கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார்

Image may contain: 1 person, smiling, close-up

முன்பு அமெரிக்காவில் கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார், கடந்த தேர்தலில் டிரம்பிடம் தோற்ற ஹிலாரியின் மனைவி என அறியபடுவார்.

அன்னாருக்கும் அவர் அதிபராக இருந்தபொழுது அவருக்கு உதவியாளராக இருந்த மோனிக்கா லெவன்ஸிக்கும் நடந்த “நித்தி சுவாமி” ஸ்டைல் விளையாட்டு அமெரிக்காவினை உலுக்கியது.

முதலில் அப்படி எல்லாம் அல்ல, அவள் எதிர்கட்சியின் தூண்டில், சிக்கமாட்டான் இந்த கிளிண்டன், அப்படி ஒன்றுமே கிடையாது, வேண்டுமானால் என் கோட்டை கழற்றி போட்டு தாண்டுகின்றேன் என குதித்தார் கிளிண்டன்.

ஆனால் அந்த லெவின்ஸ்கி ஆதாரங்களை தூக்கி போட்டதும், ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்துகொண்டு “நான் பொய் சொன்னேன், அவளோடு தொடுப்பு இருந்தது” என சொன்னார்

அவ்வளவுதான் அமெரிக்கா பொங்கியது, ” நீ எவளை வேண்டுமானாலும் வைத்துகொள், அது உன் சொந்த விருப்பம், ஆனால் அற்ப காரணத்திற்கு பொய் சொன்ன உம்மை எப்படி நம்ப முடியும், இறங்கு கீழே ” என பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிளிண்டனின் அந்த பொய் இன்றுவரை அவருக்கு பெரும் கரும்புள்ளி.

இதோ “ஜெயாவினை எல்லோரும் சந்தித்தனர், இட்லி உண்டார், நர்ஸின் கன்னத்தை கிள்ளினார், காவேரி தொடர்பாக கூட்டம் நடத்தினார், இடைதேர்தல் மனுவில் கைநாட்டு வைத்தார், இன்று நள்ளிரவு குதித்தோடி திமுக அலுவலகம் வந்து கதவினை மிதிப்பார்..” என்றெல்லாம் அன்று சொல்லிகொண்டிருந்த அமைச்சர், இன்று சொல்கின்றார்

அதே ஜனகராஜ் ஸ்டைலில் சொல்கின்றார், “நாங்க பொய் சொன்னோம், ஜெயலலிதாவே யாருமே பாக்கல.. ஹஹ்ஹ்ஹ்ஹ்” என சிரிக்கின்றார்

எப்படிபட்ட கொடுமையும், அவமானமும் இது?

வாக்குக்காக ஆயிரம் பொய் சொல்வது அவர்களுக்கு கைவந்த கலைதான், ஆனால் மனசாட்சியினை கொன்றுவிட்டு, ஆளுநர் தனக்கு செய்த பிரமாணத்தையும் மீறிவிட்டு இப்படி பொய் சொல்லியிருக்கின்றர்கள் என்றால் இவர்களை எப்படி அந்த பொறுப்பான பதவியில் நீடிக்க அனுமதிக்க முடியும்?

ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது ஆளுநர் சென்று பார்த்ததார் என செய்திகள் வந்தன, இப்பொழுது ஆளுநர் பார்க்கவே இல்லை என மாநில அமைச்சர் சொல்கின்றார்.

மிஸ்டர் வித்யாசாகர் ராவ், பெரிய மீசை இருந்தால் மட்டும் போதுமா? இப்படி எல்லாம் பேசிகொண்டிருக்கும் அமைச்சர்கள், பொய் பேசும் அமைச்சர்கள் இருக்கும் அமைச்சரவையினை ஏன் விட்டு வைத்திருக்கின்றீர்?

ஆக நீங்களும் அமைச்சர் போல பொய் சொல்லியிருக்கின்றீர்களா? அதனால்தான் விட்டு வைத்திருக்கின்றீர்களா?

இன்னும் ஜெயாவின் உடல்நலம் பற்றி அறிக்கை கொடுத்த‌ ஏய்ம்ஸ் கல்லூரி மருத்துவர்கள் லண்டன் பெய்ல் இன்னபிற மற்றவர்கள் எல்லாம் எப்பொழுது ஜனகராஜ் ஸ்டைலில் நாங்க பொய் சொன்னோம் என சிரித்து மிரட்ட போகின்றார்களோ தெரியாது.

இனி “எதையும் தாங்கும் இதயம்” தமிழர்களுக்கு கண்டிப்பாக‌ வேண்டும், நிலமை அப்படி சென்று கொண்டிருக்கின்றது.