கிளைவ் சொல்கின்றான்

கிளைவின் வாழ்வினை படிக்கும் பொழுது சில விஷயங்கள் புரிகின்றது

ஒரு இடத்தில் அவனை லண்டனில் கேள்வி கேட்கின்றார்கள், இந்திய மக்களை தரகுறைவாக நடத்துகின்றீர்களாமே, மக்கள் அபிமானம் இல்லையாமே அப்படியா?

கிளைவ் சொல்கின்றான்

“இங்கிலாது மக்கள் மனநிலைக்கும், இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது

நாமோ அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி பிரிட்டன் என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் பொறுப்பாய் இருக்கின்றொம்

அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை. ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினை பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிசுமைகள் பற்றியோ கொஞ்சமும் இந்தியர் கவலைபடுவதில்லை

அவர்கள் நினைத்தால் நொடியில் அந்நாட்டின் தலைவிதியினை மாற்ற முடியும், ஆனால் செய்யமாட்டார்கள் சமூக பொறுப்பு இல்லை

நாம் இங்கிருந்து சென்று படைக்கு ஆள் திரட்டினால் கூட வருகின்றார்கள், நம்மையும் ஆளதகுதி உள்ளோர் என எண்ணுகின்றார்கள்

அவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்? ஏன் கொஞ்சம் கூட ஆள்பவர் பற்றி கவலையே இல்லை என்பது எனக்கு புரியவில்லை

நான் சில குற்றங்களை செய்ததாக சொல்கின்றீர்கள், ஆனால் இங்குதான் இவை குற்றம் இந்திய யதார்த்தபடி இது சாதாரணம்

லஞ்சம், ஊழல் இன்னபிற விஷயங்களை இந்திய அரசர்களும் அவர்களின் தளபதிகளுமே எனக்கு கற்று கொடுத்தார்கள்

அவர்கள் ஆண்ட வழியில்தான் நானும் அத்தேசத்து மக்களை நடத்தினேன், இந்தியாவில் என்மேல் துளியும் குற்றசாட்டு இல்லை

இந்தியரை யாரும் ஆளலாம், அவர்கள் மனநிலை வேறுமாதிரியானது, மக்கள் ஆட்சி மாண்பு மரியாதை எல்லாம் அவர்களுக்கு புரியாது

எவனும் ஆளட்டும் நான் சந்தோஷமாக வரிகட்டுவேன் என்ற மனநிலையுடைய மக்கள் அவர்கள், அதனால்தான் நான் ஆள்வதும் எளிதாயிற்று

ஆள்வோர் எவ்வளவு அயோக்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அந்த கவலை அவர்களுக்கு கொஞ்சமும் இல்லை

இந்தியரின் வாழ்க்கைமுறைபடி நான் செய்ததை லண்டனில் விசாரித்து தவறு என சொல்வது ஏற்க முடியாது”

300 வருடங்களுக்கு முன்பே இந்தியரை அழகாக கணித்திருக்கின்றான் கிளைவ், இன்னும் இந்தியா அப்படியே இருக்கின்றது

கொஞ்சமும் சமூக பொறுப்போ, ஆள்பவர் மீதான கோபமோ அக்கறையோ கொஞ்சமும் இல்லை

பிரதமரையும், முதல்வரையும் அவர்கள் வரிசையினை பார்த்தாலே அது புரிகின்றது

கிளைவ் அய்யா நீர் இருக்கும் திசை நோக்கி ஒரு வணக்கம்


கிளைவ் என்ன ஆனார் என பலர் கேட்கின்றார்கள்,

நிச்சயம் வருவார், விடுமுறை காலம் என்பதால் தாமதம் வேறு ஒன்றுமில்லை

யாரோ சிலர் குழுவாக சேர்ந்து பாகம்பிரியாளிடம் நம்மை நன்றாக போட்டு கொடுத்திருக்கின்றார்கள்,

“ஏம்மா அவனுக்கு வேலையே இல்லையா

ஆபிஸை விடு, கல்யாண பரிசு தங்கவேலு போல எங்கோ பார்க்கில் ஓசி விபியில் எழுதிகொண்டிருக்கின்றான் என்பது புரிகின்றது

ஆனால் வீட்டிலுமா எழுதுவான்? எப்படி உன்னால் சும்மா இருக்க முடிகின்றது, குஷ்பு புராணம் பாடுபவனை எப்படி அனுமதிக்கின்றாய், சனியனை பாத்திரம் விளக்க போடு” என்றெல்லாம் நன்றாக போதித்திருக்கின்றார்கள்

விளைவு சமீபகாலமாக கையில் குழந்தையுடன் வேளாங்கண்ணி மாதா போல இருந்தவள் என்னை புனித அந்தோணியார் கோலத்தில் நிறுத்திவிட்டாள்

கையில் குழந்தையினை வைத்துகொண்டு படிக்கவும் முடியவில்லை, வாசிக்கவும் முடியவில்லை

இப்பொழுது அவன் தூங்குகின்றான் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தால் இதோ அழதொடங்கிவிட்டான்

நிச்சயம் அவள்தான் அவனை கிள்ளிவிட்டிருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை