும்
இதனால் பெரும் படையுடன் கிளம்பினான் கிளைவ், ஆனால் ஆலம் ஷாவின் படையுடன் ஒப்பிடுகையில் கிளைவின் படை வழக்கம் போல் சிறியது
எனினும் கிளைவ் வருகின்றான் என்றவுடன் ஆலம்ஷாவின் படையினர் ஓட்டமெடுத்த்தனர், கூலிக்கு வந்த பிரெஞ்ச் படையினர் மட்டும் நின்றனர், அவர்களை பின்மண்டையில் அடித்துவிரட்டிவிட்டு பாட்னாவினை காத்தான் கிளைவ்
பின் என்ன ஆகும்? பாட்னா கிளைவின் செல்வாக்கினை ஏற்று கொண்டது
ஆலம்ஷாவினை கிளைவ் விரட்டிவிட்டதும், பல சாகசங்களை செய்ததும் மீர் ஜாபரின் மனதை மிகவும் யோசிக்க வைத்தது
ஆம் அவன் தன் மகனை அடுத்த நவாப் ஆக்க எண்ணம் கொண்டிருந்தான், ஆனால் மகனோ மிகபெரும் அயோக்கியனாய் இருந்தான் வங்க மக்கள் அவனை விரும்பவில்லை
நாளை சிக்கல் என்றால் தன்னை விரட்டிவிட்டு இன்னொரு நவாபினை பிரிட்டிசார் நியமிப்பர் என்பதை உணர்ந்த ஜாபர் பெரும் நயவஞ்சக திட்டமிட்டான்
பன்னீர் செல்வம் எடப்பாடியினை விரட்ட திட்டமிடுதல் போல, எடப்பாடி சில நேரம் மோடியோடு ஆடுவது போன்ற சாயல் அது
கிளைவினை வெல்ல பிரெஞ்சிக்காரர்களால்தான் முடியவில்லை , ஆனால் இன்னொருவர்களால் முடியலாம்
அவர்கள் இந்தியாவில் அதிகம் இல்லையே தவிர இந்தோனேஷியா முதலான கிழக்காசிய பகுதி எல்லாம் அவர்கள்தான் ஆள்கின்றார்கள்
அவர்களை அழைத்து இந்த பிரிட்டானியரை விரட்டினால் என்ன?
ஆம் டச்சுகாரர்களுக்கு தூதுவிட்டான் மீர் ஜாபர், “வங்கம் பக்கம் வந்து வெள்ளையரை விரட்டிவிட்டு இங்கு வியாபாரம் செய்யவும், உங்களை வங்கத்து நவாப் உள்ளன்போடு வரவேற்கின்றார்”
டச்சுக்காரர் துணையோடு கிளைவினை விரட்டும் மாபெரும் வஞ்சக திட்டத்தில் இறங்கினான் மீர்ஜாபர்.
ஏற்கனவே மிக அணுக்கமாக மீர்ஜாபரை கண்காணித்த கிளைவிற்கு பொறி தட்டிற்று
டச்சுக்காரரோ இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா வரை தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த 11 கப்பல்களில் ஜாவா தீவிலிருந்து கிளம்பினர் [ October 20, 2018 ]
(தொடரும்..)
Image may contain: 3 people