கில்லாடி கிளைவ் – 1 பின் குறிப்பு

கில்லாடி கிளைவ் – 1  பின் குறிப்பு 

Image may contain: outdoor

இந்த கிளைவ் பற்றி சொல்லும்பொழுது ஒருவரி மறந்தாயிற்று

முதலில் சென்னை பக்கம் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியர், பரங்கிமலை தாமஸ் ஆலயம், கடற்கரை செயின்ட் தாமஸ் சமாதி என வந்த கதைகளுக்கு எல்லாம் அவர்கள்தான் முன்னோடி

நிச்சயம் இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வரவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு விண்ணகம் சென்றபின் எல்லா சீடர்களுக்கும் கிழக்கு பக்கம் அதாவது அரேபியா அப்படியே இந்தியா பக்கமே நற்செய்தி அறிவிக்க ஆசை இருந்தது

இந்த சவுல் என்றொரு பாத்திரம் அதில் உண்டு, அவர் யூத தீவிரவாதி , கிறிஸ்தவர்கள் உருவாகும்பொழுது அவர்களை அழிக்க நினைத்தவர். மதவெறியின் உச்சம் அவரிடம் எல்லா யூதனையும் போல இருந்தது

பின் அவரை இன்றைய சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே இயேசு ஆட்கொண்டு கிறிஸ்தவராகி இயேசு சீடரோடு சேர்ந்தார்

அவரை பரிசுத்த ஆவி கிழக்கே போகாத, மேற்கே போ என ஐரோப்பா நோக்கி அனுப்பியது, அவ்வாறே அவரின் சீடர்களும் சென்றனர் ஐரோப்பா கிறிஸ்தவமயமானது

அரேபியாவிற்கு இவர்கள் வேண்டாம் பின்னாளில் நபிபெருமானும், இந்தியாவிற்கு இந்து மதமும் போதும் என்பது அந்த தெய்வத்திற்கு தெரிந்திருக்கலாம்

ஆக எல்லா சீடர்களும் ஐரோப்பா சென்றபொழுது தாமஸ் மட்டும் சென்னை வந்து செத்தார் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதவை

ஆனால் தாமஸின் சீடர்கள் வந்திருக்கலாம், அவர்கள் சென்னையில் கொல்லபட்டிருக்கலாம் என்ற தியரியினை மறுக்கமுடியாது

இப்பொழுது பிரச்சினை புனித தாமஸ் அல்ல, போர்த்துகீசியர்

முதலில் சென்னை பக்கம் வந்த போர்த்துகீசியர் வியாபார நிலையங்களை நடத்தினர், முதலில் கடற்கரை அவர்கள் கட்டுபாட்டில்தான் இருந்தது

அப்பொழுது அவர்களின் மாலுமி மெட்ருஸ் என்பவர் இறந்தார், அவரை அந்த கடற்கரையில்தான் புதைத்தார்கள், அந்த இடத்திற்கு மெட்ருஸ் என்று அவர் பெயரையே இட்டார்கள்

பின்னாளில் பிரிட்டன், பிரென்ஞ், டச்சுக்காரர் என வர வர அவ்ர்கள் அப்பகுதியில் இருந்து விரட்டபட்டார்கள், இன்று போர்த்துகீசிய அடையாளமாய் எஞ்சி இருப்பது தாமஸ் மவுண்ட் மற்றும் சாந்தோம் ஆலயம்

அந்த மெட்ருஸ் எனும் பெயர் மெட்ராஸாக நிலைத்தது, ஆனால் இப்பொழுது இருப்பது போல் அல்ல சிறு சிறு கிராமம் போன்ற செட்டில்மென்ட்டாக இருந்தது

அதில் போர்த்துகீசிய செட்டில்மென்ட் மெட்ராஸ் எனபட்டது

பின்னாளில் வெள்ளையன் வந்து கோட்டை கட்டும்பொழுது அந்த இடத்திலிருந்து வடக்கே தள்ளி சென்னப்ப நாயக்கரிடம் இடம் வாங்கினர் கோட்டை கட்டினர்

ஆனாலும் அது மெட்ராஸ் என்றே அழைக்கபட்டது, அந்த மெட்ராஸில்தான் நம் கதையின் நாயகன் ராபர்ட் கிளைவ் வந்து இறங்கி இருக்கின்றார்

தொடரும்…