கில்லாடி கிளைவ் : 15

கில்லாடி கிளைவ் : 15

லண்டனில் பெரும்புள்ளியாக மாறினார் கிளைவ், சும்மாவே நாம் ஆளபிறந்தவர்கள் என்றால் மகிழும் பிரிட்டானியர், கிளைவ் நிஜமாகவே இந்தியாவினை ஆள தொடங்கிவ்ட்டார் என்பதால் மதித்து மதித்து வணங்கினார்கள்
அவர் பார்லிமென்ட் எம்பி ஆகிவிட்டு இந்தியாவிற்கு என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருக்கும் பொழுது பெரும் விபரீதங்கள் உருவாகின‌
முதலாவது கிளைவே உருப்பட்டுவிட்டார், நமக்கென்ன என ஜென்டில்மேன்கள் எல்லாம் கிழக்கு நோக்கி கிளம்பினார்கள், அதில் சிலர் வசமாக சுருட்டி கொண்டு வந்து செட்டில் ஆனார்கள், அதாவது உடனே கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து இந்தியா வந்து கிடைப்பதை சுருட்டி கொண்டு ஓடினார்கள், இது பிரிட்டன் சமூகத்தை குழப்பியது
இரண்டாவது கிளைவ் கொட்டி கொடுத்த லாபத்தை கண்ட கிழக்கிந்திய கம்பெனி மலைத்து போயிருந்தது, மாபெரும் வைரசுரங்கமாக அது இந்தியாவினை கண்டது , அதன் பங்குதாரர்கள் கடும் உற்சாகம் அடைந்தனர், டைரக்டர் போர்டு ஆப் டைரக்டர் போன்ற பதவிகளுக்கு கடும் போட்டி நிலவிற்று
இதில் கிளைவின் எதிர்களும் உள்ளே வந்தனர், அவர்களில் சாலிவன் என்பவர் முக்கியமானவர். அதாவது பரம்பரை பணக்காரர்
எப்பொழுதுமே பரம்பரை பணக்காரர்களுக்கும் புது பணக்காரர்களுக்கும் ஒத்துவராது, டாட்டா அம்பானி முதல் நமது ஊர் மூப்பனார் சிவாஜிகணேசன் வரை ஏராள உதாரணம் உண்டு
இதனால் சாலிவான் டைரக்டர் ஆவதை முடிந்தவரை தடுத்துபார்த்தார், காரணம் அவர் பெரும்புள்ளி எனினும் கிளைவ் வங்கத்தில் அவருக்கு சாதகமான செயல்களை செய்து கொடுக்கவில்லை என்பதால் முன்பகை இருந்தது
இந்நிலையில் அவர் டைரக்டர் ஆனார், இருவரும் கோஷ்டி கட்டினர் என்றாலும் சாலிவன் கை ஓங்கி இருந்தது
ஐரோப்பிய நிலை இப்படி இருக்க, இந்திய நிலை எப்படி இருந்தது என்றால் மகா சிக்கலாக இருந்தது
ஆம் ஆங்கிலேயர் இந்தியாவினை மோசமாக சுரண்டுகின்றனர் எனும் பேச்சின் தொடக்கம் அப்பொழுதுதான் நடந்தது
அதாவது கட்சி தலைவர்கள் அல்லது தியாகிகள் நல்ல நோக்கத்துடன் தொடங்குவார்கள், பின்பு வருபவர்கள் சொதப்பி தொலைப்பார்கள், தீரா ஊழலில் சிக்குவார்கள்
இதுதான் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியிலும் நடந்தது
கிளைவ் மிக கவனமாக வென்று அதிகாரத்தை பிடித்தான், அரசனின் சொத்துக்களை கப்பமாக பெற்றானே அன்றி பொதுமக்களை தொட்டு கூட பார்த்ததில்லை
ஆனால் கிளைவ் லண்டனில் இருந்த காலத்தில் நிலமை மாறிற்று, வங்கத்தில் மீர் ஜாபர் கொடுத்த கப்பம் போதாதென்று அவரை நீக்கிவிட்டு அவர் மருமகன் மீர் காசிம் என்பவரை நவாபாக நியமித்தது கம்பெனி
மீர் காசிமிடம் ஆளாளுக்கு கறந்தார்கள், போதா குறைக்கு வெள்ளையரின் பொருட்களை அதிக விலைக்கு வாங்கும்படி மக்கள் நிர்பந்திக்கபட்டனர்
பல வியாபாரிகள் பிரிட்டன் கொடியோடு வியாபாரம் செய்து அரசுக்கு வரவேண்டிய வரிகளை கொடுக்காமல் டபாய்த்தனர்
வங்கம் நாசமாயிற்று, தங்கம் விளையும் அந்த பூமி அந்த முறையற்ற கம்பெனியரால் சூறையாடபட்டது, எங்கும் குழப்பம்
இன்னும் குழப்பத்தை கூட்ட மறுபடி மீர்காசிமை விலக்கிவிட்டு மறுபடியும் மீர் ஜாபரை கொண்டு வந்தார்கள்
பாட்னாவிற்கு தப்பி ஓடிய மீர்காசிம் 100க்கும் மேற்பட்ட ஆங்கிலேயரை கொன்றுவிட்டு அயோத்தி சுல்தானிடம் சரணடைந்தான்
விஷயம் லண்டனுக்கு சென்றது, கம்பெனி தலைக்கு மேல் கை வைத்து உட்கார்ந்தது, இப்பொழுது போல் அல்ல நினைத்தவுடன் பயணிக்க முடியாது, கடல் அமைதியாக இருந்தால் இந்தியாவினை அடைய‌ 8 மாதம் ஆகலாம், கடல் கோளாறு செய்தால் 1.5 வருடம் ஆகலாம்
இந்த கால இடைவெளியில் கிழக்கிந்திய கம்பெனியும், லண்டனில் இருந்து கிளைவ் காட்டிய வழியில் வந்த பிரிட்டிசாரும் வங்கத்தை பிழிந்து தங்கமாக சம்பாதித்தனர்
அண்ணா தொடங்கிய கட்சி இப்பொழுது யாருக்கு கனத்த லாபம் கொட்டி கொடுக்கின்றது என்பது தெரியாததல்ல, அப்படித்தான் அன்றைய கிளைவ் இல்லா வங்கமும் இருந்தது
(இந்த குழப்பமான காலத்தில்தான் ஆற்காடு நவாபையும் ஆங்கிலேயர் கசக்கி பிழிய , அவர் மதுரையினை ஆண்ட மருதநாயகத்திடம் அதிக கப்பம் கேட்டு மிரட்ட அவன் கொடுக்க முடியாது என சீற, அந்த சண்டை அப்பொழுதுதான் நடந்திருக்கின்றது
அவனும் கொல்லபட்டான்
நிச்சயம் இங்கு கிளைவ் இருந்திருந்தால் மருதநாயகம் கிளர்ச்சி செய்திருக்கமாட்டான் என்கின்றது வரலாறு)
வரலாறு மிகபெரும் காட்டாட்சி என அதைத்தான் சொல்கின்றது, கிளைவ் வழியில் எல்லோருக்கும் பணக்காரன் ஆகும் ஆசை வந்து வலுகட்டாயமாக சுரண்டி இருக்கின்றார்கள்
வங்கத்து மக்களுக்கும் வேறுவழி தெரியவில்லை, எதிர்க்கவும் முடியவில்லை . அதுவரை வாழ்வாங்கு வாழ்ந்த வங்கம் இக்காலத்தில் மட்டும் 3 லட்சம் ஏழைகளை உருவாக்கிற்று என்கின்றது வரலாறு
தங்க முட்டை இடும் வாத்தை கதற கதற அறுத்தது போல் அறுத்திருக்கின்றார்கள், மிக மிக கொடூரமான ஆட்சியாக அது இருந்திருக்கின்றது
வெள்ளையர் என்றாலே காட்டுமிராண்டி சுரண்டலாலர்கள் என இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் மிரண்டிருக்கின்றன‌
அங்கே கம்பெனிக்குள் யார் கை ஓங்குவது என மல்லுகட்டி கொண்டிருந்த சாலிவனும் கிளைவும் இதனால் தங்கள் சண்டையினை நிறுத்திவிட்டு கம்பெனி விவகாரங்களுக்கு வந்தார்கள்
கம்பெனி இந்த சீர்கேட்டை சரிபடுத்தவும் மறுபடியும் வங்கத்தில் சட்டம் ஒழுங்கை சீர் படுத்தவும் யாரை அனுப்பலாம் என சிந்தித்த கம்பெனி கிளைவிடம் சரணடைந்தது
ஏன் அந்த சாலிவனை அனுப்ப வேண்டியதுதானே என எகத்தாளமாக கேட்ட கிளைவ் முன்னால் பல்லை கடித்து நின்றான் சாலிவன்
இந்த அவமானத்தை உள்ளே வைத்து கொண்டு, கிளைவ் இல்லையேல் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் எதிர்காலமும் இல்லை என சொல்லி நகர்ந்தான் சாலிவன்
கிளைவ் இந்தியா திரும்பி நிலமையினை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என கம்பெனி மன்றாடியது
கிளைவ் மறுபடியும் தான் ஒரு மிகபெரும் ராஜதந்திரி, வில்லாதி வில்லன் என்பதை நிரூபித்தான் எப்படி?
கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒவ்வொரு எதிரியினையும் தன் வீரத்தாலும் தந்திரத்தாலும் வீழ்திய கிளைவ், இந்த சூழலை அட்டகாசமாக பயன்படுத்தினான்
எப்படி?
அமைதியாக சொன்னான் , “நான் வங்கம் செல்கின்றேன் ஆனால் இந்த சாலிவன் டைரக்டராக இருந்தால் தொல்லை வரும், நிச்சயம் என்னை எங்காவது சிக்க வைப்பார் தொல்லை கொடுப்பார்
அவரை பதவியிலிருந்து நீக்காதவரை என்னால் இந்தியாவிற்கு செல்லமுடியாது , நீங்களே செல்லுங்கள்..”
தன்னை விட்டால் யாருமில்லை என்பதை அட்டகாசமாக உணர்ந்திருந்த கிளைவ் , இடம்பார்த்து சாலிவனை அடித்தார்
பதறிய கம்பெனி சாலிவானை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி, கிளைவின் காலில் விழுந்து மன்றாடியது
தன் பெரிய எதிரியினை வீழ்த்திய வெற்றியுடன் மறுபடி இந்தியா கிளம்ப தயாரானான் கிளைவ்
(தொடரும்..) [ November 4, 2018 ]
Image may contain: 1 person