கிள்ளி வளவன் கதை

Image may contain: 1 person

காவேரி போராட்டத்தில் அதிமுக தின்றுவிட்டு போராட்டம் நடத்தினால், சில திமுக சில்லுண்டிகள் குவார்ட்டரும் பெண்களின் இடுப்பை கிள்ளுவதுமாக போராடியிருக்கின்றன‌

எவனோ ஒரு பெண்ணின் இடுப்பில் காவேரி கண்டு இழுத்திருக்கின்றான், அந்த அம்மணி பொங்கியாயிற்று

இதில் இருந்து ஆளாளுக்கு குஷ்பு இடுப்பை எவனோ என்றோ கிள்ளினான் என எழுதிகொண்டிருக்கின்றான்

எங்கே? அதே மதுரையில் ஜெயலலிதாவினை கிள்ளிய கதையினையும், கிள்ளியவனை ராமசந்திரன் “கிள்ளி வளவன்” போல தேடிய கதையினையும் எவனாவது எழுதுவானா என்றால் இல்லை

( தான் செய்ய வேண்டிய வேலையினை இன்னொருவன் செய்தால் விடுவாரா ராமசந்திரன் (அதாவது சினிமாவில் செய்யும் வேலை) பொங்கிவிட்டார்..)

ஜெயலலிதா என்றால் சொல்ல மாட்டார்களாம், குஷ்பு என்றால் சொல்லிகொண்டே இருப்பார்களாம்

இவ்வளவிற்கும் குஷ்பு சம்பவம் கட்டுகதை, அப்படி நடக்கவே இல்லை ஆளாளுக்கு கிளப்பிவிட்டார்கள்

ஆனால் ஜெயலலிதாவினை கிள்ளியது நடந்த சம்பவம், அதன் தொடர்ச்சி மதுரையில் நடந்த பெரும் மர்ம வரலாறு. தா.கிருட்டினன் கொலையினை விட மர்மமான விஷயம் அது

ஜெயாவினை கிள்ளியவன் என்ன ஆனான் என்பது தமிழகத்து மாபெரும் ரகசியங்களில் ஒன்று

முடிந்தால் அந்த ஜெயலலிதா கிள்ளல் கதையும், கிள்ளி வளவனாக பழிவாங்கிய ராமசந்திரனின் கதையினையும் எவனாவது எழுதுவானா?

இனி சங்கம் சும்மா இருக்காது என எச்சரிக்கின்றோம்.


என் வளர்ச்சியினை பிடிக்காமல் இடுப்பில் கிள்ளினார்கள் : பாதிக்கபட்ட ஜெயமணி

வளர்ச்சி பிடிக்காவிட்டால் தலையில்தான் தட்டுவார்கள், இடுப்பிலா கிள்ளுவார்கள்?

கிள்ளிவிட்டு வளர்ச்சியினை தடுக்க அவர் என்ன கீரையா?

ஆக அம்மணி இடுப்பு கிள்ளலை துடுப்பாக வைத்து அரசியலில் பயணிக்கபார்க்கின்றது.


எப்படியோ மாறன்களும், நெடுஞ்செழியன்களும் இருந்த திமுகவில் இப்போது “கிள்ளி” வளவனும் வந்துவிட்டார்.

அவர் “நலங்கிள்ளி” என திமுக மாவட்ட செயலாளரும், இல்லை அவர் “கொடுங்கிள்ளி” என பாதிக்கபட்ட பெண்ணும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

ஆக காவேரியினை மீட்க சென்றவர்கள் “கிள்ளி வளவனை” கண்டெடுத்திருக்கின்றார்கள்.

இனி என் காலை மிதித்தான் என ஒரு பெண் கிளம்பினால் “கரி காலனையும்” மீட்டு விடலாம்